பெ.தி.சுகுமார்.
10.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் -- 123
" பொழுது கண்டிரங்கல் "
●●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
இரங்கல் கண்டிடும்,
மாலைப் பொழுதினில்;
இரங்கல் தோன்றிடும்,
தலைவனைப் பிரிந்ததில்!
இரங்கந்தி இரங்கும்,
பெண்களின் காதலுக்கு;
இரங்கிக் கிரங்கிட,
இறுதியாய் நேருதே!
நேரும் மருட்சியின்,
மாற்றமது தோற்றமாய்;
நேருமுன் துணையும்,
எமையொத்து வாட்டுது!
நேருது சலிப்பும்,
ஏமாற்றும் கொடுமையாய்!
நேருது பனியும்,
படரும் இடரெனவே!
இடரும் மாலையில்,
தலைவன் இல்லாமை;
இடரும் கொலைக்களப்,
பகைவரை ஒக்கும்!
இடராக் காலைக்கு,
என்பங்கு எதுவாகுது!
இடரும் மாலைக்கு,
என்பங்கு இல்லையே!
இல்லையது தெளிவு,
மலர்விழி மாலையில்!
இல்லையது இன்பம்,
படர்ந்தபோ தில்லையே!
இல்லாத்தயரக் காதல்
நோயதும், விரிமலராய்;
இல்லையினாது
காலையரும்பிப் ,
போதாகிமாலை மலராகுதே!
மலர்ந்து காலையில்,
இசைத்திட்ட குழலோசை;
மலராது மாலையில்,
தீயெனச் சுடுவதால்;
மலர்ந்த ஏக்கமும்,
தாக்கித் துளைத்து;
மலர்ந்த பிரிவை,
கொல்படையாய் வாட்டுதே!
வாட்டும் சந்திப்பு,
இல்லா மாலையின்;
வாட்டும் மயக்கம்,
ஊருலகும் கண்டிடுது!
வாட்டும் சேர்பொருள்,
சாருயிர் காதலினால்;
வாடுதையல் மெய்நலம்
மாலையில் மாய்ந்திடுதே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக