விடுமுறை வியப்பு
...................................
கோடை விடுமுறை
நெருங்கி வருகையில்/
விடுமுறை நாளும் நாடி வருகையில்
கோடி இன்பம் கொள்ளை
கொள்ளும்/
உறவினர் ஒன்றாய்க்
கூடி மகிழ்வோம்/
சுற்றுலா சென்று
பலதும் அறிவோம்/
பலமொழி தேவை
என்பதை உணர்வோம்/
பல்கலாச்சாரம் கண்டும்
கொள்வோம்/
உலகின் படைப்பு
விந்தை என்போம்/
புதுமைகள் எல்லாம் வியப்பாய் இருக்கும்/
மனித மனங்களில்
கற்பனை வளரும்/
கற்றலும் இல்லை
மீட்டலும் இல்லை/
பள்ளியும் இல்லை
பரீட்சையும் இல்லை/
என்ன சொர்க்கம்
மூளைக்கு விடுமுறை/
வீட்டில் ஆரவாரம் கூடிச்
செல்லும்/
நித்திரை கொண்டிட
அதிகாலை
ஆகிடும் /
விழித்து எழுந்திட
மதியமும் ஆகிடும்/
சமையல் அறையில்
சமையல் குறையும்/
காடுதனை வீடாய்க்
கொள்வோம்/
நெருப்பில் வாட்டி
உணவை உண்போம்/
தரையே பாயாய்
மாறி விடுமே/
தரையில் படுத்து
ஓய்வும் எடுப்போம்/
கூச்சல் போட்டு நீச்சல் அடிப்போம்/
களைத்து விழுந்து வீடு வருவோம்/
விடுமுறை வியப்பு என்பதை உணர்வோம்/
ஜமுனாமலர் இந்திரகுமார்
சுவிற்சர்லாந்து




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக