09.10.20 - அத்தியாயம் 122 : கனவுநிலையுரைத்தல் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

09.10.20 - அத்தியாயம் 122 : கனவுநிலையுரைத்தல்

 



பெ.தி.சுகுமார்.



09.10.20


<><><><><><><><><><><><><>

   "" திருக்குறள் கவிதை"

     தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

         அதிகாரம் -- 122

" கனவு நிலை உரைத்தல் "

●●●●●●●●●●●●●‍●

<><><><><><><><><><><><><>


காதலர் பிரிவெண்ணிக்

கண்ணயரத் தூதுகண்ட;

காதலரின் கண்களுக்கு,

விருந்தென்ன கொடுப்பேன்!

காதலில் மயங்கிய 

கயல்மீன் கண்களதும்;

காதலாள் சொல்லேற்றுச்,

சற்றதும் உறங்குமே!


உறங்கும் சமயத்தில்,

தலைவர் வருங்கனவில்; 

உறங்காது வாழ்ந்திருக்கும்,

செய்தியைச் சொல்லுவேன்!

உறங்காத நனவில்,

அன்பில்லாத் தலைவரையும்;

உறங்கும் கனவில்,

காண்பதால் உயிர்க்கின்றேனே!


உயுரடன்று தலைவரைக்

கண்டு இன்புற்றேன்!

உயுருடன் கனவு,

கண்டின்று இன்புறுகிறேன்!

உயிர்க்கனவும் நனவும்,

எனக்கொன்று தான்!

உயிர்நனை நனவில்லை

என்றால் கனவில்லையே!


கனவில் காணும்,

தலைவர் பிரியார்;

கனவு மட்டுமிருந்து,

நனவதும் இல்லையேல்!

கனவில்லா நனவில்,

அன்பூட்டாக் கொடியவர்;

கனவில் வந்ததெனைத்,

துன்புறுத்துவ தேனா!


ஏனோ என்

தலைவர் தழுவுகிறார்;

ஏனென்று கூறாது,

உறக்கத்தில் தோள்களை!

ஏனோ விழிப்பினில்,

நெஞ்சடைந்து தங்குகிறார்!

ஏனோ பழிக்கிறார்,

அறியாதார் கனவின்பமே!


கனவுகாண் இன்பமறியாதார், நனைவின்ப மில்லையென;

கனவினை ஒதுக்கிப், 

பழியினைப் பேசுகிறார்!

கனவில்லா நனவில்,

அவர் என்னை;

கனவாக்கிப் பிரிந்தார்,

என்று இழிக்கின்றாரே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages