அருணா ரகுராமன்
23.10.20
நானிருப்பேன் உன்னோடு
****************************
கண்களாக நீ இருந்தால் அங்கே/
கண்ணின் கருமணியாக நான் இருப்பேன் /
கருத்தினில் உறவாடி தினம் உனக்குக்/
காதல் கவிதைகள் படித்து இருப்பேன் /
உள்ளத்தோடு உறவாடி உயிராக அங்கே /
ஊக்கமாய் உள் உணர்வாய் எண்ணமாய் /
நீக்கமற நிறைந்து நினைவாய் தெளிவாய் /
ஒவ்வொரு மூச்சிலும் பேச்சிலும் நிறைந்து /
உன்னோடு தானிருப்பேன் உறுதியுடன் உடனிருப்பேன் /
கண்மூடிக் களைத்து உறங்கும் வேளையிலும் /
கண்ணா உன்னை நான் நீங்காமல் /
கனவினிலும் நனவாகக் காவலுக்கு விழித்திருப்பேன் /
இன்னல்களில் நீங்காது எதிர்பார்ப்பில் வாழாது /
கண்ணில் நீரைக் காட்டாது என் /
கவலை ஏதும் கூறாது என்றும் /
உன்னை எ ண்ணி உனக்காக வாழ்த்திருப்பேன் .
அருணா ரகுராமன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக