காத்திருப்பு
...............................
கொளுத்த மீனுக்காய்
கொக்கும் வாடியது/
வாட்டம் கண்ட
புலவரும் கவிவரையலானாரே/
வரைந்த கவி
உணர்த்திடுது பொறுமையின் எல்லையை/
ஓடு மீன் ஓட
உறு மீன் வருமளவும்
வாடியிருக்குமாம்
கொக்கு/
மூதுரை வடிவமாய்
ஔவையும் உரைத்தனள்/
பொறுமையின்
பெறுமதி யாவரும்
கற்றனர்/
கற்றவர் யாவரும்
கொக்கினை
மறந்திடார்/
மறந்திடா திருந்திடில்
கொக்கே வலியதாம்/
வலியது பொறுமையே
என்பதும் தெளியுமே/
தெளிவது வந்திடில்
புரிந்திடும் கருவுமே/
ஜமுனாமலர் இந்திரகுமார்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக