16.12.20-கதையின் பெயர் : வெள்ளத்தாயி - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 16 டிசம்பர், 2020

16.12.20-கதையின் பெயர் : வெள்ளத்தாயி



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


வெள்ளத்தாயி (சிறுகதை)


வெள்ளத்தாயிக்கு பொழப்பு அன்னாடம் மொத்தவெலைக்கிவாங்கி வீடுவீடாக் கொண்டுபோயி விக்கிறதுதான் . காலையில் ராவுத்தர் வாழத்தோப்புக்குப் போனா வாழப்பழம் வாழ எலை வாழப்பூ கெடைக்கும். அவருசொல்லுவாரு  எடுத்துட்டுப்போதாயி. இல்லாதவுகளுக்கு ஒதவுனா இறைவனுக்கு ஒதுவுறது மாதிரிதான். எடுத்துட்டுப்போயி வித்துட்டு கொண்டாந்து காசுகுடுத்தாப்போதும்பாரு


வாங்குறப்ப கூடக்கொறையப் போட்டுவிடுவாரு. காலையில் சூடா ஒரு வாய் காப்பித்தண்ணியும் செலநேரம் கெடைக்கும். தங்கமான மனுசன் அவருபீவிரசியாபேகம் ஆதுக்கு ஒருபடிமேல, ஆத்தான்னுதான் கூப்புடும். வீட்டுல விசேசம்ன்னா மறக்காம சாப்புடவந்துரு ஆத்தான்னு கூப்புடும் . தலவாழ எலபோட்டு பலகாரம் எல்லாம் குடுக்கும்


விசேசநாளுகல்ல கெடாக்கறியோட சாப்பாடும் குடுக்கும். கைமாத்துக் கேட்டாக்குட குடுத்து வாங்கும். வட்டிகிட்டி கெடையாது. ஆனா அளவாத்தான்குடுக்கும்அளவுக்கு மிஞ்சின எதுவும் நெலைக்காது ன்றது பீவியோட கொள்கை. அதுனால கறாராச்சொல்லிப்புடும்.லிமிட்டு இம்புட்டுத்தான்னு


வெள்ளத்தாயி அங்க சரக்கெடுத்துப்புட்டு தலையில கூடையில தூக்கிக்கிட்டு கம்மாக்கரை வழியா பக்கத்து ஊருல வந்து வீடு வீடா விக்கும். அப்புறம் அந்தக்காச எடுத்துக்குட்டு பக்கத்துட்டவுனுல போயி ஆரஞ்சு பழம் கொய்யாப்பழம் சமயத்துல சின்ன வெங்காயம்ன்னு மொத்த வெலைக்கி வாங்கி மத்தியானத்துக்குமேல ஊருவந்து சேரும் அத ஊருல வீட்டு வீட்டுக்குக்கொண்டுபோயி விக்கும்


இதுல மீந்துபோறதெல்லாம் பெரும்பாலும்ராவுத்தர் வீட்டுக்குப்போயிடும் ஒரு வெலையப்போட்டு குடுத்துடும்  அது ஒப்புக்குத்தான் 

 செலநேரம் கம்மாயில புடிக்கிறமீனு வாங்கி அதகொண்டாந்து ராவுத்தர் வீட்டுல குடுக்கும். அத பேகம் வாங்கிக்கும் . அன்னிக்கி வாய்ப்பிருந்தா வெள்ளதா யிக்கும் மீன்கொழம்பு சாப்பாடு உண்டு


ராவுத்தரு அதே கம்மாக்கரை வழியா மார்க்கெட்டுக்கு அப்ப அப்ப ப்போவாரு ஏன்னா அங்க தான் சுல்த்தான் பாய் கறிக்கடை வைச்சிருந்தாரு இவருக்கு அங்க தனிகவனிப்பு. நல்ல எளங்கறியா வெள்ளாட்டங்கறி கெடைக்கும்


வெள்ளத்தாயிக்கு சொத்துன்னு ஒன்னும் கெடையாது ஒரு குடிசவீடு பொறம்போக்கு நெலத்துல, அப்புறம் காதுல ஒருபவனுக்குதோடு கையில் பித்தள மோதரம் அம்புட்டுதான் சொத்து


தெனம் கம்மாக்கரையில வெள்ளனாப் போகும் மத்தியானம் வரும் .அப்ப ஆள் நடமாட்டமிருக்காது . அந்த ப்பகுதியில கொஞ்சம் களவும் நடக்கும்.. அப்புடி ஒருகளவாணிப்பய ரொம்பநாளா நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தான் வெள்ளத்தாய காதுல கெடந்த தோடு அவனுக்கு உறுத்துச்சு. சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தான்


ஒருநா சரியா மாட்டுச்சு அன்னிக்கி வழக்கம்போல சந்தையில இருந்து வெள்ளத்தாயி கம்மாக்கரையில வந்துக்கிட்டு இருந்துச்சு . அந்தக் களவாணிப்பய அன்னிக்கி மேல மடைக்கிக்கீழ ஒழிஞ்சிருந்தான் வெள்ளத்தாயி தனியா வாரதப் பாத்துட்டான் .இன்னிகைவச்சிட வேண்டியதுதான்னு காத்துருந்தான்,


வெள்ளத்தாயி மேலமடை கிட்ட வந்ததும் (உள்ளூருக்குள்ள அடையாளம்தெரிஞ்சிடுமுன்னு) மூஞ்சிய கருப்புத்துணியக் கட்டிக்கிட்டுக் கத்தியோட எதிரில நின்னான். சைகைல சொன்னான் (பேசுனா இன்னாருன்னு தெரிஞ்சிடுமாம்)காதுல இருக்குறதோடக்கழட்டச்சொல்லி மிரட்டுனான்


வெள்ளத்தாயி ஒண்ணும் ஏப்பசாப்பயில்ல .போடா முடியாதுன்னுனான் அவன் சொன்னா காதுபோயிடுமுன்னான் வெள்ளத்தாயி அசரல முடிஞ்சதப் பாத்துக்கோன்னா. அவன் கத்திய வைச்சிக்காதோட தோட எடுக்கவீசினான் இதுல வெள்ளத்தாயி கழுத்துல பட்டுருச்சு அம்புட்டுத்தான் வெள்ளத்தாயி கழுத்து அருபட்டுப்போச்சு, அவனுக்குப் பயமாயிருச்சு கொலக்கேசாகப் போகுதுன்னு.


அதுக்குள்ள ஆரோ வாரமாதிரி இருந்தவன்ன ஓடிட்டான்வந்தவரு வேற யாருமில்ல ராவுத்தருதான், நெலமையப்புருஞ்சிக்கிட்டு அந்தப்பக்கமா வந்த வண்டில ஏத்தி ஆசுப்பத்திரிக்கிக்கொண்டுபோனாரு


அங்க ரத்தம் ரொம்பப்போயிடுச்சு ரத்தம் வேணுமுன்னாக, இவருக்கு பிரசரு அதுனால எடுக்கமாட்டீன்னுட்டாக, சுல்த்தான் பாய்கிட்ட வெவரத்தச் சொன்னாரு அவரு ஆளுகளோட வந்து ரத்தம் குடுத்தாரு. கட்டுப்போட்டு பெட்டுல சேத்து ரத்தமெல்லாம் குடுத்தவன்ன வெள்ளத்தாயி மறுநா கண்ணு தொறந்துச்சு.


எப்புடி இங்க வந்தோமுன்னு தெரியல ராவுத்தரு வீட்டுக்குப்போயிட்டாரு

 கொஞ்சநேரத்துல சுல்த்தான் வந்து பாத்துட்டு வெவரத்தச்சொன்னாரு

 நாம கும்புடுற கருப்புதான் ராவுத்தர அங்க அனுப்பிருக்குன்னு கும்புட்டுச்சு சாமிய,.....


அப்ப ராவுத்தரு பீவியோட வந்தாரு வீட்டுல இருந்து கஞ்சிவைச்சிக் கொண்டாந் திருந்தாரு. பீவி வெள்ளத்தாயப் பாத்தவன்ன அழுகைய அடக்கமுடியல ஒன்னையப்போயி இப்புடிப்பண்ண அந்தக்களவாணிப்பயலுக்கு எப்புடி மனசு வந்துச்சு ,அவன் கைல கெடச்சா கைய வெட்டனும் ந்னுச்சு, வெள்ளத்தாயால பேசமுடியல கண்ணு கலங்கிடுச்சு கையெடுத்துக்கும் புடுறதத்தவிர வேற ஒண்ணும் பேசமுடியல


ஆனா அந்தக்கண்ணீர் ஆயிரம் விசயங்களை சொல்லிச்சி.


அப்ப ராவுத்தர் சொன்னாரு நீ என்ன சொல்லவாரன்னுதெரியுது. இதுக்கெல்லாம் எப்புடி நன்றிசொல்லுறதுன்னுதான,

 இது மனுசனுக்கு மனுசன் செய்யிற ஒதவி இதச் செய்யிறவன் தான் மனுசன்னாரு,

 வெள்ளத்தாயி கண்ணீர அடக்கமுடியல அது வழிஞ்சி ஓடுச்சு.....


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages