18.07.21-மரபுக் கவி பயிற்சி-பாடம்-1 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 18 ஜூலை, 2021

18.07.21-மரபுக் கவி பயிற்சி-பாடம்-1

 

சு.ரவி




மரபுக் கவி எழுதுவோம்


பாடம் 1


மரபுக்கவி எழுத விழைவோர் அறிய வேண்டிய அடிப்படைகள்:

அசை:  ஒரு சுவரெழுப்ப எவ்வாறு செங்கற்கள் தேவையோ அதுபோல் ஒரு வார்த்தையின் அடிப்படை உறுப்பே அசை எனப்படும்.

அசைகளால் உருவாவது சீர்.

1,ஓரசைச் சீர்: இது இரண்டு வகைப்படும்.

1.1நேரசை: ஒரு குறில், அல்லதுஒரு நெடில் தனித்தோ, ஒற்றடுத்தோ வருவது நேரசை.உ-ம்: ப, பண், பா, பால் இவை நேரசையாகும்.

நிரையசை: இரண்டு குறில்கள் இணைந்தோ அல்லது ஒரு குறிலைத்தொடர்ந்து நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வருவது நிரையசை ஆகும்.

பல,பலர், கலா,  கலாம் இவை நிரையசை ஆகும்.

இவை முறையே ‘நாள்’, ‘மலர்’ என்ற வாய்பாடுகளால் குறிக்கப்படும்.

1.2. ஈரசைச் சீர்கள்;

        நேரசையை ‘ அ’ என்றும், நிரைஅசையை ‘ இ’ என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது இரண்டு அசைகள்

கீழ்க்கண்டவாறு இணையும்:

அ -அ, இ-அ,அ-இ, இ-இ

அதாவது,

நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை

(உ-ம்)

கந்தா, கடம்பா, முருகா, அருள்புரி

இவற்றின் வாய்பாடுகள் முறையே

தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் 

முதலிரண்டும் “மாச்சீர்கள்”

என்றும் பின்னிரண்டும் “ “விளச்சீர்கள்” என்றும் அழைக்கப்படும்.

பயிற்சி:

கீழ்க்கண்ட சொற்களை என்ன அசை என்று குறித்து, அவற்றின் வாய்பாடுகளை எழுதவும்.

வா, சிலர், கண்ணன், ராதை, ஜானகி, காதல், திருமணம், இதுவா, இலக்கணம்

( அடுத்த பாடம்: மூவசைச் சீர்கள்)

அன்புடன்,

சு.ரவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages