Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 639 | ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே// வாடுதம்மா எம்மனசு தேடுதம்மா வஞ்சியவளை// போகுதம்மா என் உசுரு காற்றோடு // தேடித் தான் வருவாளோ , போன// என் உசுர திருப்பித் தருவாளோ // உடுமலை சே.ரா . முஹமது | |
2 | 344 | சோளக்காட்டு ஓரத்திலே கூதற்காற்று வீசுகையிலே சோடிக்கிளி தேடி வந்த பச்சைக்கிளி ஓரக்கண்ணால் ஒய்யாரமாய்ப் பார்த்த படி ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையாகப் போகுதடி என் நெஞ்சும் கூட வேகுதடி! #எமா# | |
3 | 745 | ஒத்தையடிப் பாதையிலே நடந்து போகையிலே/ வாய்க்காலில் ஓடும் தண்ணீரும் தோட்டத்தில்/ விளைந்த பயிர்களுமே கண்களுக்கு விருந்து/ வீசுகின்ற காற்று மேனியும் சிலிர்த்திடும்/ இயற்கையை இரசிக்கக் கொடுத்து வைக்கணும். க.சுலோஜனா | |
4 | 462 | ஒத்தையடிப்பாதை இது இல்லை என்பேன்/ மனதை ஒன்றாக்கும் மாயப்பாதையாய்த் தெரிகிறதே/ உலகின் மொத்த அழகும் தெரிகிறதே/ மகிழ்ச்சியை அள்ளித்தரும் மாயமிதுவோ/ வாருங்கள் கவலை மறந்துகளிப்புறுவோம் தயா | |
5 | 240 | ஊர் செல்லும் அழகிய பாதை// திசை மாறிய புதிய பயணம்// தென்றல் காற்று வீசுகிறது எந்தன்// நெஞ்சிலே புத்துணர்ச்சி நடையில் தடுமாற்றம்// தொடர்ந்து வருமோ வயல்களும் வழியெங்கும் // உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
6 | 201 | ஒத்தையடிப் பாதையில ஒத்தையில போறவளே/ தனியனா நிக்குறேன்டி தங்கமே வாடிபுள்ள/ ஆத்தோரம் மீன்புடிச்சு ஆக்கியே தின்னுடலாம்/ வேகாத வெய்யிலிலே வெந்து தவிக்கிறேன்டி/ வந்தாலே சிலிர்க்குமடி வாசமான ரோசாவே// புவனா சற்குணம் கனடா | |
7 | 283 | ஒத்தையடிப் பாதையிலே மாமன்மகள் போறபுள்ள/ சுத்திவந்து என்மனசை சொக்கவைக்குறாய் புள்ள/ கன்னக் குழியால குடெஞ்சு விழுத்துறியே/ குயிலும் கூவுகையில் குயில்ப்பாட்டுப் பாடுறியே/ கனவுல நீவந்து கனிவாப் பேசுறியே/ ஜமுனாமலர் இந்திரகுமார் | |
8 | 692 | ஒத்தையடிப் பாதையில நடந்து வரும்/ வேளையில மொத்த உசுரும் போகுதடி/ ஒன் நெனைப்பில் ஏங்குதடி! சலசலத்து / ஓடும் நீரோடையா அசைந்து வரும் / தேரழகில் மங்களமே! அங்கமெல்லாம் குளிருதடி/ முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு | |
9 | 747 | ஒத்தையடி பாதையிலே ஒத்தையா போகையிலே// அத்தமக நெனப்பே அனலாக் கொதிக்குதடி // அன்னமே வந்திருடி ஆனந்தம் தந்திடுடி// உயிரே போனாலும் உன்னேசம் மாறாதடி// சம்மதம் தந்துவிடு சந்தோசதில் வாழ்ந்திடலாம்// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
10 | 259 | வளமான பயிர்கள் தென்றலில் அசைந்தாட.../ வண்ணப் பறவைகள் கானம் இசைத்திட.../ வரப்பு நீர் வழியில் சலசலத்திட.../ கஞ்சிக் கலயங்கள் மரக்கிளைகளில் தஞ்சமாகிட.../ மங்கையர் ஒய்யாரமாக நடக்கின்றனர் களையெடுத்திட...!!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
11 | 238 | பலபேர் நடந்துசெல்ல பாதையது உருவாகும்../ கவனமாகக் கடந்திடவே தொலைவோ குறைவாகும்../ நல்லவற்றை உரிமையாக்க நாகரீகம் அறிந்திடனும்../ வழிதவறிப் போகாமல் வாழ்க்கை செழிப்பாகனும்../ சிந்தையிலே சேர்த்திட்டால் சேருமிடம் அண்மையாகும்..// #இளந்தை சேது | |
12 | 256 | ஒத்தையடிப் பாதை இருமருங்கும் வயல்கள்/ ஒன்றிப் போகணும் ஒதுங்கி வழிவிடணும்/ முந்த நினைப்பது இடையூறைக் கொடுக்கும்/ வழிவிட மறுப்பதும் வாழ்வினைக் கெடுக்கும்/ உறவாய்ப் பழகி உயர்வோம் வாழ்வில்/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
13 | 614 | வரப்போரம் அவள் நடந்து வருகையிலே/ கொலுசு சத்தம் நாதமாய் ஒலிக்கிறது/ தலையில் சுமந்து வரும் போணியிலே/ உள்ளிருக்கும் மீன் குழம்பின் வாசம்/ நாவில் எச்சில் ஊற வைக்குது/ விஜயலட்சுமி | |
14 | 715 | ஒத்தையடிப் பாதையிலே ஓரமாப் போறவளே சிட்டாப் பறக்கும் சில்வண்டைப் பார்த்தாயா தொட்டா மினுங்கும் செம்மேனியைத் தேடுதே உட்கார்ந்து கொஞ்சம் பேசுனா என்ன பயப்படாதப் புள்ள மாமன் விரதம். அ.உமர்பாருக் | |
15 | 348 | மல்லிப்பூ வாசமா சாரல் வீசையிலே // பேச்சிலே சொக்கி சிலம்புறத கேட்டீகளா // ஏலம் பறிக்கும் ஒத்தயடிப் பாதையிலே // தளிரைக் கொறிக்கும் வெள்ளாடு போல // ஆரவாரமா காத்திருக்கா பேச்சியம்மா மருமகள் // உடுமலை ராமர் | |
16 | 465 | ஒத்தையடி பாதையிலே ஓடிக் கொண்டுள்ளேன் செத்து மடிகின்ற சிந்தனை மனதுடனே மதத்தின் திணிப்பு மனிதம் அறுக்குது இனத்தின் ஆளுமை எண்ணம் மாய்க்க என்னத்தை சாதிப்போம் இருந்து இங்கே..? இரா.வெங்கடாசலம் | |
17 | 254 | ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாய் நடைநடந்து/ அத்தைமகள் போறாளே நான்வருவது தெரியாமலே/ பச்சை வயலெங்கும் தலையசைத்து ஆடும்/ இச்சையால் எம்மனசு வளையபட்டி தவிலாகும்/ திருவிழா செய்சங்கர் நாதசுரம் ஆலாபனையாகும்/ கி..மா.கனகராசன். சூலூர். | |
18 | 734 | ஒத்தையடிப்பாதையிலே ஒதுங்கிநீ போகையிலே ஒய்யாரமாய்நான் வந்தா ஒதுங்கிநீ போறேயடி... ஒத்துக்கொள் நீ எனக்கே ஒருபோதும் மறுக்காதே என் மாமா மகளே...... ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன் | |
19 | 224 | ஊருக்கு நடுவிலே ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரக் கொண்டையுடன் அத்தைமகள் போறாளே காடுகழனி செழித்திருக்க கன்னியவள் விழித்திருக்க கல்யாண சுபவேளை களைகட்டி வந்திடாதோ/ அறுவடை முடியட்டும் பரிசம் முடித்திடுவோம்
✍🏻க.குணசேகரன் | |
20 | 450 | சுத்திமுத்தி பாத்தப்படி மாந்தோப்பை ரசிச்சப்படி/ ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையாக நடக்கையிலே/ மறைஞ்சிருந்த மச்சானும்/ என்னெதிரே நிக்கையிலே வெக்கத்திலே நானும் பாதையைத்தான் பாக்கையிலே சட்டுனு அணைக்கையிலே பரவசத்தை என்னசொல்ல! ரேணுகா சுந்தரம் | |
21 | 749 | வயலும் விளைஞ்சிருக்கு வக்கடையும் திறந்திருக்கு வஞ்சியவள் நினைப்போடு வழிபார்த்துக் காத்திருக்கேன் அஞ்சுகமே வந்து விடு அள்ளி உன்னைத் தந்து விடு வீசுகிற தென்றலும் வீறுகொள்ள வைக்குதடி ஓடியே வந்து விடு ஒத்தையடிப் பாதையிலே க.மூ.முகம்மது றிஸ்மி, இலங்கை. | |
22 | 476 | ஒத்தையடிப் பாதையிலே உன்னினைப்பில் போகையிலே/ உவப்பில் சிரிக்கையிலே உரசிப் போனதடி/ விசமமாப் பாத்ததடி வேலியோர ஓணான் / கள்ளிப் பூவும் கண்விழித்து மலர்ந்ததடி/ கண்மணி நீயிருந்தால் கலகலப்புக் கூடுமடி/ பரிமளாதேவி | |
23 | 345 | ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாக நடப்பவளே. காதோடு தோடுகள் களிநடனம் புரிகிறதே. காலோடு கால்சலங்கை இசையும் இனிக்கிறதே மேகக்கூந்தல் இடையைத்தாண்டி இனிமையாக அசைகிறதே. என்னிரு விழிகளும் விழுங்க துடிக்கிறதே. வைர. நாகராசன். | |
24 | 710 | 1. பச்சைக் கம்பளமாம் வயல் வெளியில்/ 2. கண்ணுக்கு விருந்தாக பசுமைக்குப் பைங்கிளியும்/ 3.பொய்யோ எனும் இடை அசைத்து/ 4.ஒத்தையடிப் பாதையிலே ஒயிலாக வாறாளே/ 5. எனக்கு அடங்காத என் ஆத்துக்காரி/ ஸ்ரீகுமார் அம்பிகா | |
25 | 617 | பழைய நினைவுகள் நெஞ்சில் வந்ததே!// காட்டுல மேட்டுல உன்னோடு நடக்கையிலே!// உள்ளத்து கனவுகளை உதட்டில் சொன்னேனே!// உறுதி தந்தாயே ! உண்மையைச் சொன்னாயே!// காத்திருந்தேன் உனக்காக ஒத்தையடிப் பாதையிலே!// முதுவைமுகம் | |
26 | 580 | ஒத்தையடிப் பாதையிலே ஓடிடும் தமிழினமே// கொத்துக் கொத்தாக கயவர்கள் காலடியில்// செத்து இங்கே நாம் வீழ்ந்திடினும்// முத்தான தமிழனின் மூச்சினில் நிறைந்தது// சொத்தான தமிழும் சமத்துவ நீதியுமே// சுந்தரலிங்கம் நிருத்திகன்.,அல்வாய். | |
27 | 409 | அத்தை மகள் நினைவோடு ஆசை// மைச்சான் நானும் இங்கே ஒற்றையடிப்// பாதையிலே சத்தமின்றிப் பொன வேளை// வெள்ளம் பாயும் வாய்க்கால் வயலின்// நடுவே சறுக்கி விழுந்து விட்டேன்// ************** க.சுதர்சனக்குரு. | |
28 | 605 | பச்சைப் பட்டுடுத்திப் புவிமகளும் சிரித்திருக்கப் / பச்சைப் பசுங்கிளிகள் பக்குவமாய்ப் பண்ணிசைத்து / இச்சை தீர்க்கின்ற இன்பராகம் பாடிடவே / மொத்தமாய்க் கொல்லுதடி மோகனமே உன்னழகு / ஒத்தையடிப் பாதையிலே உனக்காகக் காத்திருக்கேன். மஞ்சுளா ரமேஷ் | |
29 | 721 | ஒத்தையடிப் பாதையிலே தத்தையவள் போகையிலே பெத்தவங்க மனசெல்லாம் பெண்ணவளின் நடைமேலே தலைகவிழ்ந்த கதிர்போல தரணியிலே நடக்கனுமாம் பாதையிலே கண்வைத்து பருவமதைக் கடக்கனுமாம் மணமேடை ஏறும்வரை மனசைப் பழக்கனுமாம். :::::: பாலு தியாகராசன்::::::: | |
30 | 483 | அழகிய அன்னமென அத்தைமக நடந்துவந்தா/ பழகிய ஒத்தையடிப் பாதையிலே! அன்றுதான் /2 எழிலாச்சு ஒயிலாச்சு என்விழியில் அப்பாதை/3 கல்யாணம் பண்ணிக்கிட்டு கைகோர்த்து அவளோட/4 செல்லாத இடம்நோக்கிச் செல்லத்தான் என்னாசை//5 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
31 | 746 | வஞ்சியுன்னைக் கொஞ்சிடவே என்னுசிரு துடிக்குது/ வாடக்காத்து வீசையில ஏமனசு கூசுது/ வாயாடிப் புள்ள வாவேன்டி என்னருகே/ ஆத்துமேட்டுத் தோப்புக்குள்ள அந்தமகன் நானிருக்கன்/ ஒத்தையடிப் பாதையால ஓரமாக வந்துவிடு/ --- மௌஜீத் ஏ ஹசன்--- | |
32 | 588 | ஒத்தையடிப்பாதையிலே! தனியா நான் ஒருவன் நிற்கையிலை!..// என்னைச் சூழ்ந்த பசுமையெல்லாம் பட்டு போனதா தெரியுதடி!// பக்கத்தில் நீ இல்லையடி பாழும் மனது தவிக்குதடி! // முடிவில்லா ஒற்றைப் பாதை மூன்று முடிச்சால் முடியுமடி! // முறைப்பெண்ணே! யென்னை முறையாக நீ மணந்தால், // பஞ்சடைந்த யென் கண்கள் பசுஞ்(ம்) சோலை காணுமடி! // ~~~பாரிஉமா. சர. | |
33 | 475 | பச்சைப் பசேலென்ற பாதையும் தெரியுதே/ நச்சென்றுக் கால்கள் நடக்கவும் தோணுதே/ ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாய் சென்றேனே/ சித்தமும் மகிழவே சிலாகித்து நின்றேனே/ தென்றலும் என்னைத் தழுவியும் போனதே/ தங்க.ஜான்பீட்டர் | |
34 | 613 | ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையா போறவள/ நில்லு கொஞ்சம் நானும் வாறேன் ஆசையா நாளுவார்த்தைப் பேசிகிட்டு போவோமே/ கண்டாங்கிச் சேலையில அழகாதான் இருக்கேடி/ மல்லிகை வாசம் மடிமீது இழுக்குதடி// ஜெயாசந்திரமோகன் | |
35 | 716 | ஒத்தயடிப் பாதையிலே வித்தைக்காட்டிப் போறவளே //1 அத்தமகன் நானிருக்கேன் முத்தமொன்றுத் தாராயோ //2 கஞ்சிக்கலயம் தூக்கிக்கிட்டு களத்துமேடு போறவளே //3 கொஞ்சிப்பேசி மகிழ்ந்திடவே கூடக்கொஞ்சம் வாராயோ 4 வந்தென் நெஞ்சுக்குள்ள மையங்கொள்ள மாட்டாயோ //5 - நாகை. ஹாஜா | |
36 | 636 | தத்தித் தாவும் குயிலின் குரல்! தெத்திப் பாயும் நீரின் சுழல்! காற்றில் ஆடுகின்ற பச்சைப் பயிர்கள்! கண்களைக் கவர்கின்ற நெற்கதிர் மணிகள்! ஒத்தையடிப் பாதையிலே தத்திவரும் நினைவலைகள்! சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி | |
37 | 726 | பச்சைப் பட்டாடையிலே பூமாதேவி சிரிக்கிறாள்/ காண்பவர்கள் கண்களையும் பசுமையாக உருமாற்றுகிறாள்/ பரப்பிலே படர்ந்த அருகம்புல் மாலையாக/ அருகிலே பூக்கள் அர்ச்சனை தூவ/ ஒற்றையடிப் பாதையில் தாய் தவமிருக்கிறாள் --காளிராஜ்பாலகணேஷ் | |
38 | 652 | புல்லுக்கு நடுவே சிறு இடைவெளியே!/ காலுக்கு மட்டும் அது வழியே!/ நடந்துதான் கடந்திடனும் இவ்வழி பாதையை/ எதிரே வந்தால் தடம் மாறிடுமே!/ பக்குவம் இல்லையெனில் பாதை தடுமாற்றம்தான்/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
39 | 574 | ஒத்தையடிப் பாதையில் நித்தமும் நினைவுகள் / முட்களாக தைக்க இதயம் வலிக்கும்/ ஒப்புரவு இன்றி ஓரமாய் நின்று/ காதல் கல்வெட்டில் கவிவடித்த காலங்கள்/ கானலாய்க் கரைந்து கண்களில் பொங்கும் ./ துரைராசா காண்டீபன், திருக்கோவில் . | |
40 | 707 | ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமா போறவளே/ உன்னநெனச்சு காத்திருக்கேன் என்னக்கொஞ்சம் பாரேண்டி/ ஒருவாட்டி பாத்துப்புட்டா உனக்கென்ன கொறஞ்சிருமோ/ உனக்காக காத்திருந்தா உம்மனசு நெறஞ்சிருமோ/ கண்ணிலே சொல்லடி காதலித்துக் கொல்லடி/ ✍️பா.ச.கண்ணன் | |
41 | 210 | ஒத்தையடிப் பாதையிலே ஓடைத்தண்ணி ஓடயில../ அத்தைமக நினைப்பில பித்தனாக ஆனேனே.../ மாமான்னு கூப்பிட்டால் மனசெல்லாம் நிறஞ்சிடுமே..../ ஏம்மான்னு கேட்டிடவே மனசுமிங்க தவிக்கையிலே.../ வயலோரம் புதுநாத்தும் தலையாட்டி மகிழுதே..../ திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
42 | 399 | 👣/ ஒத்தையடிப் பாதையிலே அத்தைமகள் நடக்கையிலே!.../ 👣/ அத்தான் மனசை கொக்கிப் போட்டவளே!.../ 👣/ கொத்தித் தின்றவளே அழகான ராட்சசியே!.../ 👣/ சொல்லத் தெரியவில்லை உன்னழகை வர்ணிக்க!.../ 👣/ கவிஞனென்று வெளியிலே சொல்லிட வெக்கமே!.../ --சாக்கை.பொன்னழகு. | |
43 | 373 | வயக்காடு வரவேற்க நெற்கதிர் முத்திருச்சு கிராமத்துக் கிளியே வாறானே மாமன் ஒத்தையடிப் பாதையில் உக்காந்து பேசலாமே இதமான காற்றோடு இளந்தென்றல் வீசிட கையோடு கைசேர்த்து நாளெல்லாம் இருப்போம்!!! ஜயந்தினி வாகீசன் | |
44 | 727 | இருபுறமும் நெல்வயலு நடுவில் வகுடெடுத்தே // ஒத்தையடி பாதையில பல்லிளிக்கும் நெல்மணிகள் // நீண்டுருக்கும் வழிநெடுக்க பச்சைசேலை உடுத்தியச்சோலை// கொக்குகள் பறக்கும் பசுமையான வயற்க்காடு // வீசும் தென்றலில் நாணும் நாணல்கள் // சுசி. | |
45 | 280 | ஊரோடு உறவாடி ஒத்தையடிப் பாதையிலே// வரிசையாய் போகயிலே மச்சான் தொடர்ந்தால்// மனசு நெறஞ்சிடும் பயமும் நீங்கிவிடும்// வரப்புத் தாண்டி வழுக்கி விழுந்தால்// மலையான தோளில் மரபோடு தாங்கும்// கோட்டீஸ்வரி ராமசாமி | |
46 | 668 | வயலிலும் வரப்பிலும் வழுக்கிடா கால்கள்/ ஒத்தையடிப் பாதையிலே வஞ்சி யுன்னைக்/ கண்ட நேரமுதல் காலோடு மனதுமே/ வழுக்கி காதலால் வீழ்ந்திட கரத்தை/ பிடித்திடு வீழாமல் இணைந்தே வாழ்வோம்/ ஏஞ்சல்சோபிதா | |
47 | 434 | மலரும் நினைவுகளில் மூழ்கிய மனதோடு/ மங்கையின் காதலைச் சேமித்த விழிகளோடு/ ஒத்தயடிப் பாதையிலே ஓடிவரும் வேளையிலே/ தாவணியில் வந்தாயடி புள்ளிமானாய் என்னெதிரே/ வாயற்ற ஊமையாய் நின்றேனே உன்னெதிரே// மீனாட்சி சுந்தரம் | |
48 | 618 | ஒத்தையடிப் பாதையிலே தன்னந் தனியே/ ஒய்யார நடை நடந்து செல்பவளே/ ஓரக் கண்ணால் பார்த்து முறைப்பதேனோ/ ஒரு வார்த்தை சம்மதம் சொல்லிவிடு/ ஓரமாய்க் கூடவே வருவேன் துணைக்கு/ ஔவை. | |
49 | 562 | இயற்கையன்னை மடியினிலே தவழ்ந்திடும் நெற்பயிர்கள்/ உழவனின் வியர்வையில் விளைந்திட்ட பொன்மணிகள்/ காண்பவர் பசிதீர்க்கும் பச்சைநிறக் கதிர்கள் / ஒற்றையடிப் பாதையில் இருபுறமும் பசும்சோலைகள் மனதை மகிழ்வூட்டி இதயத்தைத் தாலாட்டுகிறதே/ பா.பத்மநாபன் | |
50 | 261 | ஒத்தையடிப் பாதையிலே ஓடியாடிப் போகையிலே அத்தை மகளே உன்னைக் கண்டேன் உசிலம்பட்டி சேலைக் கட்டி கைவீசியே போகையிலே மாமன்தான் மயங்கிப் போனேனே வாரியே அனைத்திட உள்ளம்தான் துள்ளுதடி ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
51 | 582 | ஒத்தைடிப் பாதையிலே ஓடிவரும் பெண்மயிலே பித்தனென் பர்வையையும் பெயர்த்தெடுத்துப் போரவளே சுத்திசுத்தி வருவாயே சோகந்தீர நீவந்து முத்தமழை பொழிவாயே மோகமுடன் தொடுவாயே! நெடுவை இரவீந்திரன் | |
52 | 616 | ஒத்தையடிப் பாதையிலே காத்திருக்கிறேன் மன்னவனே நீ கொடுத்த நினைவுகளில் வாழ்கிறேன் ஏங்கி தவிக்கும் என் இதயத்திற்கு விரைந்து வந்து விடியலை கொடு கண்களின் தவத்திற்கு இதயத்தை வரமாக்கு கா.கேமலாரூபினி | |
53 | 735 | வயலின் வரப்பு கிராமத்தின் வழிகாட்டி/ சிற்றூரை இணைக்கும் ஊழலில்லாப்பாலம்/ குறுக்கு வழியில் விரைவுப்பயணம்/ சாலையில்லா ஊரு உதவுது பாரு/ மழையில் நடந்தால் வழுக்கும் அபாயமே. படைப்பாளி பைரவி | |
54 | 256 | ஒத்தையடிப் பாதையிலே அத்தைமகள் கைவீசி/ ஒய்யாரமாப் போகையிலே குளிருதே என்னிதயம்/ சரியென ஒருவார்த்தை சத்தமின்றி நீசொல்ல/ ஊர்கூட்டிப் பரிசந்தான் மாமன் போடுவேன்/ மார்கழிக்குப் பின்னாலே மணமேடை காணவே..! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
55 | 287 | ஒத்தையடிப் பாதையிலே இளைப்பாரி உட்கார்ந்தேன் அத்தைமகள் அரிசிக்கஞ்சி கொண்டுவந்தாள் ஆசையோடு அவளயே தொட்டுக்கொண்டு அத்தனையும் சாப்பிட்டேன் அவள் திரும்பிபோகிற நடையைப் பார்த்து விரைத்துநின்ற நெற்கதிர் வெட்கப்பட்டு குனிந்துகொண்டது தண்டபாணி | |
56 | 480 | கால் ஒட்டும் பூமிதான்/ அப்பனவன் கைபிடித்து அளந்திட்ட பூமிதான்/ அன்றாடும் அளந்தது என் கால்கள்தான்/ ஆண்டுகள் பலவானாலும் அடிவைத்து நடக்கையிலே/ அப்பனின் நினைவுகள் அளவில்லா இன்பந்தான்/ கலைச்செல்வி | |
57 | 578 | மானிடர் வாழ்ந்திட மண்ணகம் நிலைத்திட// மாசற்ற உழைப்பாலே செழித்த வயல்வெளியே// பருவமழை பொழிந்திட இயற்கையின் எழிலென// உழவரின் திறன்தனை பறைசாற்றும் நெற்கதிர்கள்// ஒத்தையடிப் பாதையிலே வளைந்திருக்கும் பேரழகே// ...கவியாசகன்...!!! | |
58 | 221 | வயல்காட்டின் இருமருங்கில் வயல்நெல்லும் நாணிநிற்க ஒற்றையடிப் பாதையின் ஓரத்து நெல்மணியும் ஒற்றையாய் தலைசாய்த்து ஒய்யாரமாய் கூவியழைக்க அறுப்புக்கு நேரமாச்சு அறுத்துவிட ஓடிவாவென்று அஞ்சாது கேட்டுவிட அறுப்புவேலைக்கு ஓடினேன் புஷ்பா கிறிஸ்ரி |
இத்துடன் போட்டி இனிதே முடிகிறது
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும்
வாழ்த்துக்கள்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக