கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்











Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

697

அண்ணன் தம்பி பெற்றோர் எனவே / 

அன்பைச் சுரக்கும் உறவுகள் இருக்கையில் / 

ஆடிப் பாடிக் கூடி வாழ்ந்தால் / 


நொடிகள் தோறும் இன்பம் ஊறும் / 

நோயும் பிணியும் ஓடியே போகும் / 

கோடி நன்மைகள்  நிலைத்து கிடைக்கும்...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை...

2

341

நாடி வரும் மிகுந்த சந்தோசம்/

தேடித் தரும் சிறந்த உற்சாகம்/

ஓடிப் போகும் கவலை நம்மிடம்/


வாடி நிற்கும் தனிமை அகன்றிடும்/

ஆடிப்போய் ஒதுங்கும் பகைவர் கூட்டம்/

ஈடில்லை ஒற்றுமை பலமே வந்திடும்/


பாலா கார்த்திகேயன்

3

596

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/

கூட்டுக் குடும்பமே குன்றாவொளி தரும்/

நாடி நம்மை நயமாய் அணுகும்/


நனி துன்பங்களைத் துடைத்து விரட்டும்/

தேடி வந்து தெளிய வைக்கும்/

தெள்ளமுதாய்த் திகழும் உறவுக் கூட்டம்!


சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை

4

462

உழைப்பினால் வாழ்வில் உயர்ந்து நின்றோம்/

பொறாமையில் தனியாகப்பிரிந்து நிற்கிறோம்/

இன்பம் இல்லாமல் துன்பமாய் வாழ்கிறோமே/


மீள வழி இல்லையா என்றால்/

இருக்கிறது வழி சொல்கிறேன் கேள்/

அன்பைக் கொடுத்து அகிலம் காப்போம்


தயா

5

692

பாசத்துக்கு பஞ்சமில்லை வேசத்துக்கு வேலையில்லை /

தனிமனித பாரமில்லை தரணியாள முடக்கமில்லை /

அல்லல்கள் வருவதில்லை வேதனைகள் தொடுவதில்லை/ 


அன்பிற்கு அளவில்லை கதைகளுக்குச் சலிப்பில்லை/

ஒரு மரத்தின் கிளைகளாய் ஒரு /

கூட்டுப் பறவைகளாய் வாழ்ந்திடும் உறவுகள் !/


முனைவர்.சு.சித்ரா கரூர் தமிழ்நாடு

6

716

கூடி வாழ வேண்டும் அன்பு // 1

அதுவே என்றும் சிறந்தப் பண்பு // 2

ஒரு கைத்தட்ட ஓசை இல்லை // 3


இரு கையணைக்க விலகும் தொல்லை // 4

விட்டுக் கொடுத்தால் வருமோ துன்பம்  // 5

கொட்டும் அன்பால் கோடி இன்பம். // 6


- நாகை. ஹாஜா

7

482

அந்தக் காலத்து இன்பம் வந்திடுமா /

பாட்டியின் அறுசுவை உணவு கிடைத்திடுமா /

அண்ணன் தங்கை பாசம் நிலைத்திடுமா/


பெற்றவர்களில் அன்பும்  கூடுமா ஏங்குகிறேன்/

அத்தனையும் கானல் நீராகி போனதே /

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

8

தி

428

குழந்தைகளாய் கூட்டுக் குடித்தனமாய் குதூகுலமாய்

கும்மாளம் கொண்டாட்டம் எல்லாமே அக்காலம்

சிக்கனமம் சேமிப்பு அக்கறையாய் இருந்திடுமே


நொடிப்பொழுதும் நோயின்றி மகிழ்வாகக் கழிந்திடுமே

விட்டுக் கொடுத்தும் விரும்பி அளித்தும்

கூடியே வாழ்ந்துவிட்டால் குறவொன்றும் இல்லையம்மா.


சுப்பிரமணியன் அன்புமலர்.

9

தி

614

தனி மரம் தோப்பு ஆகாது/

ஊர் சேர்ந்து தேர் இழுத்தால்/

நிலையை அடைந்து விழா முடிவுறும்/


இளமையில் தனி மனிதனாய் வாழ்ந்தாலும்/

முதுமை காலத்தில் துணை தேவை/

மரணித்தாலும் தூக்க நால்வர் அவசியமே/


விஜயலட்சுமி

10

502

மனிதன் மட்டுமல்ல பறவைகளும் விலங்குகளும்/

உலகில் ஒன்றாக கூடியே வாழ்கிறது/

இன்பமும் மகிழ்ச்சியும் இல்லத்தில் இருந்திடும்/


இறைவனின் ஆசியும் நிறைந்து கிடைத்திடும்/

உலகமும் அமைதியாக எப்பொழுதும் இருந்திடும்/

கூட்டுக் குடும்பமாக வாழ்வது சிறப்பு/

...............................

கார்த்திக்.கோ

11

715

கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவனுக்கு துன்பமில்லை

உறவைத் துறந்தால் வாழ்க்கை இன்பமில்லை

கோடி இன்பம் கொஞ்சும் மனங்களில் 


வாழப் பழகினால் ஆனந்தத்திற்கு  பஞ்சமில்லை 

நட்சத்திர கட்டடங்கள் ஒரே கூட்டில்

கோடி சுமைதாங்கிகள் ஏந்தும் கரங்களில். 


அ.உமர்பாருக்

12

239

பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை/

ஒட்டுமொத்த குடும்பமும் ஒற்றை வீட்டில்/

வேலைப்பளு குறைந்து ஒற்றுமைக்கு வழிவகுப்பும்/


அவரவர் பணியை கடமையை நினைத்தல்/

அன்பு மட்டுமே ஆட்சி நடத்தியது/

பண்புகள் வளர்ந்து நற்செயலும் மேலோங்கியது/

அனுசரணை கூட்டுறவு மலர்ந்து  சிறப்பித்தது/


க.குமார்

13

746

கூடி வாழ்ந்திடலாம் இன்பம் கண்டிடலாம்/

மலையே ஆனாலும் இலகுவில் உடைத்திடலாம்/

பகையே வந்தாலும் சேர்ந்து எதிர்த்திடலாம்/


துன்பம் தொலைத்திடலாம் சேர்ந்து மகிழ்ந்திடலாம்/

உறவின் வலிமையை உணர்ந்து கொள்ளலாம்/

உலகிற்கு அதை எடுத்துக் காட்டலாம்/


--- மௌஜீத் ஏ ஹசன் ---

14

254

கூட்டுக் குடும்பம் கொடுக்கும் இன்பமே/

மூத்தோரின் வழிகாட்டுதல் நாளும் கிடைக்குமே/

பல்வேறு சொந்தங்கள் ஒரேவீட்டில் கிடக்குமே/


ஆளாளுக்கு பொறுப்போடு வேலைகள் நடக்குமே/

கவலைகள்  இன்றி இன்பம்  மலருமே/

விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே கோடியின்பமாகுமே/


கி.மா கனகராசன். சூலூர்.

15

710

1. பல்லில்லா பாட்டனுக்கும் பாக்கிடிக்கும் பாட்டிக்கும்/

2. பக்கமிருந்து கதைகேட்கும் குழந்தைகளும்/

3. அப்பாவின் அதிகாரத்தில் அடங்கிடும் அம்மாவும்/


4.அக்காளின் ஆசைக்கு அணையிடும் அத்தானும்/

5.தம்பி தங்கைகளின் சண்டைக்கு மத்தியிலும்/

6.கூடி வாழ்வதுவும் கோடி  இன்பமாம்/.


அம்பிகா ஸ்ரீகுமார்

16

745

வாழ்க்கையின் ஆரம்பமே அதுதானே ஆணும்/

பெண்ணும் கூடி வாழ்ந்தாலே கோடி/

இன்பம் தந்திடும் மழலைகள் பெறலாம்/


ஒரு கையினால் ஓசை எழுப்ப/

முடியாதே தள்ளாடும் முதுமையில் தனித்து/ 

இயங்க முடியாது கூடவே வாழ்ந்திடுவோம்.


க.சுலோஜனா

17

290

பகிர்ந்து உண்ணும் பண்பாட்டு நீட்சியாய் /

ஒருவருக்கு ஒருவர் பாசம் கொண்டு /

அக்கம் பக்கத்தாரும் ஒரே குடும்பமாய் /


வேற்றுமை உணராது ஒன்றுகூடி மகிழ்ந்து /

உதவிகரமாய் வாழ்ந்தே உலகம் போற்றிய /

அக்கால நினைவுகள் சொல்லும் காட்சி /


கா. சரவணன்

18

728

ஆடி அடங்கும் வாழ்க்கையை வாழ்ந்திட//

பாடாய்ப் படுகிற பரந்த உலகினில்//

தேடியும் கிடைக்காத செல்வம் என்பது//

கூடிவாழ்வதால் கிடைத்திடும் இன்பம் கோடிபெறும்//

வாடியபயிராய் தனிமையில் வாழ்வு தகுமோ//

கூடி வாழ்ந்துபார் வாழ்வு கொள்ளையழகு.//


ஆவூர்க்குமரன் தமிழீழம் (கணபதிப்பிள்ளை சிவகுமார்)

சுவிட்சர்லாந்து

19

256

ஒரே குடும்பமாய் ஒன்றி வாழுங்கள்/

பெற்றோர் குழந்தையுடன் பேசி மகிழுங்கள்/

உறவுகளை மதித்து உண்மையாய்ப் பழகுங்கள்/


அறிவுரையை ஏற்று சிந்தித்து  செயல்படுங்கள்/

அதிலே உங்களின் உயர்வும் இருக்கலாம்/

கூடி வாழ்ந்தால்  கோடி இன்பமே/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

20

238

ஒன்றாகச் சேர்ந்து அன்பாகப் பழகிடுவோம்../

பகிர்ந்து வாழ்ந்து பயனுடன் உதவிடுவோம்../

இதயம் மகிழ்வதால் உதயம் முன்னேற்றமே../


ஒற்றுமை வாழ்வாக ஓங்குமே உயர்வுகள்./

நன்மைகள் பரவலாக நாடிடு கூடிவாழ../

நலமான  மகிழ்வாகும் உற்சாக உள்ளத்தால்..//


#இளந்தை சேது

21

617

அன்பின் படைப்பில் அமுதம் கிடைக்கும்//

முதியோரின் வாக்கு முத்தாய் இருக்கும்//

பாசத்தின் பிணைப்பு பகையை குறைக்கும்//


மழலை உள்ளங்கள் அழுகை தவிர்க்கும்//

மருத்துவச் செலவு மங்கிப் போகும்//

உறவுகளின் பாசம் உயர்ந்து நிற்கும்//


#முதுவைமுகம்

22

618

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/

நாடி வரும் நலன்கள் நம்மை/

ஓடிப் போகும் துன்பம் தொலைவில்/


வாடி நிற்கத் தேவையே இல்லை/

ஆடிப் போகாது அன்பின் ஆழம்/

தேடி அணைப்போம் சொந்த உறவை/


ஔவை.

23

580

வாழ்வில் இன்பம் வகையாய் செழிக்க//

வீழ்ந்திடும் தமிழா விரைவாய் சிந்திப்பாய்//

பண்டைய நாளில் பண்பான வாழ்வு//


மண்டையில் உறைக்க மகிழ்வுடன் எழுவாய்//

கூட்டுக் குடும்பமாய் கூடி வாழ்ந்தே//

நாட்டில் நலமாய் நாளும் வாழ்வாய்//


சுந்தரலிங்கம் நிருத்திகன்.அல்வாய்.

24

221

கூடிவாழ்ந்தால் நன்மைகள் கோடியாய் கிட்டும் 

ஆடிப்பாடி மகிழ்ந்திடும் அருமைக் குழந்தைகள்

சோடிசேர்ந்து மாவிடித்து சேர்ந்து கொண்டாடிடும் 


நாடிவைத்தியங்கள் யாவும் நன்றாக அமைந்திடும் 

தேடிச் சிறப்புடன் தங்கமான உறவுகளுடன்

படித்து மகிழ்ந்திடும் பாசமான கூட்டுக்குடும்பம்


புஷ்பா கிறிஸ்ரி

25

207

தனியே வாழ்ந்தால் தனித்துவம் இல்லை/

ஒன்றாய் வாழ்ந்தால் நன்மைகள் கிட்டும்/

பாசப் பகிர்வில் பரவசம் உண்டாகும்/


பாதுகாப்பு அரணாய்க்குடும்பத்தைக் காக்கும்/

பந்தபாசம் அத்தனையும் இரத்தத்தில் கலக்கும்/

கூடி வாழ்ந்தாலே கோடி இன்பமாகும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

26

722

பெற்றவர்களோடு சான்றோர்களோடு பந்துக்களோடு பந்தமாக/1

சொந்தத்தின் அணைப்பில் வசந்தமான  வாழ்வாக/2

அயலார் அசலாருடன் நேசங்களை பகிர்ந்து/3


இன்னல் துறந்து வஞ்சம் அறுத்து/4

ஒற்றுமையாக  ஒன்றப்பட்டு இணைந்து ஒரே வானமாக/5

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/6

சுஜாதா அருணாச்சலம்

27

652

கூடி வாழ்ந்தால் கோடி இன்பமே!/

உறவுகளை கண்டால் ஓடும் துன்பமே!/

உறவுகளின் மத்தியில் சச்சரவுகள் இருக்கலாம்/


உறவுகள் மாற்றாரிடையே விட்டுக் கொடுப்பதில்லையே!/

உறவுகளின் உன்னதம் வாழ்ந்தாலே புரியுமே!/ கிராமங்களின் உறவுகள் நகரங்களில் இல்லையே!/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

28

283

பொறியும் இன்றி உடலும் அசைந்தது/

உடலே  இணைந்தால் நலனும் தந்தது/

கூடி இருத்து கூழும் குடிக்கையில்/


கோடி சுகம் தந்ததும் அதுவே/

கூட்டி விட்டு கூடச் செய்து/

உறவின் பிணைப்பை இறுக்கச் செய்தது/ 


ஜமுனாமலர் இந்திரகுமார்

29

434

ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உறவுகள் தருமே/

மகிழ்வு வாழ்க்கையோ உலகை வென்றிடும்/

நல்லது கெட்டதைப் பிரித்தறியும் மனதை/ 


கற்றுக்கொடுக்கும்  நம்மைச் சுற்றியுள்ள சுற்றம்/

அன்பு கருணையை நடத்தையோடு உணர்த்துவது/

கூட்டுக் குடும்பமே கொண்டாடி மகிழ்வோமே//


மீனாட்சி சுந்தரம்

30

483

மாத்துலக்கைப் போடுகிறார் மங்கையர்கள் பசிதணிக்க /1

தாத்தாவோ ஓய்வாக பாட்டியோ பெருக்குகிறார் /2

நுங்குவண்டி விளையாட்டு நோயற்ற காலமது /3


மரத்தில் தொட்டிலிட்டு மகிழ்ந்துறங்கும் மழலை/4

ஆளுக்கோர் பணியாற்றும் அழகான குடும்பம் /5

ஓலைக் குடிசையில் ஒற்றுமையாய் வாழ்கின்றார் /6


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

31

463

கடந்த காலப் பட்டறிவு இனிமை!

கூட்டுக்   குடும்ப  உறவுகளின் பாசம் !

நிலவினைப் பார்த்து முற்றத்து கைச்சோறு!


உடல் துயரெனின் பாட்டியின் வைத்தியம் !

எத்தனை இழந்தோம் நர(க)  வாழ்க்கையில் !

கூடி வாழ்ந்து அனைத்தையும் மீட்போம்......


அரவந்தன்  தஞ்சை

32

735

ஒற்றுமை என்றும் கூட்டுறவு பலம்/

விதைகளின் கூட்டணி பல தோப்புகள்/

ஒன்று பட்டால் என்றும் வெற்றிக்கனிகள்/


தனிமை வாழ்வின் மகாக்கொடுமையின் உச்சம்/

இராணுவம் தாய் நாட்டின் முரசம்/

விளையாட்டின் வியர்வை கோப்பை நிச்சயமே


படைப்பாளி பைரவி

33

726

அன்பிலே ஆயிரம் இறைவனைக் காணலாம்/

ஆறுதல் சொல்லியே காயங்களை ஆற்றலாம்/

பல இதயங்களை விலைக்கு வாங்கலாம்/


அச்சாணியின் பிணைப்பிலே இயந்திரங்கள் இயங்கும்/

பேரன்பின் அரவணைப்பிலே எண்ணங்கள் அழகாகும்/

கூடி வாழ்ந்தால்  குழப்பங்களை கொல்லலாம்/


--காளிராஜ்பாலகணேஷ்

34

259

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை /

கூடி வாழ்தலே மகிழ்ச்சியின் எல்லை /

குறையற்ற மனிதராக எவரும் பிறப்பதில்லை /


கோபதாபம் தவிர்த்தால் சலசலப்பு சங்கடமில்லை /

மன்னித்து மறப்பது மனிதநேயப் பண்பாகும் /

நிலையற்ற வாழ்வில் அரவணைத்து மகிழ்வோம் /


ஜெயலெட்சுமி மாணிக்கம்

35

204

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு//

ஆன்றோர் வாக்கு அறிவோம் மனதில்//

ஒருகை தட்டியே ஓசையும் வருமா//


ஒற்றுமை இன்றி வேர்களும் பலமா//

உணர்வாய் மனிதா உறுதியில் நீயும்//

கூடியே எழுந்தால் இமயமும் பையில்//


ஆஸாத் கமால்

36

317

கூட்டுறவு முறையில் குடும்பம் இருந்தால்/

குதூகலம் குறையின்றி மகிழ்ச்சி ததும்பும்/

மூத்தோர் இருந்தால் நோய்கள் அண்டாது/


மாற்றம் உண்டாகும் மலர்ச்சி கிடைக்கும்/

வறுமை இல்லாமல் வாழ்க்கைப் பயணம்/

அருமையான இல்லறம் இல்லையே துயரம்/..


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

37

450

அதிகாலை காய்கறிக்காரியும் அடுத்து சலவைக்காரனும்/

குடும்ப உறுப்பினர்க்கு முடிதிருத்தும் கலைஞனும்

நலமில்லாமல் அழுகின்ற மழலைக்கு தலையில்


ஓதியே ஆசியிடும் மசூதி முதியவரும்

நமக்கு போதிப்பது ஒன்றுதான் கூடியே

வாழ்பவர்க்கு நன்மைகள் கோடியே என்றுதான்/


ரேணுகா சுந்தரம்

38

717

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/

நாடி வருமே நமது இல்லம்/

ஓடிப் போன சொந்தம் யாவும்/


தேடி வந்தே உறவு கொள்ளும்/

பாடிக் களித்தே ஒன்றாய்க் கூடி/

ஆடி மகிழ்வோம் அன்பால் இணைவோம்/


கந்தசாமி நடேசன்

39

646

ஓடி விளையாடியது.. .....ஓய்ந்தே விட்டது // 1

பாடி மகிழ்ந்ததோ.. .....பாரில் மறைந்தது // 2

தனிமைச் சிறையென.......தனிக் குடித்தனம் // 3 

தரணியின் வளர்ச்சியில்.. ....தரமோ குறைந்தது // 4 

இயல்பினை மறந்து.. .....இழந்தது போதும் // 5

கூடுதல் இன்புறுவோம்.. .....கூடியே வாழ்ந்து // 6

இழந்த இன்பத்தை தேடும், #இரசித்து_கருத்துரைக்க_மட்டும்

பனைக்குளம் சகூருதீன்...

41

588

தனிமரம் தோப்பாகாது தனித்திருந்தால் வாழ்வாகாது. //

பிரிவினால் பட்டதுன்பம் பார்த்தபின்னுமா மனதிலின்பம்! //

பலரின் சாதனையே பகைவனை அழிக்கும். //


ஒற்றுமையின் குரல் ஓங்கி ஒலிக்க, //

எதிரியின் கால்களும் - நம் எல்லைத்தாண்ட மறுக்கும். //

கூடி வாழ்ந்தால் – பணம்  கோடிகள்  மிஞ்சும்!..//


                    ~~~பாரிஉமா. சர

                                

42

616

அன்பும் அரவணைப்பும் தாண்டவம் ஆடும்

பெரியோர் ஆசியாலும் குழந்தையின் சிரிப்பாலும்

இல்லம் முழுதும் இன்பம் பொங்கும்


துன்பத்தில் தோள் சாயவும் துணையாகும்

ஒன்றாய் வாழ்தல் பூமியிலே சொர்க்கம்

இறைவனும் இயற்கையும் ஏங்கி மயங்கும்


கா.கேமலாரூபினி

43

671

உறவெனும் கண்ணாடி முகம்காட்டும் முன்னாடி

உடைத்திட்ட பின்னாடி ஒட்டுமோ மறுபடி...

ஒருமுறை பிறந்திட்ட நாமிங்கு மறுமுறை


பிறந்து ஒன்றாகும் வாய்ப்பு உண்டாகுமோ

வாழ்கின்ற காலமெலாம் பிரிவினை பேசாமல்

இணைந்து வாழ்ந்திடுவோம் இன்பமே கண்டிடுவோம்...


கி.அருள்குமரன். தலைஞாயிறு.

44

741

ஆயாவின் அன்பில் வளர்வதா குழந்தை?//

தாத்தா பாட்டி  தவிர்த்து வாழ்ந்தால்//

மனதில் சிதைவு நோய்வந்து தாக்கும்//


தூரமாய் இருந்த சொந்தம் தொலைந்து//

பக்கமிருந்த உறவும் பகையாய் ஆனால் //

அடுக்கடுக்காய் இருந்தும் அனாதை தானே?.//


பி.கே.சாமி.

45

344

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

ஒன்றாக வாழ்தலே மானிட பலம்

ஒரு கை ஓசையை ஆக்காது


உறவுகளின்றி வாழ்வதால் உள்ளுக்குள் களிப்பேது

ஊறு வருகையிலும் உள்ளம் மகிழ்கையிலும்

கரம் கோர்த்திட உறவுகள் உடனிருக்கனும்!


#எமா#

46

669

மகிழ்வைக் கொடுப்பது கூட்டுக் குடும்பம்/

உறவுகள் இணைவது கூடி வாழ்ந்தாலே/

உணர்ந்தே செயல்பட கோடி இன்பமே/


கருத்தினைப் பகிர்ந்தே நலமோடு வாழ/

சுமைகளைப் பகிர்ந்தே பொறுப்புடன் வாழ்ந்து/

நிலைத்திட வைக்கும் நன்மை பயக்கும்/


நஸீரா வசூக்

47

240

எல்லோரும் ஒற்றுமை உணர்வுடன் சேர்ந்து//

வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்//

சிறியவர்கள் கட்டுப்பாடுடன் வளர்வார்கள் சிறப்பாக//


இல்லறம் இனிக்க மகிழ்ந்து உறவாடி//

துன்பத்தை சாமாளிக்க துணை இருப்பார்கள்//

கவலைகள் இல்லாமல் இவ்வுலகில் வாழலாம்//


உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️

48

533

குடிசை வீடாயினும் குதூகலம் நிறைந்தபடி

குடும்பமாய் வாழ்ந்திடவே குலங்கள் செழித்திடுமே..!

ஆயம் இடத்தில் அன்பினை விதைக்க

காயங்கள் யாவும் கட்டுக்குள் வந்திடுமே..!


கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்

நாடிடும் உறவுகள் நமக்குத் துணையே...!!


க.இரவிச்சந்திரன்.

49

604

நேரங்கள் கூடினால் குடிசையும் கோபுரமாகும்//1

மேகங்கள் கூடினால் இயற்கையும்  அழகாகும்//2

கூடிடும் ராகத்தால் இன்னிசைப் பிறப்பாகும்//3


தனித்தனி மரங்கள் ஒன்றானால் தோப்பாகும்//4

வேறுபடும் மனங்களால்  கூறுபடும் உறவுகள்//5

ஒன்றாகும் உணர்விலே நன்றாகும் வையமே//

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கவிஞர் கோவை ஆறுமுகம்

50

725

குடிசையில் வாழ்ந்தாலும் அன்புடனும் பண்புடனும்/

வேலைகளில் ஆண்களும் பெண்களும் இணைந்து/

சிரித்துப் பேசியே செய்து முடித்து/


கிராமத்திலேயே பிள்ளைகளையும் ஒன்றிணைந்து வளர்த்து/

'கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்'/

புதுவம்சத்திற்கும் உணர்த்தியே வழிவழியாகத் தொடருகின்றனரே............✍️

கவிஞர்.மரு.எழிலன்

51

636

தேடி வைத்த செல்வம் வாராது!/

ஓடிப் போன நாட்கள் மீளாது!/

கடந்து வந்த பாதை மறையாது!/


அடைந்து வந்த மகிழ்ச்சி குறையாது!/

நாடி வந்த சொந்தங்கள் சேர்ந்து/

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

52

562

கூடிவாழ்ந்தால் கோடி   நன்மைகள் வந்தடையுமே /

தனித்து வாழ்ந்தால் சாதிக்க முடியுமோ/

சிறியப் பூக்கள்தான் தொடுக்க மாலையாகிறது/


எழுத்துக்கள் சோர்ந்தால்தான் நூல்கள் உருவாகும்/

ஒற்றுமையான உறவுகளே குடும்பத்தில் மகிழ்ச்சி/

ஒருங்கிணைந்த சமுதாயமே நாட்டின் வளமாகும்/


பா.பத்மநாபன்

53

373

ஊரோடு உறவாகி ஒற்றுமை மேலோங்க/

கூட்டுக் குடும்பமாய் மாவும் இடித்தோம்/

முற்றத்தில் சிறுவர்கள் விளையாட்டை ரசித்து/


கிராமத்து கீதங்கள் இசைபாடித் திரிந்து/

தாத்தா பாட்டியோடு தழுவிய நினைவுகள்/

கூடி வாழ்ந்தால் கோடி இன்பமேயாம்!!!


ஜயந்தினி வாகீசன் 

54


உணவே மருந்தாக குடும்பத்தில் அனைவரும் /

ஒன்றாக கூடி உணவருந்தி மகிழ்ந்ததும் !!

மருத்துவரை நாடாத பாட்டியின் கைவைத்தியமும் ... /


உறவுகளோடு உறவாக ஐந்தறிவு ஜீவன்களும் ... /

அன்பும் பாசமும் நிறைந்த கூட்டுக்குடும்பமாய் ... /

கூடிவாழ்ந்தால் கோடி இன்பம் காணலாமே ... !!


சுமதி கணேசன்

55

711

இதயத்தின் இருப்பிடமாய் இன்பத்தின் பிறப்பிடமாய் //

பாராட்டி சீராட்டி பக்குவமாய் தாலாட்டி //

துன்பத்தில் தோளாக நல்லதை நாளுஞ்சொல்லி //


பிஞ்சிலே கருகும் பிழைகளைத் திருத்தி  //

தலைமுறைகள் காக்க தனிமைகளைப் போக்க //

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் //


                                      நா . தமிழ் சுகு

56

210

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.../

தேடி வருமே இன்ப வெள்ளம்.../

ஆடிப் பாடி வேலை செய்ய.../


வாடி நிற்கும் முகமும் மலரும்..../

நாடி வந்தோர் நன்மை பெற.../

ஆனந்தம் பொங்கும் இல்லம் தனிலே..../


திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍

57

709

இறையவர்  உலகிலும் கிடைத்திடா  இன்பம்// 

கூடி வாழ்ந்தால் ஈடில்லா  பேரின்பம்// 

அறிவுரைகள் குறைவின்றி அக்கறைகள்  பிறந்திடும்//  


வேலைகள்  பகிர்விலே உள்ளங்கள் இணைந்திடும்// 

சந்ததிகள்  கண்முன்னே கவலைகள்  பறந்திடும்//

கூட்டுக்குடும்பம்  இது உறவுகள் தழைத்திடும்//  


தாழை. இரா. உதயநேசன்

58

278

சொந்த பந்தங்கள் சுற்றமாய் சுகந்தர/

கூடியே  வாழ்ந்திட்டால் கோடிகளில்  நன்மையாம்/

ஒற்றுமை ஒங்க ஒழுக்கங்கள் நிறைந்திடும்/


உறவுகளின் அருமை ஒவ்வொன்றாய்ப் புரிந்திடும்/

மூத்தோர்  முதியோர் பண்புகள்  பரந்திடும்/

நல்வாழ்வு  வாழ்ந்திட நல்வழி  அமைந்திடும்/


கிருஷ்ணலதா வசீகரன்

ஜெனீவா- சுவிஸ்

59

707

விட்டுக் கொடுக்கும் உறவுகள் எங்கோ?

இன்னிசை போலே இன்பங்கள் அங்கே!

கட்டிக் காக்கும் கூட்டுக் குடும்பம்


கொட்டிக் கிடக்கும் கொள்ளை இன்பம்!

தட்டிக் கொடுக்கும் தந்தையின் செயலில்

தவமாய்க் கிட்டும் தரமாய் இன்பம்


✍️பா.ச.கண்ணன்

60

515

கோடி கொடுத்தாலும் கிடைக்காத நிம்மதி/

கூட்டுக் குடும்பத்தில் வரமாகக் கிடைக்கும்/

கவலைகள் மறக்கக் கவனமாக ஆதரித்துக்/


குழந்தைகள் வளர்க்க உறவுகள் சூழ்ந்திருக்கும்/

காரியங்கள் யாவிலும் கைகொடுக்கப் பலரிருக்கக்/

குதூகலம் எப்போதும் கூட்டுறவில் நிறைந்திருக்கும்/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

61

261

முன்னோர்கள் அந்நாளில் கூடியே வாழ்ந்ததால்

உறவுகள் நட்புகள் உதவியும் கிடைத்தன

இந்நாளில் இதுவே இயலாமல் போனதே


பரந்த மனப்பான்மை பறந்து போனதே

ஒற்றுமையின் பலத்தை உணராமல் தவிக்கின்றனரே

கூடி வாழாமல் வாடியே நிற்கின்றாரே !


~ வள்ளல் இராமமூர்த்தி

62

564

இன்பம் பொங்கிடும் இனிய வாழ்வில் 

அன்பெனும் அரண் அமைத்து நாமும் 

துன்பங்கள் அகன்று துணிவுடன் வாழ்ந்திட


உறவு முறைகள் உயிராய் என்றும் 

நிலைத்திடுமே நின்மதி தரும் தாராளம் 

குடி வாழ்ந்தால் கோடி இன்பம்.


இராசையா கௌரிபாலா.

63

258

ஒருவர்க்கு ஒருவர் அன்பைப் பகிர்ந்து/

ஓராயிரம் துன்பங்கள் வந்த போதும்/

ஒற்றுமைப் பேணியே உறவுகள் அனைவருடன்/


சொந்தங்கள் பாராட்டி, சோர்ந்து போகாது/

கூடி வாழ்ந்திடக்  கோடி நன்மை/

கூட்டுக் குடும்பம் கோயில் ஆகுமே!


                     தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26             

64

201

சொந்த பந்தங்கள் சுற்றியே வாழ்ந்தால் /

கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி /

குழந்தைகள் வளர்க்க கைகொடுக்கும் உதவிடும்/


கவலைகள் சூழ்ந்தாலும் ஆறுதல் சொல்லிடும்/4

ஒற்றுமை போற்றி ஒழுக்கங்கள் கற்றிட/

மூத்தோர் முதியோர் காட்டிடும் நற்பண்புகழே//


புவனா  சற்குணம்   கனடா

65

747

கூட்டுக் குடும்பமே குவலயத்தில் சிறந்திடுமே//

மூத்தோர் துணையோடு பிஞ்சுகள் வளர்ந்திடுமே//

வரவுகள் அதிகரித்து செலவுகள் குறைந்திடுமே//


வேலைகள் பகிர்வதால் விரைவாக முடிந்ததுமே//

துன்பங்கள் பகிர்ந்து துயரங்கள் விலகிடுமே//

இன்பங்கள் நிறைந்து இல்லறம் செழித்திடுமே//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

66

613

இல்லம் நிறைந்த சொந்தங்களோடு ஆடிப்பாடி//

கூடி வாழ்ந்தால்  அன்பும் பாசமும்//

நிறைந்தே  வழியும் ஆளுக்கொரு வேலை//


பகிர்ந்தாள்   இல்லைத் தொல்லையே வாழ்வில்/

கூட்டுக் குடும்பமே நன்மையைத்  தரும்//

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்//


ஜெயாசந்திரமோகன்

67

510

கூட்டுக் குடும்பம் இன்பம் தருமே/

உறவுகள் மேம்பட்டு ஒற்றுமை ஓங்குமே/

பொங்கும் மகிழ்ச்சி வீட்டில் கூடிடும்/


இல்லறம் என்றும் நல்லறமாக விளங்கும்/

ஆயிரம் துன்பங்களும் பனியாக விலகிடும்/

உள்ளங்கள் பரிமாறி உணர்வுகள் மேம்படும்/


ராதாமணி

68

465

குடும்பம் என்பதே  கூடி வாழ்தல்/

இடும்பை எத்தனை வரினும் தாங்கி/

கூட்டாய்ப் பகிர்ந்து ஒருவர்க்கு ஒருவர்/


ஆறுதல் வார்த்தையால் அணைத்துக் கொள்வர்/

தேறுதல் சொல்லி திரும்பியே பழம்நிலை/

இயல்பாய் வாழ்வதே இன்பம் கோடியாம்./


*இரா.வெங்கடாசலம்*

69

287

அவ்வை சொல்லிவிட்டு அன்றே போய்விட்டாள்

பாரதி பாடிவிட்டு என்றோ மறைந்திட்டார்

பக்கம் பக்கமாய்ப் புத்தகத்தில் பதிவுகள்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது 

மதமும் சாதியும் மனிதரைப் பிரித்தன 

கூடி வாழ்ந்திடின் கூச்சலும் குழப்பமும்


தண்டபாணி 

70

409

குடும்பம் என்று வந்தால் உலகில்//

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை//

உண்டு நாடி நீயும் போகாதிருப்பினும்//


தேடி வரும் செல்வம் உனக்கே//

பாயில் துடித்து வீழ்ந்தாலும் ஊரார்// 

ஓடி வந்தே உதவிகள்புரிவர்//

******

க.சுதர்சனக்குரு.

71

244

எண்ணற்ற எண்ணங்களின் வலிமை ஒற்றுமை //

தன்னம்பிக்கை கொண்டே உறவுகள் வளரும் //

விழிப்புணர்வு ஒன்றே வேற்றுமையை விரட்டும் //


கூட்டுக் குடும்பம் இமயத்தின் சிகரம் //

நாளைய உலகம் நம்பிக்கை உள்ளவரை //

மனிதநேயத்தின் பகுத்தறிவே   விதியைத் துரத்தும் //


கவிஞர் கோவை செல்லப்பன்

72

578

கூட்டுக் குடும்பத்தில இல்லறம் சிறந்திடும்//

பழமையும் புதுமையும் நிறைந்தே திகழ்ந்திடும்//மூத்தோர் நன்னெறியும் அறநெறியும் புரிந்திடும்//


இன்பம் நிலைத்திட துன்பங்கள் மாய்ந்திடும்//

அன்பும் அரவணைப்பும் குறைவின்றிக் கிடைத்திடும்//

வாழ்வியல் விழுமியம் யாதென உணர்த்திடும்//


...கவியாசகன்...!!!

73

668

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/

புரிந்து வாழ்ந்தால் அன்பு பெருகும்/

கூட்டுக் குடும்பம் தந்திடும் சொர்க்கம்/


துன்பம் கூட நெருங்க அஞ்சும்/

கரத்தை நீட்டி துயரை துடைக்க/

விழையும்உறவுகள் வாழ்வின் வரமாகும்/


ஏஞ்சல்சோபிதா

74

490

உறவுகள்  கூடினால் இன்பங்கள் பெருகுமே/

உதவிகள் செய்திட மனம் விரும்புமே/

வேலைகள் விரைவாய் முடிந்திடும் தினமுமே/


மழலைகள் முகம் மலர்ந்திடும் மகிழ்ச்சியிலே/

துன்பங்கள் எல்லாம் தூரமாய் ஓடுமே/

கூடி வாழ்ந்தால் கோடி நன்மையே/


செ.புவிதா

75

425

கூட்டுக் குடும்பம் ஒற்றுமையின் சிகரமே //

தனிமரம் எக்காலத்தும் தோப்பாக முடியாதே //

குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும்  //


குடும்ப உறவின்றி நிகழ்வுகள் சிறக்காதே //

பாசத்தின் உணர்வோடு மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம் //

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகமே  


கலாகண்ணன்

76

682

அன்பின் ஊற்று வாழ் உறைவிடம்

அரவணைப்பு  தருமே உய்தல் தெம்பு

தொலைந்து நிற்கிறதே ஊடகப் பொய்மையில்


விலை கொடுத்தே வாங்கிக் கொள்கிறோம்

தொல்லைகள் தீர தொலைத்து விடு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


ப.தாணப்பன்

77

247

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தோம் /

நன்மைகள் பல அடைந்து சென்றோம் /

ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்தோம் /


நட்பாய் நாளும் பழகி நின்றோம் /

ஊரில் பெயருடன் வாழ்ந்து வந்தோம் /

நலமாய் நாளும் இருந்து வந்தோம்/


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம்


போட்டி நிறைவு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages