Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 631 | கண்கள் இன்னும் சோரவில்லை:காண// துடிக்கும் மனமோ அதை ஒதுக்கவில்லை/ விழிகள் சற்றும் முடவில்லை: வரும்/ வண்டியின் பிம்பம் தொலைவிலும் தெரியவில்லை!// அ.வெ.முத்துக்குமார். பொன்னேரி | |
2 | 216 | அந்த அந்திநேரச் சந்தடி இல்லாத்// தொடர் வண்டிப் பாதையோர காத்திருப்பில்// காத்திருக்கிறது உனக்கும் எனக்கும் இடையிலான// #பெருங்காதல் அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
3 | 616 | உன்னை காண துடிக்கும் கண்களுக்கும்💕 ஏங்கி பரிதவிக்கும் என் இதயத்திற்கும்💕 உயிர் அளிக்க விரைந்து வந்து விடு💕 காத்திருப்பு நம் காதலின் அடையாளம்💕 கா.கேமலாரூபினி | |
4 | 697 | கொட்டும் மழையில் குடையைத் துணையாக்கி / விரைந்தே வரும் தொடர்வண்டிக்காக காத்திருக்கும் / காலம் மழையில் கரைவதைக் கருதி / காத்திருக்கும் மங்கையின் பொறுமை பேரெழில்..! முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை... | |
5 | 212 | வரவினைப் பார்த்திருந்தாய் மனமெல்லாம் வியர்த்திருக்க// காலமெல்லாம் கரைந்திடவே மலராக பூத்திருக்க// அன்பாகத் தழுவிடவே தவறாமல் வருவாரோ// துயரெமெல்லாம் தீர்ந்திடவே வைகறையில் காத்திருப்பாய்// ஜெய வெங்கட் | |
6 | 462 | மாணவன் பரீட்சை முடிவுக்காய் காத்திருப்பான்/ காதலன் காதலியின் சம்மதத்தை எதிர்பார்த்திருப்பான்/ விவசாயி மழைக்காய் ஆவல் கொண்டிருப்பான்/ இயமன் காத்திருக்கிறான் உன்னை முடிப்பதற்கு தயா | |
7 | 614 | வேலை இல்லா பட்டதாரி நான்/ நேர்முக தேர்வு பல சென்றும்/ காத்திருப்பு பட்டியலிலும் பெயர் இல்லை/ எனக்கும் விடிவு காலம் பிறக்குமா? விஜயலட்சுமி | |
8 | 706 | காத்திருப்பு சுகமானது நிச்சயம்நீ வருவாயெனில்/ மழையில் குடையுடன் உனைக் காணவே/ புகைவண்டி வருகிறது புண்பட்டமனம் ஆறுதலடைய/ குளிரில் வாடுமெனக்கு போர்வையாய் வருவாயா/ மாயாதேவி சென்னை | |
9 | 428 | காதல் ஆம் ஒரே வார்த்தை உடலையே உலுக்கி எடுக்கும் சக்தி வந்துவிடுவேன் வா போகலாம் என்றான். கொட்டும் மழையில் குடையுடன் காத்திருப்பு. சுப்பிரமணியன் அன்புமலர் | |
10 | 344 | மழையென்ன வெயிலென்ன குளிரென்ன பனியென்ன மனதில் உறுதி நிலையாக இருந்தால் மனதின் எண்ணம் ஈடேறும் வரை அசையாது காத்திரு..காத்திருப்பதும் சுகமே! #எமா$ | |
11 | 715 | யாரும் இல்லாமலே ஓடும் காலம் வாலிபப் பருவத்தில் இறங்கும் காதலில் மேகம் சூழ்ந்த மௌனங்களில் தெரிகிறது காத்திருக்கையில் எதிர்ப்பார்க்காமல் வரும் மழையாக. அ.உமர்பாருக். | |
12 | 698 | குன்றாத அன்பிலே மழைச் சாரலில்// கைக்கூடும் நேரத்தில் கைக்கழுவாமல் இருப்பதற்கே// மன்னவன் விழித்தேடி தொடர்வழிப் பாதையிலே// ஆயிரம் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றேன் உனக்காக// தேனி ஆ.சுந்தர் | |
13 | 240 | வைகறையில் காத்திருக்கும் நங்கையே உந்தன்// இன்னல்கள் நீங்கி விடும் கலங்காதே// மழைக்காலம் குடைக்குள் இணைந்தே பயணிப்போம்// அன்பானவன் மணித்துளிகளில் மறவாமல் வருவேனே// உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️ | |
14 | 741 | நீர்த்திரை இட்ட விழியோடு பார்க்கிறேன் வார்த்தைகள் சொட்டும் வழியை வருவாய்யென இரும்பில் கூட ஈரம் கசிகிறது இருக்கிறதா உன்னிடம் இதயம் என்பது? பி.கே.சாமி. | |
15 | 735 | வாய்ப்பு என்றும் வரம் பயனாக்கிடு விடாமுயற்சி இலக்கை அடைய சக்தி விரயமாய் காலம் கழித்து வருந்தாதே காத்திரு காலம் கனியும் நம்பிக்கையுடனே ரமேஷ் பைரவி | |
16 | 258 | புகைவண்டி நிலையத்தில் புரிதல் இன்றி/ இருவரும் எதிரெதிர் பக்கங்களில் பிரிந்தோம்! வாழ்க்கைப் புரிந்து, பிரிந்த இடத்தில்/ காத்திருக்கேன் காதலுடன்,வருவாய் நீயென..! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
17 | 482 | கொட்டும் மழையில் சிட்டும் அமர்ந்தாலே/ தொட்டும் தொடர்ந்திடும் காதலன் அன்பிற்காகவே / ஒட்டிய உறவுகளையும் விட்டுச் சென்றாயே / தொடர்வண்டி வரவுக்கு காத்திருக்கிறாள் பேதை. தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
18 | 502 | கோடை மழை கொட்டும் வேளையில்/ தித்திக்கும் உன் நினைவுகளை சுமந்தபடி/ தனிமையில் பூத்திருக்கிறேன் வானவில்லாய் வந்துவிடு/ உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்/ .............................. கார்த்திக்.கோ | |
19 | 617 | காத்திருந்த காலங்கள் கனவாய் போனது கனமழை வந்து சாரலாய் ஆனது இதயத்தின் தவிர்ப்பு ஏங்கி துடிக்குது புதிய பயணம் புறப்படும் மனம் #முதுவைமுகம் | |
20 | 238 | நெடுந்தூரப் பயணம் நிறைவுறுமா பெருமழையால்../ காத்திருக்கேன் நெடுநேரம் காணலையே தொடர்வண்டி../ கவலைகள் மனதினில் காயமாகுது இதயத்தில்../ சரியான வழியினில் தடம்மாறாமல் பயணிப்பேன்..// #இளந்தை சேது | |
21 | 422 | மணித்துளிகள் கடந்தாலும் மனம்கவர் மணாளனின் மதிமுகம் கண்டிடவே மழைக் குடையுடன் இருப்புப்பாதை மேடையிலே மங்கையின் காத்திருப்பு தொடர்வண்டி வந்துவிடும் தொடர்இன்பம் தந்துவிடும். க.தங்கவேலு. | |
22 | 721 | விழிவாசல் திறந்து வழிமேல் கோலமிட்டேன்./ இதயக் கூட்டினுள்ளே பருவமழைச் சாரல்./ வழித்துணையாய் வா வாழ்க்கைப் பயணத்திலே./ என்னை அழைத்துச்செல் உன்னோடு அணைத்துக்கொள்./ ....பாலு தியாகராசன்..... | |
23 | 273 | ஆளில்லா நடுச்சாமம் அரவமில்லா நிலையம்/ கார்க்கால மழையிரவில் யார்க்காகக் காத்திருப்பு?/ ஊர்பார்க்கத் திரும்பிப்போ ஊதாரிகளை நம்பாதே/ உறவோடு சேர்ந்திருந்தால் உயர்வாழ்வு கிடைத்திடுமே!/ கோவிந்தம்மாள் ரெத்தினம் | |
24 | 710 | காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளும்/ அத்துமீறிப் பறிக்கப்பட்ட எம் தாய்மண்ணும்/ மறைந்து போகும் நம் பாரம்பரியங்களும்/ காலமாற்றத்தால் மீண்டுவர காத்திருப்பு தொடரும்/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
25 | 722 | உன்னைத் தேடி துடிக்கின்ற உள்ளம்/1 கலங்கிய விழியோடு தளும்பும் நீரோடு/2 காத்திருந்த கணநேரம் கனமாக மனதில்/3 வாடும் இதயம் வரவினால் வாழும்/4 சுஜாதா அருணாச்சலம் | |
26 | 207 | உள்ளத்தின் கதவுகளை மெல்லத் திறந்தால்/ உண்மை அன்பை இதயம் உணரும்/ காத்திருக்கும் பொழுதுகள் இன்ப மழையாய்/ நேசம் பொங்கிட நினைவுகளாய் பொழியும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
27 | 476 | உதிர்ந்துகொண்டே இருக்கின்றன உன்னாசை மொழிகள்/ பகிர்ந்து கொள்வேன் பார்க்கும் கணத்தில்/ கன மழையும் கனலாய்த் தெரிக்குதே/ கண்மணி காத்திருக்கிறேன் கதகதக்கும் உன்னணைப்பிற்கு/ வ பரிமளாதேவி | |
28 | 434 | ஐயிரண்டுத் திங்கள் கருவறையில் ஓய்வெடுத்து/ அழகோவியமாய் பூமிக்கு அடியெடுத்து வைக்கும்/ புதிய அவதாரமான மழலையின் வருகைக்கு/ காத்திருக்கும் உறவுகளோடு அன்னையின் உணர்வுகள் // மீனாட்சி சுந்தரம் | |
29 | 424 | காக்க விடுவதில்லை கடமை அழைக்கும் பாக்க விடுவதில்லை பங்கெடுக்கும் குடும்பம் ஒதுக்கிய நாட்கள ஒவ்வொன்றாகப் போக.. காத்திருப்பு கானலே காலன் வந்தபின்னே குயில்.மு.இரசியாபேகம் | |
30 | மாலை நேரம் தகிக்கும் வெப்பம்/ காதலிக்காக காத்திருப்பு வியற்வை குளியலில்/ அழகான நினைவுகளில் திளைத்தபடி நான்/ கவலையை போக்க விரைவில் வருவாளா?/ இளங்கோ | ||
31 | 204 | கொட்டும் மழையிலே குடையுடன் கன்னி// கொண்டவன் வருவானோ என்றேதான் எண்ணி// விழிகள் பூத்திருக்கத் தவிக்கிறாள் காத்திருந்தது// காலமும் மலரும் காத்திருப்பும் தீரும்// ஆஸாத் கமால் | |
32 | 450 | உணர்வுகளில் உவகை இருப்பின் காத்திருப்பு சுகமாகும் வலியிருப்பின் காத்திருப்பு சுமையாகும்! சுமைகளோ சுவைகளோ ஏற்பது மதியாகும் காத்திருப்பின் உணர்வுகளை புரிவதே சரியாகும்! ரேணுகா சுந்தரம் | |
33 | 386 | மழையோ வெயிலோ அவளுக்குப் பொருட்டல்ல/ மனம்நிறை மன்னவன் வருநாளை எதிர்நோக்கி/ நித்தமும் காத்திருப்பு நெடுந்தொடரி வழித்தடத்தில்/ சித்தமும் கலங்குகிறாள் சிந்தையும் மிகநொந்தாள்/. தென்கரை தாயுமானவன். | |
34 | 381 | விழிகளில் மழையும் எண்ணத்தில் வெயிலும்/ நினைவினில் எதிர்பார்ப்பும் கனவாக காட்சிகளும்/ நனவாகிட காத்திருந்தே நங்கையிவளும் இருக்கையானாலோ/ நாளைய பொழுதும் கனிந்திட எண்ணுகிறாளோ/ எம்.ஜே.எம்.சப்ரி | |
35 | 463 | புகைவண்டி நிலையத்தில் தனிமையில் தவிப்புடன் / வருகிறேன் என்றான் இதுவரை வரவில்லை! காதலில் காக்க வைத்த பாவத்தை இப்போது சேர்த்து வழங்குகிறான் போலும்/ அரவிந்தன் தஞ்சை | |
36 | 447 | ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் நான், பேருந்தில் வருகிறது உன் காதல், தவறு யாரிடமென்ற புரிதல் இன்றியே, வலியோடு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை ! கருவேல் பாண்டியன் ராஜூ | |
37 | 744 | காதல் கணவனுக்காக கண்விழித்து காத்திருப்பு/ கைநழுவிய காதலுக்காக காலமெல்லாம் காத்திருப்பு முத்தொன்று முகிழ்க்க பத்துமாதம் காத்திருப்பு/ கண்ணீர் கலந்தாலும் காத்திருப்பில் சுகமிருக்கு. கவிஞர் கேசவதாஸ் | |
38 | 257 | அடைமழையில் அடங்காத கண்ணீருடன் கன்னியவள்/ ஆளரவம் அடங்கிய வேளையிலே வேல்விழியாள்/ அமைதியுடன் அமர்ந்தாலே அண்ணலவன் அருகில்வர/ அந்தரங்கமாய் அளவளாவ சுகமான காத்திருப்போ./ இந்திராணிதங்கவேல் | |
39 | 464 | நினைத்த உள்ளம் உனக்காய் என்றும் நிம்மதி இன்றி தினமும் தவித்து எங்கே எப்போ வருவாய் என்று அங்கம் நடுங்கி விழிகள் ஏங்கும் ராஜ்பாரதீ | |
40 | 510 | காதலன் வருகைக்காக காத்திருக்கும் விழிகள்/ மங்கையவள் சிந்தையில் காதலனின் நினைவுகள்/ மனதிலே எண்ணற்ற கனவுகள் சுமக்கிறாள்/ காதலெனும் ஊற்றில் இதமாய் நனைகிறாள்/ ராதாமணி | |
41 | 668 | இணையாத இணைகோடாய் புகைவண்டியின் பாதையும்/ விடை தெரியாத மர்மமாய் எதிர்காலமும்/ அலை மோதும் கடலில் கரைச்சேர/ காத்திருக்கும் கப்பலாக தனித்திருக்கும் மங்கை/ ஏஞ்சல்சோபிதா | |
42 | 716 | அவனின் உருவம் அவளின் மனதில் // 1 மழையே பொழிந்தாலும் அழியாது எளிதில் // 2 தனிமைச் சுவைக்குது உந்தன் வரவில் // 3 காத்திருப்பேன் என்றும் இன்பக் கனவில்.// 4 - நாகை. ஹாஜா | |
43 | 317 | தூறல் ஒருபுறம் துவண்டது அவள்மனம் சாரல் காற்றில் தவித்தது அனுபவம் புகைவண்டிச் சத்தம் கேட்காது இருப்பதும் ஆயிரம் கேள்விகள் வந்தது பயத்திலும்... க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
44 | 465 | காலம் கடத்தும் நிகழ்வல்ல காத்திருப்பு வாழும் மனங்களுள் வாதிடும் நேரமது போதல் எண்ணங்களை முனைமழுங்கச் செய்தே காதல் சுவடுகளைக் கணிக்கின்ற நேரமது. இரா.வெங்கடாசலம் | |
45 | 718 | காலம் கடந்தாலும், கோலம் கலைந்தாலும்,// கண்ணே உன்னை நானும் காத்திருப்பேன்!// மேலான காதலினால், மேகம் பொழிகையிலும்,// குடையோடு உன்னை, எதிர் பார்த்திருப்பேன்!// கீழ்கரவை குலசேகரன், இலங்கை | |
46 | 373 | புகையிரத நிலையத்தில் புகைமூட்டத்தின் இடையிலே/ புன்னகை சிதறிப்போய் பொழுதும் நகராது/ விழியோரம் கண்ணீரோடு விடையறியாது நிற்கிறேன்/ கண்ணாளன் வரவினை கண்ணிமைக்காது காத்திருக்கிறேன்!! ஜயந்தினி வாகீசன் | |
47 | 242 | காலம் கடந்தே பிறந்திடும் ஞானம்/ ஞாலம் முழுதும் சுற்றியே வந்த போதும்/ பொய்ம்மை மறந்து மெய்ம்மை வெளிப்பட/ காத்திருப்பு அவசியம் காலங்கள் தோறும்...... கவி செங்குட்டுவன் | |
48 | 707 | வழிகள் எல்லாம் மறையுதே கண்ணில் வழி ஒன்றில் வந்திடு கண்ணா.! விழிகள் இரண்டும் கரையுதே என்னில் விரல் கொண்டு துடைத்திடு மன்னா.! ✍️பா.ச.கண்ணன் | |
49 | 604 | தொற்றுப் போனதும் தொடர்வண்டி வந்திடும்// விட்டுப் போன காதலனும் வருவான்/ நம்பிக்கையில் நனைந்திடு வேதனையைத் துவட்டிடு// கவிஞர் கோவை ஆறுமுகம் | |
50 | 246 | நிலவின் வருகையில் விலகிடும் முகிலாக புலந்த பொழுதினில் மலர்ந்த தாமரையாக மழைவரும் நாளில் மங்கை அவளும் குடையின் நிழலில் காத்திருந்தாள் பயணமாக. செல்வம் செல்வகுமார் | |
51 | 021 | எண்ணங்களில் வர்ணம்பூசி கதைகள்பல பேசி/ வண்ணக் கனவுகளை வாரி இறைத்தவனே/ நீள்கவிதையாய் உன்நினைவுகள் நெஞ்சில் சுமையாக/ மழைநீரோடு கண்ணீர் மறைத்து காத்திருக்கிறேன். தனம்_மீனாட்சிநாதன், கவிதை 2713 | |
52 | 711 | தேடுகிறேன் தென்றலாய் உன்னை தேசமெங்கும் // போனயிடம் தெரியாமல் புலம்பவும் முடியாமல் // புழுவாய் துடிக்குதடா பூவான என்னிதயம் // எப்போது வருவாயோ? என்னுயிரைத் தருவாயோ? // நா . தமிழ் சுகு | |
53 | 717 | காதலன் தன் வரவு காணா காத்திருந்தாள் கண்ணிரண்டும் பூத்திருந்தாள் பைங்கிளியாள் பார்த்திருப்பாள் பருவ மங்கை கந்தசாமி நடேசன் | |
54 | 335 | காத்திருக்கிறேன் விட்டுச் சென்ற இடத்தில்// நினைவுகளைச் சுமந்து சென்ற நீ// மறக்கவோ, துறக்கவோ, தொலைக்கவோ முடியாமல்// மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையில்// பரமேஸ்வரி சண்முகம்.. | |
55 | 347 | ஊரோடு ஒதுங்கி மூட்டைகளும் நானும்/ துணைக்கு யாருமின்றி தொடர்வண்டிப் பாதைகளும்/ வெறுமையாய் வேதனைக்கு களிம்பு தடவுதடி/ காலமெலாம் காத்திருந்து கனக்குது இதயமும்/ வேங்கடலட்சுமி ராமர் | |
56 | 580 | தேசியக் கடமையை தோளிலே சுமந்து// நேசித்தே எல்லையில் நாட்டினைக் காக்க// விரைந்த என்னவன் வருகிறான் விடுமுறையில்// இரையும் புகைவண்டி பார்த்து காத்திருக்கிறேன்// சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய். | |
57 | 291 | காலங்கள் பல கடந்து சென்றாலும் / கோலங்கள் மாறி கோணங்கள் ஆனாலும் / நெஞ்சில் வைத்த காதல் நிலைமாறாததால் / நீ வருவாயென நிதம் காத்திருக்கிறேன் / ஜெயா தமிழினி | |
58 | 669 | எண்ணமே நீயாக வாழ்க்கையோ உனக்காக வாழ்ந்திடவே ஆசைகொண்டு இறுதி முடிவுடனே உன்னோடு கைகோர்த்து வாழ்ந்திட எண்ணியே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் வருகைக்காய் நஸீரா வசூக் | |
59 | 618 | காலைக் கதிரவன் கண் விழிக்க/ காதலுடன் வருவேன் காத்திரு என்றான்/ காலம் உருண்டு கார்மேகம் இருண்டது/ காணவில்லை அவனை கனக்கிறது இதயம்/ ஔவை. | |
60 | 475 | மனதில் நிறைந்து மகிழச் செய்தவனே/ நிலவாய் சிரித்து நினைவில் நின்றவனே/ வழிமேல் விழிவைத்து காத்து இருக்கிறேன்/ விரைவில் வந்திடவும் இங்கே தவிக்கிறேன்/ தங்க.ஜான்பீட்டர் | |
61 | 463 | காத்திருக்கும் பருவமகள் /1 நேற்றுவரை வராதவன் நெஞ்சினிக்க இன்றேனும்/2 காற்றாக வருவானா கைப்பிடித்து மகிழ்வானா/ ஊற்றாகும் இல்லறத்தில் உயிராக வாழ்வானா ?4 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
62 | 409 | புகைவண்டி வரும் நேரம் பேதையிவள்// பாதைகள் மேடைகளில் மழைத் தூறல்கள்// பல மணி நேரம் காத்திருப்பு// பசியும் தாகமும் சோர்வும் சேர்ந்ததுவோ// *************** க.சுதர்சனக்குரு. | |
63 | 613 | மனச்சுமையும் கைச்சுமையும் மனதோடு போராட/ மங்கையவள் காத்திருக்க மனதில் பயம்/ ஏங்கித் தவிக்குதே ஊரடங்கு சட்டத்தினால்/ ரயில்வர தாமதமோ குடையும் பறக்குதே/ ஜெயாசந்திரமோகன் | |
64 | 263 | கன்னியிவள் கனமழையில் காத்திருப்பது யாருக்காக// கடுகதியாய் வரவிருக்கும புகைவண்டியின் வருகைக்கா// எண்ணியவன் வருவான் என்ற எதிர்பார்ப்பா// ஏமாற்றம் உனக்கில்லை என்பேன் நான்// அன்பரசு சுமதி | |
65 | 726 | தொடரியின் ஒலியிலே உன் குரல்/ பிரிந்த தண்டவாளத்திலே புரியாத பிரியங்கள்/ காத்திருக்கையிலே காரணமின்றி கண்ணீர் வருகின்றது/ கண்டும் மறைந்த கானல்நீராக நினைவுகள்/ -காளிராஜ்பாலகணேஷ் | |
66 | 259 | கொட்டும் மழையும் குளிரும் வருத்தவில்லை / விழி நோக எதிர்பார்ப்பு ஓயவில்லை / நகரும் நேரத்திற்கு அவதி புரியவில்லை / ஏக்கத்திற்கு இன்னும் விடிவெள்ளி பிறக்கவில்லை....!!/ ஜெயலெட்சுமி | |
67 | 256 | காலங்கள் கடந்தாலும் ஊரடங்கு நீங்கவில்லை/ கன்னியவள் சொந்தவூர் கனவும் பலிக்கவில்லை/ கையில் பெட்டியுடன் கால்நடையாய் வந்தவள்/ காத்திருக்காள் குடைபிடித்து தொடர்வண்டி பயணத்துக்காய்/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
68 | 278 | கடுகதியில் மறைந்ததே கனவாக எந்தேசம்/ கனத்த மழையோடு கனமாக என்நேசம்/ காத்திருந்து காலங்கள் கானலாகிப் போகிறதே/ ஏங்கிடும் விடிவுகள் என்றுதான் கிட்டுமோ?/. கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ் | |
69 | 709 | முன்பதிவு இல்லாமல் நடைமேடை அமர்ந்துகொண்டே// தடம்போலே காத்திருப்பேன் காலமெல்லாம் உடனிருக்க// இணைக்கோட்டுப் பயணங்கள் இனிதாக இருந்திடவே// தவிப்பிலே நனைகின்றேன் குடைப்பிடித்து மறைக்கின்றேன்// தாழை. இரா. உதயநேசன் | |
70 | 674 | கடுகதியில் தொலைந்த எந்தன் இதயத்தை// காலங்கள் கடந்த பின்னும் காதலோடு// கன்னி நானும் கவலையோடு காத்திருக்கிறேன் // கண்ணாளனே வருவாயோ கண்ணீரும் துடைத்திடவே// இரா.தேவி | |
71 | 270 | தண்டவாளம் தவிக்கிறது தடம்பதியா வண்டியாலே !// அண்டைநாடு அயல்நாடு நம்நாடு எல்லாமும் !// திண்டாடும் மக்களுடைத் தெருக்கூத்துத் தெரியவில்லை ?/ பெண்ணவளே போய்விடு பேசாமல் வீட்டிற்கு !// தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைப்புதூர் . | |
72 | 283 | கடுங்குளிரில் கடுகதிக்காய் கனநேரம் காத்திருந்து/ காததூரம் கடப்பதற்காய் கனதியான பொதியுடனே/ கனமழையின் மத்தியிலே கனவுபோலே கடந்திடலாம்/ கார்காலம் நிலைக்குதே நாடெல்லாம் செழிப்பதற்கே/ ஜமுனாமலர் இந்திரகுமார் | |
73 | 226 | தொடரும் மழையிலே பார்வைத் தேடியதே/ / வராத தொடர்வண்டி காத்திருப்பைக் கூட்டியதே/ / காத்திருந்த நிமிடங்க ளில் எண்ணமெலாம் படபடப்பே/ / குடையைத் தாக்கும் காற்றின் வீச்சு/ / &&&&&&&&&&&&&&& இராம.சுதாகரன்.!! | |
74 | 421 | கல்யாணம் வரும்வரை காத்திருக்கும் காதல்/ பொருமை வாழ்க்கையில் புரிதல்கள் ஆயிரம்/ காத்திருப்புத் தந்திடும் கணக்கில்லாச் சந்தோசம்/ காலமெல்லாம் குறையாமல் கடலாகப் பொங்கிடுமே/ ---செம்போடை சோழன்--- | |
75 | 201 | விரைவாக வருவேன் விவாகம் செய்ய / விட்டுச் சென்றவனைக் காத்திருக்கும் கன்னியவள் / கடுங்குளிரிலும் நடுநடுங்கஎதிர்பார்த்து நிற்கிறாள்/ காதலன் வருவானோ கண்ணீரைத் துடைப்பானோ// புவனா சற்குணம் கனடா | |
76 | 596 | காத்திருப்பு இது மிகக் கடினமானது/ பூத்த மலரில் தேனருந்த வண்டு/ மூத்தவள் மணம் முடிய தம்பி/ காத்திருப்பதைப் பார் மிகப் பொறுமையாக சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை | |
77 | 399 | 🌹/ காத்திருப்பும் சுகமே காலதாமதமோ சோகமே!.../ 🌹/ எதிர்பார்ப்பும் மோகமே ஏமாற்றமும் மோசமே!.../ 🌹/ தணியுமா தாகமே தாவணியும் நனையுதே!.../ 🌹/ காலமும் விரயமே கன்னியும் கலங்காதே!.../ சாக்கை.பொன்னழகு. | |
78 | 261 | காத்திருப்பு எப்போதும் பொறுமையை சோதிக்கும் அமைதி காத்திடில் ஆனந்தம் கிட்டிடும் எதற்காக வேண்டுமெனினும் நாம் காத்திருக்கலாம் நமக்காக எவரையும் காத்திருக்க வைக்கலாகாது ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
79 | 289 | கொட்டும் மழையில் தொடர்வண்டி நிலையத்தில் / காதலனின் வரவுக்காக அவன் மேல் / அசைக்க முடியா நம்பிக்கை வைத்துக் / காத்துக் கிடக்கும் அப்பாவிக் காதலி / சியாமளாரகுநாதன் | |
80 | 562 | மழலையின் பிறப்பை எதிர்பார்க்கும் குடும்பம் / காதலியின் வருகையை நோக்கிக் காதலன்/ வாழ்ந்து முடிந்தவர் இயற்கையோடு இணைய/ காத்திருத்தல் இல்லாமல் இல்லாமல் கடந்திடாது வாழ்கை/ பா.பத்மநாபன் | |
81 | 564 | நீ வருவாயென நிலவை அழைத்தேன் நீண்டு கொண்டு போகின்றது இரவு தீண்டும் என் மனதில் ஏக்கம் உன் நினைவாகவே உறக்கம் இன்றி. இராசையா கௌரிபாலா, இலண்டன். | |
82 | 244 | எண்ணற்ற எண்ணங்களின் வலிமைத் துணிவே // தன்னம்பிக்கை கொண்டே விதியைத் துரத்து // விழிப்புணர்வு ஒன்றே போதும் துணைக்கு // காத்திருக்க நேரமில்லை பொறுமையும் உனக்கெதற்கு // கவிஞர் கோவை செல்லப்பன் | |
83 | 210 | வண்டியிலே வருவானென வாஞ்சையுடன் காத்திருக்க... வாராமல் போனதனால் வஞ்சியிவள் தவித்திருக்க... கொட்டும் மழையிலும் வாட்டும் நினைவிலும்... கண்ணீரும் அருவியாக தண்ணீரில் கலக்கின்றதே.... திருமதி சுப்ராணி சிவகுமார்....✍ | |
84 | 723 | கையசைத்து விட்டுப் பிரிந்தாய் அன்றுநீ/ ஊரெங்கும் கொரோனா எல்லையில் நீயங்கே/ நாட்டுக்குள்ளும் எல்லையிலும் எதிரிகளை வென்றிடும்/ அந்நாளிற்க்காக மழையிலும் வெய்யிலிலும் காத்திருக்கிறேன் - நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய் | |
85 | 578 | மன்னவன் நினைவுதனை மனதினில் சுமந்தப்படி// குறைவற்ற அன்போடும் கலங்கமற்ற காதலோடும்// கடந்தோடும் நொடிகளின் காத்திருப்பும் சுகமானதேன// பதிந்திடும் சுவடுகளாய் காலதேவன் ஏட்டினிலே// ...கவியாசகன்...!!! | |
86 | 708 | பனி படரும் மேனியிலே பரிதவிப்பு/ பால் போன் மனதினிலே காத்திருப்பு/ நீங்கிச் சென்ற காதலா கனிவுடனே/ நீயும் வா கை கோர்ப்போம்....// திருமதி பிரிந்தா புஷ்பாகரன் | |
87 | 654 | மிதமான சாரலின் இதமான குளிரில் தன்னந்தனியே காத்திருக்கிறாள் மங்கையொருத்தி இரயிலடியில்! காத்திருக்க வைத்தது தொடரியா அவளவனா! புலர்காலைப் பொழுதுவரை காத்திருப்பு நீளுமா! பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான் | |
88 | 692 | பூத்திருக்கும் மலராய் புன்னகை வரவு/ விரைவில் வந்திட வழி மேல்/ வழி வைத்தவளாய்க் கனவுகளோடு காத்திருக்கிறாள்!/ தொடர்வண்டியில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திட!/ முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு |
போட்டி முடிவுற்றது
89 | 745 | எதிர்பார்ப்புடன் காத்திருப்பு எத்தனை சுகம் / கொட்டும் மழையில் நடுங்கும் குளிரில்/ துணையின்றி நிற்கும் உனக்குத் தூரத்தே/ நல்ல செய்தி தூது வரும். க.சுலோஜனா |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக