பெ.தி.சுகுமார்.
06.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்-கற்பியல்
அதிகாரம் -- 119
" பசப்புறு பருவரல் "
●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
காதலர் விருப்பத்தால்,
உடன்பட்டேன், பிரிவிற்கு!
காதலரில்லாது பசலலை
யாரிடம் சொல்வேன்!
காதலர் உண்டாக்கிய
பெருமையோடு பசலை;
காதலரில்லாததால், உடம்பு
மேலூர்ந்து பரவிடுதே!
பரவிடும் பசலையைக்
கொடுத்தார் எடுத்தவரவர்;
பரவிய அழகையும்
நாணத்தையும் கவர்ந்து!
பரப்பி உள்ளத்தே,
கொண்டவரவர் சொல்லாடியும்;
பரவும் பசலையின்,
வஞ்சகம் படர்கிறதே!
படர்கிறது பரவிப்
பசலையும் உடனுக்குடன்!
படர்ந்த தலைவன்,
பிரியும் கணமதில்;
படரன்புப் பிரிவால்,
எனது உடம்பினில்;
படர் இருள்
போலப் பரவுதே!
பரவுது பசலை,
நீங்கிடில் கூடலும்;
பரவுது விளக்கொளி,
மங்கிய உடனே!
பரவும் இருளாய்ப்,
பரவுது பசலை!
பரவிக் கிடந்தேன்,
அவரைத் தழுவியே!
தழுவிக்கிடந்த யான்
சற்று விலகினேன்;
தழுவியது பசலை,
அள்ளிப் படர்ந்தது!
தழுவினாள் பசலை
நோயென்று சொல்கிறார்;
தழுவிய அவரிவளைப்
பிரிந்தாரென்று சொல்வதில்லையே!
சொல்லாப் பசலை,
பரவட்டும், எம்தலைவர்;
சொல்லட்டும் நலமதனால்,
பெறுவா ரென்றால்!
சொல்லட்டும் பசந்தேனென
அவர் பிரிவினை;
சொல்லி ஊரார்,
தூற்றாது இருந்தாலே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக