பெ.தி.சுகுமார்.
07.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்- கற்பியல்
அதிகாரம் - 120
" தனிப்படர் மிகுதி "
●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
தம்மை விரும்புவோர் ,
பேறுபெற்ற காதலர்;
தம்காதலை விரும்புவோர்,
பேறுபெற்ற பெண்கள்!
தம்மை விரும்புவதால்,
விதையில்லாக் காமநுகர்ச்சியை;
தம்மை விரும்பிப்
பெற்றவர் ஆகின்றாரே!
ஆகிவரும் மழை,
உயிரதனைக் காப்பது!
ஆகிவரும் தலைவர்
நல்லன்பு மழையாகுது!
ஆகிவரும் விருப்பத்தால்,
தலைவிக்கு இன்பமது;
ஆகிவரும் வாழ்வாகிச்,
செருக்காகிப் பொருந்துதே!
பொருந்தாது, விரும்பாத,
தலைவரால் பெண்ணும்;
பொருந்தாது போகிறாள்,
மதிப்புறு நன்னிலையும்;
பொருந்தாத விரும்பாத,
நிலையதும் பெருமையில்லை!
பொருந்தாது, விரும்பாது,
போகிறார் தலைவரே!
தலைவர்க்குச் செய்யன்பு,
எனக்கன்பு கிடைக்காது!
தலைவர்க்குப் பொருந்தாது,
எனக்கன்பு கிடைக்கவில்லை!
தலைவரும் தலைவியும்,
காட்டுமன்பு சமமாக;
தலைதாங்கு காவடித்தண்டாய்,
இறுபுறமும் இன்புறுமே!
இன்புறும் இன்பமது,
இர்வரது பக்கமின்றி;
இன்புற இயலாது,
காமக் கடவுளும்!
இன்பமில்லாத் துன்ப
அம்பைக் கொடிதாக;
இன்பமின்றி எய்திப்,
பிரவதையும் அறியானோ!
அறியாது காதலரின்,
பிரிவினைப் பொறுத்தும்;
அறிந்து செவியால்,
பிறவரைப் புகழ்ந்திடவும்;
அறிந்து பிரிதுயரைத்,
தாங்குநெஞ்சு வாழிய!
அறிவேன் கடலாகும்,
காமத்தை அடக்கணுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக