08.10.20 - அத்தியாயம் : 121 நினைந்தவர் புலம்பல் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 8 அக்டோபர், 2020

08.10.20 - அத்தியாயம் : 121 நினைந்தவர் புலம்பல்



பெ.தி.சுகுமார்.



08.10.20



<><><><><><><><><><><><><>

  " திருக்குறள் கவிதை "

   தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

         அதிகாரம் - 121

  " நினைத்தவர் புலம்பல் "

  ●●●●●●●●●●●●●●

  <><><><><><><><><><><><><>

இன்பமது கள்ளதனை

உண்டால் தானுண்டு!

இன்பமது காதலதை

நினைத்த அளவினில்!

இன்பமதைக் காணுகிறார்,

தலைவர் இனிதலைவியால்;

இனிக்கிறது நினைத்தாலும், பிறிதொன்றிலும் காணாததை!


காணாதது நினைக்கவில்லை

போலும் தலைவரும்;

காணாது நின்றிட்ட,

தும்மலது போல!

காணாத என்நெஞ்சில்,

நீங்காத் தலைவராக;

காணாநா னவர்நெஞ்சில்,

நிறையாகி உறைந்திருப்பேனா!


உறைந்திட்ட நெஞ்சில்,

இடந்தராத் தலைவருக்கு;

உறைந்திட்ட என்நெஞ்சில்,

நாணமில்லை போலும்!

உறைந்திட்டு இன்புற்ற

நாளெண்ணி வாழ்கிறேன்!

உறைநினைவது இல்லையேல் 

துறப்பேன் உயிரினையே!


உயிராகும் தலைவரின்,

நினைவென்னை வாட்டுது!

உயிரவரை நினையாது,

மறந்திடுதல் இயலாது!

உயிராகும் காதலர்,

சினங்கொள்ள மாட்டார்;

உயிராகும் தலைவரை,

எவ்வளவு நினைத்தாலுமே!


நினைப்பதற்கு நினைவேந்திடத்

தடையதனை இடாத;

நினைதலைவர் செய்யும்,

சிறப்பதுவும் இதுதான்!

நினைவால் நாமிருவர்,

வேறல்லரென்று சொன்னவரும்;

நினைவகற்றி, அன்பிலாது,

என்னுயிரை அழிக்கிறதே!


அழியா நிலவே ! 

இதயத்தால் பிரிந்திட்ட;

அழியா என் 

தலைவரைக் கண்களால்;

அழியாது தேடிக் 

கண்டிடும் வரையினில்;

அழியாதொளி வீசி,

மறையாது இருப்பாயே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages