11.10.20 - அத்தியாயம் : 124 : உறுப்புநலனழிதல் - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

11.10.20 - அத்தியாயம் : 124 : உறுப்புநலனழிதல்

 



பெ.தி.சுகுமார்.



11.10.20

<><><><><><><><><><><><><>

   " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

          அதிகாரம் - 124

   " உறுப்பு நலன் அழிதல் "

   ●●●●●●●●●●●●●

<><><><><><><><><><><><><>


பிரிவுத்துயர் கொண்டழுத

ஒளியில்லாக் கண்கள்;

பிரிந்தறியா மணக்குமலர்,

நாணும்படி ஆகியது!

பிரிவாற்றாமையால் அழுகண்கள்,

காதலரை விட்டு;

பிரிந்ததைப் பிறர்க்குச்,

சொல்வதாய் உள்ளதே!


உள்ளபடி தலைவரோடு,

கூடிப்பூரித்த தோள்கள்;

உள்ளபடி மெலிந்து,

பிரிவினை அறிவிக்குது!

உள்ளபடி வாடியே,

வளையல்களும் கழன்று;

உள்ளபடி இணைத்தழகு,

இழந்தது தோள்களே!


தோள்களின் தொய்வும்,

கொடுமையைப் பறைசாற்றுது;

தோள்களின் மெலிவு,

காதலரன்பற் பற்றவரென்றும்;

தோளினைப் பார்த்து,

ஊரார் பேசுபழி;

தோளிட்டுக் கேட்டு,

நானும் வருத்தமுற்றே!


வருந்துபெண் மெலிதோள்,

சொல்பழி தலைவரிடம்;

வருந்திடச் சொல்லி,

பெருமைகொள் நெஞ்சே!

வருந்மென் நெஞ்சே,

தழுவித் தளர்ந்ததில்;

வருந்துநெற்றிப் பசலையால்,

படர்ந்தழகு குன்றியதே!


குன்றாது தலைவியைத்

தழுவிய கைய்யிடை;

குன்றாது புகுந்திட்டக்,

குளிர்க்காற்று பொறுக்காது;

குன்றாது குளிர்க்கண்கள்,

பசலை நோயினால்;

குன்றாது படர்ந்து,

நிறமும் மாறியதே!


மாறாது ஒளிரும், 

நெற்றியில் பசலையும்;

மாறிப் படர்ந்ததைக்,

கண்டிட்டு முன்னரே;

மாறிய கண்களில்,

படர்ந்திட்ட பசலையும்;

மாறாது மேலும்,

படர்ந்து வருந்துதே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages