12.10.20 - அத்தியாயம் : 125 : நெஞ்சொடு கிளைத்தல் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 12 அக்டோபர், 2020

12.10.20 - அத்தியாயம் : 125 : நெஞ்சொடு கிளைத்தல்

 



பெ.தி.சுகுமார்.



12.10.20


<><><><><><><><><><><><><>

 " திருக்குறள் கவிதை "

  தினம் ஒரு அதிகாரம்

     அதிகாரம் -- 125

இன்பத்துப்பால் - கற்பியல்

   " நெஞ்சொடு கிளத்தல் "

    ●●●●●●●●●●●●●

 <><><><><><><><><><><><><>


நெஞ்சமே! தலைவரது

பிரிவால் வருந்துமென்;

நெஞ்சமே! நோய்க்கு

மருந்து ஒன்றையும்;

நெஞ்சமே! எத்தன்மை

யாயினும் உரைப்பாயாக!

நெஞ்சமே வாழ்க!

தலைவரும் பிரிந்தாலுமே!


பிரிந்தாலும் அவரை,

நினைத்து வருந்துகிறாய்!

பிரிவிலும் நினைத்து

வருந்துவது அறியாமை!

பிரிவால் துன்புறுத்தும்,

தலைவரிடம் உன்னைப்போல்;

பிரிந்ததை நினைக்கும்

பண்பது இல்லையே!


இல்லாது துன்புறுத்தும்,

தலைவரிடம் கண்களையும்;

இல்லையென்னாது

ஆழைத்துச்செல், கண்டிடவும்;

இல்லையென்றால் காண

விரும்பியகண் முடியாததால்;

இல்லாத அவருக்காக,

என்னையது தின்றுவிடுமே!


விட்டுச் சென்றவரும், வராது வெறுக்கிறார்;

விட்டிடுவோம் என்றெண்ணி,

கைவிட முடியுமா!

விட்டதனால் ஊடினால், 

உடன்கூடிட வருவாரிடம்;

விட்டு ஊடலால், 

கூடமாட்டாய் அவருடனே!


அவருடன் தெளிந்து,

கூடாவுனக்குப்

பொய்க்கோபமேன்!

அவர்மீதுள்ள ஆசையையோ,

நாணத்தையோ விட்டுவிடு;

அவருக்காக இவைபொறுக்கும்

வல்லமை எனக்கில்லை!

அவருக்காக அவர்பின்,

செல்லுவது மடைமையே!


மடைமையாய்த் தேடுகிறாய், உன்னுள்ளே அவருள்ளார்!

மடைமையாய்த் தேடுகிறேன், பொருள் தேடச்சென்றவரை!

மடைமையால் வருந்துவதால்,

பிரிந்தவரை எண்ணியும்;

மடைமையால் அகம்புறத்து,

அழகையும் இழக்கிறேன்!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages