பெ.தி.சுகுமார்.
12.10.20
<><><><><><><><><><><><><>
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்- கற்பியல்
அதிகாரம் - 126
" நிறையழிதல் "
●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
<><><><><><><><><><><><><>
தலைவரிடம் கொண்ட
காதல் கோடரியால்;
தலைவரென் நாணத்
தாழிட்ட நிறைகதவுடைத்தார்!
தலைவரிடம் கொண்ட
காதல், நள்ளிரவிலும்;
தலைவரெண்ணிக், கருணையற்று,
வேதனை செய்கிறதே!
செய்யுமந்த வேதனையை,
முயல்கிறேன் மறப்பதற்கு!
செய்கையின்றி வெளிப்படுது,
தோன்றும் தும்மலாக!
செய்யா நிறையுடையோன்
என்றிருந்தேன் மறைகாமம்;
செய்திட்டதும் மீறி,
அறியுமாறு வெளிப்பட்டதே!
வெளிச்சென்ற தலைவருடன்,
செல்லாப் பெருந்தன்மை;
வெளிச்சென்றதால், காமநோய்
கண்டவரிடம் இராது!
வெளிச்சென்ற தலைவருடன்,
செல்லுமாறு தூண்டுகின்ற;
வெளிச்சென்றால் காணும்,
காமநோய் கொடியதே!
கொடியதாகா நான்
விரும்பும், தலைவர்;
கொடியதாகா நான்
விரும்பும் செயல்களை;
கொடுமையின்றிச் செய்து
மகிழ்வித்தல் நாணமெனும்;
கொடுமை இருப்பது,
அறியாமல் இருந்திருப்பேனே!
இருந்து அரணாகும்,
நிறைபொய் பேசி;
இருந்து, பிரிந்துபின்
வந்து பேசும்;
இருந்திடாப் பணிவுமொழியால்,
உடைகிறது நிறைவதுவாய்!
இருந்து கூடலொதிக்கி,
ஊடலதை எண்ணினேனே!
எண்ணினாலும் நெஞ்சமது
கூடியதும் கூடலானேன்!
எண்ணமது கொண்டாலும்,
நெருப்பிலிட்ட நெய்போல;
எண்ணவர் விருப்பம்,
மாறாக ஊடல்;
எண்ணங் கொண்டிருக்க,
முடியுமா என்ன?
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக