14.10.20 - அத்தியாயம் : 127 : அவர்வயின் விதும்பல் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 14 அக்டோபர், 2020

14.10.20 - அத்தியாயம் : 127 : அவர்வயின் விதும்பல்



பெ.தி.சுகுமார்.



12.10.20



<><><><><><><><><><><><><>

     " திருக்குறள் கவிதை "

      தினம் ஒரு அதிகாரம்

 இன்பத்துப்பால் - கற்பியல்

            அதிகாரம் - 127

  " அவர்வயின் விதும்பல் "

  ●●●●●●●●●●●●●●

  <><><><><><><><><><><><><>


அவர் வரும்வழி 

பார்த்தகண்கள் ஒளியிழந்தன!

அவரெண்ணிக் குறியிட்ட, 

விரல்கள் தேய்ந்தன!

அவரெண்ணியே வாழ்கிறேன் 

உயிரோடு தோழி!

அவர்மறந்தால் தோள்

மெலிந்து கழன்றொழியுமே!


ஒழிந்தவர் ஊக்கமுடன்,

வெற்றிக்காகச் சென்றார்!

ஒழிந்தவர் சென்றவரை

விரும்பி உயிரோடிருக்கிறேன்!

ஒழிந்தந்த தலைவரது,

வரவினை எண்ணி;

ஒழிந்தவரைக் காமமது, 

வரவேற்க முந்துதே!


முந்திப் பிரிந்த,

தலைவரைக் கண்டால்;

முந்திய தோள்படர்,

பசலையும் மறையும்!

முந்தி வந்திடும்,

தலைவர் வந்தால்;

முந்தித் துயர்,

நீங்கத் துய்த்திடுவேனே!


துய்ப்பேன் இன்பம், 

அவரிடம் ஐம்பொறிகளாலும்!

துய்த்திடும் கண்ணான

தலைவர் வந்தால்;

துய்த்திட விடுவேனா,

தழுவுவேனா, கூடுவேனா!

துய்த்திடுவேன் தலைவியுடன், 

மாலையில் இல்லத்திலே!


இல்லம் அடைவேன், 

வேந்தன் வென்றபின்!

இல்லம் விரைவேன்,

போர்க்களம் விட்டேகி;

இல்லம் அடைந்து, 

தலைவியுடன் மகிழ்வேன்!

இல்லத்திலேங்கும் தலைவிக்கு,

ஒருநாள் ஒருவாரமாகுதே!


ஆவது கெட்டு,

ஆற்றாது அழிபட்டாள்!

ஆகாத நம்மைப்

பெறுவதால் பயனில்லை!

ஆகாதழிந்த அவரைப்

பெறுவதாலும் பயனில்லை!

ஆகாதவரைப் பெற்றதாலும்,

கூடிலிலும் பயனில்லையே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages