பெ.தி.சுகுமார்.
15.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 128
" குறிப்பறிவித்தல் "
●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
உள்ளமது பிரிவாற்றாமையை,
மறைத்தாலும் மையிட்ட;
உள்ளமதைக் காட்டும்
கண்கள் குறிப்புணர்த்துது!
உள்ளம் கொள்ளழகும்,
இணைதோளும் கொண்ட;
உளங்கொண்ட தலைவிக்கு,
மடைமையும் உள்ளதே!
உள்ளபடி நூல்
காட்டும் மணியொத்து;
உள்ளத்துள் பிரியாதிருக்க
விழையும் குறிப்புள்ளது!
உள்ளிருக்கும் மனமதை,
மறைத்திட்ட பூவரும்பாய்;
உள்ளத்துப் புன்ம்றுவல்,
கூடல் குறிக்குதே!
குறித்திடும் சிறுபார்வையும்,
புன்னகையும் தலைவியிடம்;
குறித்திட்ட மருந்தொன்று,
துயர் தீர்க்கவும்;
குறித்திட்டு அவளிடம்
உண்டெனக் காட்டுது!
குறித்திட்டுப் புரியுது,
தலைவனின் கூடுதலுமே!
கூடுகிறாள் பிரிவுத்
துயர், நீங்கிடவும்;
கூடுகிறார் அன்பு
காட்டிப் பிரிந்திடவும்;
கூடுதலின் உட்கருத்தைக்
கூடுதல் காட்டுகிறது!
கூடிக் குளிர்நீர்த்
துறைத்தலைவன் பிரிவானே!
பிரிவானிவன் என்றுணர்ந்த
வளை கழலுது!
பிரிவானின் குறிப்பைக்
கூடல் காட்டுகிறது!
பிரிவானின் தலைவன்,
நேற்று, எனினும்;
பிரிந்தேழு நாட்களாகக்,
கண்ணுக்குத் தெரியுதே!
தெரியுமவள் வளையும்,
தோளும் அடிநோக்கி;
தெரிகிறது குறிப்பாக,
உடன்போக் குணர்த்தி!
தெரிவித்து, அறிவிக்கும்,
பிரியாமை யாசித்தல்;
தெரிவித்து அழகூட்டுது,
பெண்மையின் நாணத்தையே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக