17.10.20 - அத்தியாயம் : 130 : நெஞ்சொடுபுலத்தல் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 17 அக்டோபர், 2020

17.10.20 - அத்தியாயம் : 130 : நெஞ்சொடுபுலத்தல்



பெ.தி.சுகுமார்.



17.10.20



<><><><><><><><><><><><><>

  " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

         அதிகாரம் - 130

   " நெஞ்சொடுபுலத்தல் "

   ●●●●●●●●●●●●●

<><><><><><><><><><><><><>


நெஞ்சே! தலைவரது 

நெஞ்சம் நம்மை;

நெஞ்சாற நினையாது,

அவருக்குத் துணையாகுது!

நெஞ்சோடறிந்தும் எனக்குத்

துணையாகா அவரையே;

நெஞ்சில் நினைத்துக்

கொண்டிருப்பது எதனாலே!


எதனால் நம்மில், அன்பில்லாதவரிடம் செல்கின்றாயே!

எதனாலுனது விருப்பப்படி,

அவரிடம் செல்கிறாய்!

எதனாலென் றறிவேன்,

துன்பத்தால் கெட்டவர்க்கு;

எதனாலும் உலகில்,

நண்பரில்லை என்றுணர்ந்தே!


உணரா நெஞ்சது, 

கண்டதும் ஊடலுற்று;

உணர்ந்தறிய மாட்டாயுனக்கு,

ஊடல்பற்றிச் சொல்வாரில்லை!

உணரா நெஞ்சு, 

பிரிவாற்றாமைக்கு வருந்துகிறது!

உணராது உடனிருக்கையில், பிரிவுக்கு அஞ்சுகிறதே!


அஞ்சலால் நெஞ்சினுக்கு,

நீங்காத துன்பமுண்டு;

அஞ்சிப் பிரிந்தவர்,

தவறினை நினைக்கையில்;

அஞ்சா நெஞ்சே,

தின்பதாக வருத்தியது!

அஞ்சா மட 

நெஞ்சே மறந்ததேனே!


மறந்தேன் உயிரினும்

மேலான நாணத்தை;

மறந்து இகழ்ந்தேனவரை,

இழிவாய்ப் பண்பினை;

மறக்காது துன்பம்

வந்தபோது நீக்கிடவும்;

மறவாநெஞ்சு துணையானால்,

எதற்குத் துணையே!


துணையாகும் நெஞ்சு,

தமக்கு உரிமையாக;

துணையாக உறவற்று

இருக்கையில் தலைவரின்;

துணையாகா நெஞ்சம்,

உறவற்று இருப்பது;

துணையின்றித் துயருற்று,

இருக்கும் இயல்பாகுமே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages