19.10.20 - அத்தியாயம் : 132 : புலவி நுணுக்கம் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 19 அக்டோபர், 2020

19.10.20 - அத்தியாயம் : 132 : புலவி நுணுக்கம்



பெ.தி.சுகுமார்.



19.10.20


<><><><><><><><><><><><><>

   " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால்- கற்பியல்

           அதிகாரம் - 132

      " புலவி நுணுக்கம் "

      ●●●●●●●●●●●

<><><><><><><><><><><><><>


பெண்களும் கண்களால்,

உன்னைப் பொதுப்பொருளாக்கி;

பெண்களும் கண்டு,

பருகி மகிழ்கிறார்கள்!

பெண்ணேயுன் மார்பினைத்,

தீண்ட மாட்டேன்!

பெண்களுன்னைப் பார்த்தவுடன்,

ஆசைக்குநீ காரணமே!


காரணமின்றித் தலைவரோடு,

கூடிப் பேசாதிருந்தேன்;

காரணமாய் வாழ்த்துவேன்,

என்றெண்ணித் தும்மினார்!

காரணமாய்ப் பூவைச்

சூடிக் கொண்டாலும்;

காரணமாய்க் காட்டிட,

ஒருத்திக்கு என்றிடுவாளே!


என்றும் யாரையும்,

விடவும் நேசிக்கிறேன்;

என்றதைத் தவறாக,

யாரைவிட யாரைவிட;

என்று கேட்டு,

ஊடல் கொண்டாளவள்;

என்றதால், சொன்னேன்

இப்பிறவியில் பிரிவில்லையென்றே!


பிரிவில்லை இப்பிறவியில்,

என்றால் மறுபிறவியில்;

பிரிவதுவும் உண்டென்று,

கண்ணீர் பெருக்கினாள்!

பிரிவினில் நினைத்தேன்

என்றதால், மறந்ததால்தான்;

பிரிவினில் நினைத்தீர்,

ஏன் மறந்தீரே!


மறந்தால் சினந்து,

தழுவாது ஊடினாள்!

மறந்தவாறு தும்மினேன்,

வாழ்த்தினாள் மறுகணம்!

மறக்காமல் யார்

நினைத்தாரென ஊடினாள்!

மறக்காமல் தும்மலையும்,

அடக்கினேன் மறைத்திடவே!


மறைக்கிறீர் தும்மலை,

நினைக்கிறாள் ஒருத்தியும்;

மறைக்கிறாரோ அதையென்று, 

கூறி அழுதாள்!

மறைக்கிறீர் பழக்கமாய்

ஊடலறுத்துக் கூடுவதாய்!

மறைக்கிறீர் என்னழகை

ஒப்பிடுகிறீரென்று சினக்கிறாளே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages