20.10.20 - அத்தியாயம் : 133 :ஊடலுவகை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

20.10.20 - அத்தியாயம் : 133 :ஊடலுவகை



பெ.தி.சுகுமார்.



20.10.20


<><><><><><><><><><><><><>

       "திருக்குறள் கவிதை "

       தினம் ஒரு அதிகாரம்

  இன்பத்துப்பால்- கற்பியல்

            அதிகாரம் -133

            " ஊடலுவகை "

            ●●●●●●●●●

  <><><><><><><><><><><><><>


தவறில்லை என்றாலும்,

ஊடல் செய்பவர்;

தவறாது இன்னும்,

அன்பு செலுத்திடத்தான்!

தவறினால், சிறு

ஊடலால் அன்பதுவும்;

தவறினால் ஊடலதால்

அன்பு அதிகரிக்குமே!


அதிகரிக்கும் அன்பும்

காதலரிடம் ஊடலினால்;

அதிகமாகி,நிலத்தொடு

நீர்கலந்த தாகிறது!

அதிகமாகும் இன்பமது,

தேவலோகத்திலு மில்லை!

அதிகமாகும் ஊடலும்,

உள்ளத்தை உடைக்குமே!


உடைக்கும் படையதுவும்,

ஊடலதுள் உள்ளது!

உடைக்கும் ஊடலிலும்,

தழுவாது இருப்பதிலும்;

உடையா இன்பமதும்,

தழுவி இருக்கிறது!

உடைத்துச் செரித்ததும்,

தான்பின்பு உண்ணணுமே!


உண்பதில் முன்னுண்டது,

செரித்ததன் பின்பாக;

உண்ணுதலால் சேர்ந்திடும்,

இன்பமது போல;

உண்டு சேர்ந்து,

மீண்டும் மகிழ்ந்திடாது;

உண்டாகும் ஊடலது,

இன்பத்தைத் தந்திடாதே!


தந்திடும் வெற்றியைத்,

தோற்றவர்க்கு ஊடலில்;

தந்திடும் உண்மையும்,

கூடலில் தெளிந்திடும்!

தந்திடும் இன்பமும்,

வந்திடும் வியர்வையால்!

தந்திடுமா கூடலதும்,

ஊடலின்பின் மீண்டுமே!


மீண்டும் பணிந்திட்டு

ஊடலதைத் தணித்திட;

மீண்டும் நீளணும்,

வளரணும் இரவதும்!

மீண்டிடும் இன்பமும்,

ஊடலுக்குப்பின் காதலர்க்கு!

மீண்டும் கூடியும்,

மகிழ்ச்சியும் பெருகுமே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages