01.08.20-சுமைதாங்கிகள் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

01.08.20-சுமைதாங்கிகள்












Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

698

கல்விக் கற்றவளும் அடுப்பனைச் சுற்றுகிறாள்//

ஆயுள் கைதியாய் ஆண்டவன் படைத்தானோ//

தாலாட்டு ஒருபக்கம் கணவன் மறுபக்கம்//

வீட்டு வேலைகளில் விடுப்பில்லா தொழிலாளிகள்//


தேனி ஆ.சுந்தர்

2

261

பெண்கள் நாட்டின் கண்கள் என்பர்

இவர்கள் இன்றேல் உலகில் ஏதுமில்லை

கணவரை மனதிலும் குழந்தையை வயிற்றிலும்

சுமக்கின்ற குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கிகள் !


~ வள்ளல் இராமமூர்த்தி

3

697

வெளியில் காட்டா வலிகளைச் சுமந்து / 

தேவைகள் யாவும் செய்து மகிழும் / 

அம்மா அப்பா உறவுகள் என்றும் / 

தன் சுகம் துறந்த சுமைதாங்கிகளே...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை...

4

326

சுமையோடு சுமையாக வாழ்கின்ற வாழ்க்கையிலும்//

இமைபோல நம்மைக்காக்க தாயன்றி  வேறுண்டோ//

அமைந்திட்ட வாழ்வினிலே குமையாது வாழ்ந்திடவே//

உமையவளின் மறுபிறப்பும் அவளன்றி வேறுண்டோ//


நாகராசன் சின்னசாமி

5

344

பறக்கும் பட்டாம்பூச்சி நானென்று நினைத்தாயோ?

மாடு... கம்பீரமான காளை மாடல்ல..

கரத்தை இழுக்கும் கறவை மாடு

வாழ்ந்திடப் போராடும் பசு மாடாவேன்!


#எமா#

6

462

வாழ்க்கை என்னும் கடின பாதையை/

நாம் இலகுவாகக் கடந்து செல்ல/

தம்மையே அர்ப்பணிக்கும் தாய்,தந்தையர்/

கடவுளை மிஞ்சிய சுமைதாங்கிகள் அன்றோ/


தயா

7

614

வளர்த்து படிக்க வைத்த மகன்/

மருமகளின் உந்துததால் தனிக் குடித்தனம்/

மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன்/

அடைக்க திணரும் பெற்றோர்களே சுமைதாங்கிகள்/

விஜயலட்சுமி

8

715

சுகமான சுமையை சுமந்தாள்  கருவில் 

உளிகளின் வலிகளில் சிற்பமாய் சிரிப்பாள்

சுவையான உணவாக்குவாள் சமையலைறச் சிறையில் 

முகம் சுளிக்காத அன்பைப்  பரிமாறுவாள்.


அ.உமர்பாருக்.

9

482

பெண்கள் படும் வேதனை  அதிகமே /

சமையலும் நாளும் செய்கிறாள் அவளே /

குழந்தையும் கணவனையும் கண்ணாகவேகாத்திடுவாள்

துயரை வெளியில் சொல்லாத சுமைத்தங்கிகளே .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

10

201

பெற்றவரே சுமைதாங்கிகள் பாடுபட்டுப் பெற்றெடுத்த /

பிள்ளைகளைப் படிக்கவைத்து கடனுக்குமேல் கடனாளியாகி/

திருமணமான சிலநாளில் தனிக்குடித்தனம் மனனேக/

கடனடைக்க முடியாமல்  சுமைதாங்கியாய் அன்னைதந்தை//


புவனா சற்குணம்   கனடா

11

652

பெண்களே வீட்டில் மாபெரும் சுமைதாங்கிகள்./

எந்த ஊரடங்கிலும் விடுமுறை இல்லை./

உடல்நிலை குன்றினாலும் சமையல் நிறுத்தப்படவில்லை./

எல்லாம் தோள்களில் சுமக்கின்றனர் அன்னைமார்கள்./


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

12

463

அன்னையின் கருவறையில் சுமையாய் நான்.

வாழ்க்கைத் தடமே சுமையுடன் நகரும்.

இல்லறச் சுமையே இன்பம் தந்திடும் !

இறுதியில் நால்வர் சுமக்க நாம்.


அரவிந்தன் தஞ்சை

13

220

இல்லற இனிமை தவறாது நகர்த்தும்..

பெரும்பணி செய்துடும்,பேதையிவள் பரிதாபம்..

பகலெல்லாம் துளி ஓய்வின்றி கோதையிவள்..

கோடுத்த உதிரம் உயர்வென்று யாருணர்வர்..


வளருங்கவி அமுதன்

14

710

கட்டிய நாள்முதல் கணவனைச் சுமக்கிறாள்//

பத்து மாதங்கள் கருவினைச் சுமக்கிறாள்//

தன்னை வருத்தினும் தரணியே தாங்குவாள்//

மரணம் வரைக்கும் சுமைதாங்கி பெண்களே//


அம்பிகா ஸ்ரீகுமார்

15

483

அன்னையாய்த் தங்கையாய் அக்காவாய் மனையாளாய்/1

பன்முக உறவுகளாய் பாரத்தை சுமப்பவர்கள்/

பெண்களே சுமைகளை பெரிதாகச் சுமக்கின்றார்

தன்னலம் கருதாதப் பெண்களே சுமைதாங்கிகள் //4


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

16

605

சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதிடுவாள்/

தமைநம்பிக் காத்திருக்கும் குடும்பத்தைச் சுமந்திடுவாள்/

இமைக்குள்ளே வைத்தேதான் இனிதாகக் காத்திடுவாள்/

சுமைதாங்கியாய் இருந்தே சுகத்தைமட்டும் தந்திடுவாள்.


மஞ்சுளா ரமேஷ்

17

428

கதிருதிக்க விழித்தவளும் கருக்கலிலே படுக்கும்வரை

தன்னுடம்பை மெழுகாக்கி தளர்வினிலும் தைரியமாய்க்

குடும்பமென்ற கோவிலைத் தனியாளாய்த் தாங்கிடுவாள்

பிரதிபலன் பாராத பெருமைமிகு மூதாட்டி..


சுப்பிரமணியன் அன்புமலர்

18

618

நாடு முழுவதும் விடுமுறை வந்தாலும்/

நாளொன்று கூட  ஓய்வின்றி உழைத்து/

நலமுடன் நாம்வாழப் பாடுபடும் பெற்றோரே/

நம்மைத் தாங்கும் சுமை தாங்கிகள்/


ஔவை.

19

238

மணவாழ்வின் பரிசாக மணியாக மகன்கள்../

தோளிலும் மார்பிலும் தாங்கியச் சுமைகள்.../

மணமுடித்தும் மருமகளையும் சுமக்கவே சுகமே../

மகனின் வாரிசினையும் வாரியணைத்து சுமப்பேனே..///


இளந்தை சேது

20

221

குடும்பம் என்னும் கோயிலைச் சுமந்து

குழந்தைகளை வளர்த்து கொடையாக நாட்டுக்குத் 

தந்திடும் பெற்றோர் தம்வாழ்வுடன் குழந்தைகளையும் 

தத்தமது பேரன்பேத்திகளையும் சுமைதாங்கி வாழ்ந்திடுவர்


புஷ்பா கிறிஸ்ரி

21

266

சுமந்திடும் பாரம் சென்றிடும் தூரம்...

சுகந்தரும் கீதம் இல்லாளின் நாதம்...

இன்முகம் பூக்கும் இல்லமது சிறக்கும்...

சுமைதாங்கி சுமக்கும் சுகமான சுமையே...


...பூமகன்

22

258

ஈரைந்து திங்கள் கருவில் சுமைதாங்கி/

காலமெல்லாம் நெஞ்சிலும் சுமந்து- குடும்பத்தைத்/

தோளில் தாங்கும் பெற்றோரை-  முதியோர்/

காப்பகத்தில் விடாது, காக்கணும் பிள்ளைகளே!


                      தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.          

23

348

கடலுக்கு மீன்களைச் சுமக்கவே பாரமில்லை //

தாய்மைக்குத் தாக்குதல் இயல்பாகவே தூரமில்லை //

கவலைகளை ஒட்டாது அகற்றும் பெண்மைக்கு //

மிதவைத் தோணியாய் நிற்போமே நாமே //


உடுமலை ராமர்

24

616

உயிரளித்த உன்னத பொக்கிசங்களே

சுமை தாங்குவதில் நிகரில்லாதவர்களே

உங்களுக்கு சேவை செய்ய பூரிப்படைகிறேன்

போதும் சுமந்தது கொடுத்திடுங்கள் என்னிடம்.


கா.கேமலாரூபினி

25

445

இமைகள் மூடாமல் சுமைகள் தாங்கி//

வீட்டு பாரமெல்லாம் தன்னுள் வாங்கி//

சமைக்கும் பொழுதெல்லாம் கனலை தனதாக்கி//

விழுதாகி சுமக்கிறாள் சுமையை சுகமாய்//


                  மு.பிரபு, நெருஞ்சனக்குடி    

26

434

தனக்கென வாழாதத்  தியாகச் செம்மலாய்/

தன்னலம் கருதாது உழைக்கும் வள்ளலாய்/

நம்பிக்கை விதைத்திடும் கலங்கரை விளக்கமாய்/

கம்பீரமாய் நடைபோடும் பெற்றோரே சுமைதாங்கிகள்//


மீனாட்சி சுந்தரம்

27

345

இந்திய  நாட்டின் நிரந்தர சுமைதாங்கிகள்

எங்கள் உடையோ கோவணம் மட்டுமே

மழையாலும் பாதிப்போம் வறட்சியாலும்பாதிப்போம்

உலகிற்கே  உணவளித்து பசியோடு  விவசாயிகள்


வைர. நாகராசன்.


28

280

பசியென்று வரும் பிள்ளைகளுக்கு பாசத்துடன்//

உணவளித்து குடிகார கணவனின் அடிகளுடன்//

வீட்டு வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்//

விடிவெள்ளி மங்கையர்கள் எல்லோரும் சுமைத்தாங்கிகள்//


கோட்டீஸ்வரி ராமசாமி


29

450

கண்ணுக்குத் தெரியாத குடும்பச் சுமைகளையே/

சுகமாக எண்ணியே சுமக்கின்றழபெற்றோரின்/

அன்பை நாமறிந்துரதள்ளாமையும் இயலாமையும்/

அவர்ளை வாட்டுகையில் கண்ணாக காத்திருப்போமே!


ரேணுகா சுந்தரம்

30

688

தாய்மை கருவில் இருந்து பிறப்புவரை//

பிள்ளைகளை சுமந்து தாலி இட்டவனை//

நெஞ்சில் இருத்தி காலம் பூராவும்//

உயிர் பிரியும்வரை சுமைதாங்கியாக அம்மா//


கீத்தா ராமன்

31

347

இல்லத்தைச்  சீராக்கி, இதயத்தை நேராக்கி/

உண்பதற்கு சோறாக்கி, அறிவினைக் கூராக்கி/

அறும்புகள் செய்யும் குறும்புகள் ரசிப்பாள்/

சுமைதாங்கியே குடும்பம் நிமிர்ந்திட வைப்பாள்/


வேங்கடலட்சுமி ராமர்

32

259

கணவர் பிள்ளைகளை அன்பாய் பராமரித்து /

வெளியில் வீட்டில் வேலைகளை கவனித்து /

சூழ்ந்த சொந்தங்களை குறைகளின்றி அணுசரித்து /

மெழுகாய் ஒளிரும் பெண்கள் சுமைதாங்கிகளே.....!! /


ஜெயலெட்சுமி

33

204

பெண்ணாய்ப் பிறந்தே கண்ணாய்க் குடும்பத்தை//

காத்திடும் கரங்கள் கடவுளின் வரங்கள்//

துன்பத்தை தோளோடு சுமந்தே பொறுத்து//

தாங்கிடும் சுமைதாங்கிகள் அர்ப்பணிப்பின்

அகல்விளக்குகள்//


ஆஸாத் கமால்

34

243

பூமி அன்னைக்கு மரம் பாரமா //

கொடிக்கு காய் கனி பாரமா //

கடலுக்கு கொத்தளிக்கும் அலை பாரமா //

தாய்க்கு பெற்றெடுத்த குழந்தை பாரமா /


இந்திரா ஆனந்தன்

35

674

பிறந்ததும்   துறந்திட புகுந்ததும்  புதிதாகிட//

முடிச்சிட்ட மூன்றாமவன்  முதலும் முழுமையுமாகிட//

கட்டிலும் கணக்கிட தொட்டிலும் தொடர்ந்திட //

சுகமான சுமைத்தாங்கிளும் பெருமைகளின் சிகரமே//


இரா.தேவி

36

716

பெற்ற பிள்ளைகள் போற்றவும் இல்லை // 1

தினமும் அழுத்துது குடும்ப தொல்லை // 2

படுத்தால் உறக்கம் வருவதும் இல்லை //3

உண்ணும் உணவு என்றும் கவலை // 4


- நாகை. ஹாஜா

37

668

வியர்வை முத்துகளை நிலத்தில் வளமாக்கியும்/

வாழ வழியின்றி பட்டினியால் கலங்கும்/ 

உழைப்பவனின் பாரம்  அறியா தேசத்தில்/

இறுதிவரை சுமை தாங்கியாகவே வாழ்கிறான்/


ஏஞ்சல்சோபிதா

38

722

இதயத்தை தாங்கி இன்பத்தை தாங்கி/

குடும்பத்தை சுமந்து பலவலிகளை கடந்து/

இன்னல்களை  இடையூறுகளை தாங்கும் சுமைதாங்கி/

வாழ்வில் போராடும் பெண்ணே  சுமைதாங்கிகள்/


சுஜாதா அருணாச்சலம், திருப்பூர்

39

388

காணாமல் போன சுமைதாங்கிக் கற்களைக்

காணலாம் குடும்பங்களில் கண்ணியமான பெண்களாய்..

கொண்டவன் பிள்ளைகள் பேணிடப் பாடுபடும்

குடும்பச் சுமைதாங்கி ஆகிடும் தியாகிகளாய்...!


செண்பக ஜெகதீசன்...

40

207

காலமெல்லாம் சுமக்கும் கருவறைப் பெட்டகம்/

பிள்ளைகளைச் சுமந்த காலங்கள் சுகமே/

சோகங்களைச் சுமந்த நாட்களும் வரமே/

சுமைகளைச் சுமக்க இதயத்திலும் இதமே/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

41

317

மொத்த பாரத்தைச் சுமக்கும் பெண்கள்

முகத்தில் கலக்கம்  இல்லாமல் அவர்கள்

குழந்தைகள் வளர்த்து ஆளாக்கிய மனங்கள்

குதூகலம் இல்லாமல் இருக்கும் தெய்வங்கள்...


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி


42

562

பெண்ணே நீ பூமித்தாயை போல /

அவள் அனைத்து  உயிர்களையும் சுமப்பதுபோல்/

நீ குடும்பப் பொறுப்பை சுமக்கிறாய்/

நீயும் அவளும் ஒன்றுதான் இவ்வுலகில்/


பா.பத்மநாபன்

43

709

வானவில் உன் முமுதுகில் அமர்ந்து //

வலிகளே வாழ்க்கையென வரி விதித்து //

பிணி மூப்பு சாக்காடு பரிசுடன்//

கருவற கல்லறை பயணத்தில் அம்மா//


தாழை. இரா. உதயநேசன்

44

373

இளமைக் காலம் நலமாய் இருக்க/

துன்பம் களைந்து மகிழ்ச்சி கொள்ள/

கடைசி நேரமதில் தனியாக இருந்து/

சுமையைத் தாங்கும் வயதான காலங்கள்!!


ஜயந்தினி வாகீசன் 

45

564

சுகமான சுமைகள் தாங்கிடும் இதயம் 

எதையும் ஏற்கும் என்றும் அன்புடன் 

வளமாகும் வாழ்வில் ஒளிதரும் விளக்கு 

உளமார  வாழ்த்துவோம் உத்தரத்தில் வைத்தே.


இராசையா கௌரிபாலா.

46

707

ஐயிரு திங்கள் அடிவயிற்றில் சுமப்பவள்/

மணந்த நாள்முதல் மார்பில் சுமப்பவள்/

மாளும் நாளதில் மடியில் சுமப்பவள்/

கருமுதல் கடைசிவரை பெண்ணே சுமப்பவள்/


✍️பா.ச.கண்ணன்

47

568

பெண்மைக்கு பத்துமாதச் சுமையும் பேரானந்தமே//

 ஆண்மைக்கு அடித்தளச் சுமையும் ஆனந்தமே//

பிள்ளைக்கு புத்தகச் சுமையும் பூரிப்பாகுமே//

பூமியன்னைக்கோ புரிதலில்லா மக்கள் சுமையாகுமே!!


கு.ஜெயக்குமாரி/ஜெய்

48

250

வீடெனும் அஃறிணைப் பொருளுக்கு  இவர்கள்

இல்லமெனப் பெயர் பெற்றிடவே உழைத்தனர்

வரும் துன்பமதை சுமந்து மகிழ்வையே

வளரச்செய்த பெற்றவர்களே என்றும் சுமைதாங்கிகள்


செல்வலஷ்மி


49

613

எத்தனை   பெற்று சுமந்தால்  என்ன //

உழைத்துருகி உருக்குலைந்தே ஓடாய்ப்  போன//

சுமைதாங்கி கண்ணீரும் சுமைகளும்  மாறாது//

எந்நாளும் உனக்கு என்றுனக்கு  விடிவு..//


ஜெயாசந்திரமோகன்

50

244

பூமாதேவியின் மகள்களும் பிறந்தனரே சுமைதாங்க //

இறுதிவரை தியாகமாய்க் காப்பற்றுவதில் தெய்வங்கள் //

படைத்தவனும் கல்மனதால் படைத்திட்டப் பெண்களையும் //

மதிக்கும் பண்பு மானிடர்களுக்கும் பிறக்காது //


கவிஞர் கோவை செல்லப்பன்

51

578

மணநாள் தொடங்கியே வாழ்நாள் வரையிலும்//

குடும்பத்தைக் காத்திடும் சுமைத் தாங்கிகள்//

வையகம் போற்றிடும் பெண்மையின் தியாகத்தை//

விடியலும் தோற்றிடும்ரதாயவள் விழிப்பிலே//


...கவியாசகன்...!!!

52

680

மின்னலான பாய்ந்த கல்லை தேடிப்பிடிப்போம்//

ஆண்மைக் கொண்டு வெட்டித் தீர்த்தோம்//

எரியும் நெருப்பை வேடிக்கைப் பார்போம்//

சுமைத் தாங்கிகள் கனவோடு களைகிறார்கள்...


      மா.ஜீவன்ராஜ்

53

692

சுமக்க வேண்டிய கனவுகளைப் புதைத்து /

விட்டு சுமத்திடும் சுமைகளைத் தாங்கிடும்/

தூணாகிறாள்! உள்ளத்தில் எழும் ஆசைகளுக்கு/

உறக்கம் தந்துவிட்டு உறங்காமல் பாடுபடுகிறாள்!


முனைவர்.சு. சித்ரா , கரூர் ,தமிழ்நாடு

53

269

தாய்மையின் மெல்லிய பிஞ்சு கரங்கள்

நோகினும் வலியால் தொடரும்  பணிகள்

காணின் கண்கள் கலங்குதே நீரால்

சுமையை தாங்கும் தாய் தேய்வமே..!!


ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages