01.08.20-மல்லிகை மயக்கத்தில் மன்னவன் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

01.08.20-மல்லிகை மயக்கத்தில் மன்னவன்










Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

517

கரைகாணாக் காதலுற்ற இருமனம் இணைகையில்/

மங்கையவள் மடிசாய்ந்து மன்னவனும் மயங்குகிறான்/

விழிகளிலே புதுவிடியல் காணுகிறான்/


     -ஆனந்த் சுந்தரராமன்

2

698

மல்லுப்போரில் வீரனடி மாயவனின் மேனியடி//

ஓயாத அலைகளிலே ஒய்யார நடைப்போட்டு//

உள்ளம் பறிகொடுத்தேன் உன்னிடத்திலே//


தேனி ஆ.சுந்தர்

3

244

மெய்யான காதலும் காமத்தினைத் தேடாது //

களங்கமில்லா அன்புடன் வரவேற்கும் விழிப்புணர்வில் //

மல்லிகை மயக்கமும் புனிதமாகும் //


கவிஞர் கோவை செல்லப்பன்

4

247

மயக்கும் மங்கையவள் மல்லிகைப்பூப் சூடினாளோ /

மன்னவனோ கிறக்கத்தில் கிடக்கின்றான்/

மங்கையவள் இதழோடு இதழ்சேர துடிக்கின்றாள்/


த.காமராசு, தாராசுரம் கும்பகோணம்

5

212

மணக்கும் மல்லிகை மனதை மயக்கும்//

மன்னவன் காதலோ நெஞ்சம் நிறையும் //

நேசம் வளர்த்திடவே நித்தம்//


ஜெய வெங்கட்

6

715

மல்லிகைக்கும் ஓர் மயக்கம் உண்டு

மன்னவன்  அணைப்பில் வாசமுண்டு

கருவில் இரண்டாவது முறை பூப்பதுண்டு.


அ.உமர்பாருக்.

7

428

அன்றலர்ந்த அல்லி தோற்கும் அவள் அழகில் //

மல்லிகை சூடிய மங்கையவள்//

முத்தத்தில் மன்னவன் மயங்கினானே..//


சுப்பிரமணியன் அன்புமலர்.

8

450

மல்லிகை மயக்கத்தில் மன்னவன்

காதலலை சொல்வதில்,தயக்கத்தில் நின்றவன்/

சொன்னதனால் என்னவனாக மணமாலையை வென்றவன்/

முதலிரவில் மல்லிகையின் மயக்கத்திலே கிறங்குகிறான்/

ரேணுகா சுந்தரம்

9

344

அகம் மகிழ்ந்தால் முகம் மலருமாமே கண்ணா.. 

நம் முகங்கள் சிரிக்கின்றனவே...

மல்லிகையிவள் மகிழ்வித்தாளோ உனை?


#எமா#

10

409

துள்ளித் திரிந்தவளை அள்ளி அணைத்தே//

மல்லிகை மயக்கத்தில் மன்னவன்//

பள்ளி கொள்ளும் பாவனையில் இருக்கின்றானோ//

**********

க.சுதர்சனக்குரு.

11

462

மல்லிகை மயக்கத்தில மன்னவன்

ஆளுமையால் என்னை வென்றவன்/

நாணமே அறியாமல் இருந்தவன்/

முதன்முதலாய் வெட்கித் தலைகுனியும் தருணம் இதுவன்றோ

தயா

12

652

மதி மயங்கி மடியில் விழுந்திட்டான். மங்கையவள் முத்தமிட்டுத்தான் எழுப்ப வேண்டும்.

மலையையே சாய்த்திட்டாளே மங்கை.


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

13

241

மல்லிகையைச்  சூடி வந்த  மங்கையிடம்

மனதைப் பறிகொடுத்த  கண்ணாளன்

வார்த்தையின்றி தோய்ந்து விழுகின்றான் மடியில்.


அனுராதா நாகப்பன்.

14

220

மணநாள் இன்பம் மல்லிகை மலரோடு..

மங்கையிவள் மடியில் மன்னவன் கிறக்கத்தில்..

தூபமிட்டாள் முத்திதழ் முத்தமிட்டு..


வளருங்கவி அமுதன்

15

614

மழை பொய்த்து வாடும் பயிர்கள்/

வாழ வழியின்றி தவிக்கும் மக்கள்/

கவலையற்று உல்லாசமாய் மன்னன்/


விஜயலட்சுமி

16

273

புதுமண மயக்கம் தந்தது நெருக்கம்/

மல்லிகை மலரும் தருவது கிரக்கம்/

கிடைப்பது துறக்க இன்பமே!

(பி.கு:துறக்கம்-சொர்க்கம்)

கோவிந்தம்மாள் ரெத்தினம்

17

482

மயக்கும் மல்லிகை வாசம் வீசிடுமே/

மனைவித் தரும் அன்பு முத்தத்தில்/

மன்னவன் நெஞ்சம் மகிழ்ந்திடுமே .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

18

483

மெல்லியளால் மேனியை மெல்ல வருடிவிட / 1

மல்லிகை சூடிய மலர்க்கூந்தல் மணம்பரப்ப /2

மல்லிகை மயக்கத்தில் மன்னவன் /3


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

19

668

வெண் முல்லையின் நறுமணம் நாசியிலேற/

பெண் மல்லிகையின்  மயக்கத்தில் மன்னவன்/

தன்னை மறந்து தூங்குகிறான்/


ஏஞ்சல்சோபிதா

20

258

மல்லிகை சூடிய மணமகள்- மயக்கத்தில்/

மாப்பிள்ளை கோலத்தில் மணமகன்/

இனிமை சுகமே, இல்லற வாழ்வினிலே!


                    தங்க. சரவணன்  வடபழநி, சென்னை-26.

21

692

கண்டிட்ட சொர்க்கம் மல்லிகையின் வாசம் 

மணமகளின் சுவாசம் நெடுநாளாய் ஏக்கம்

மடியிலே மயக்கத்தின் துவக்கம்!


முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு

22

234

மனமும் மயக்கும் மல்லிகை வாசம்..!

முத்துப்பல் சிரிப்பில் மன்னவனும் ..!!

மங்கையின் மடியில் சாய்ந்தான் கிறக்கத்தோடு..!!


அமுதா.ரா

23

266

மடியே தலையணை மயக்கத்தில் மன்னவன்...

மௌனமாய் மல்லிகையும் துணை...

இனியவை கூடல் இனிதொரு நிகழ்வில்...


...பூமகன்...

24

228

மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மஞ்சத்தில்/

மெல்லிடையாள் முகத்துடன் கைவைத்தாள் நெஞ்சத்தில்/

அல்லிமலராய் மலர்ந்தாள் நங்கையவள்! /


கவியன்புடன் கவிஞர் கோவி.இராசேந்திரன்.

25

708

மதி மயக்கும் மல்லிகை வாசம்/

மங்கை மனதோடு கலந்தே/

மன்னவன் மகிழ்ந்தான் மடியினிற் றிழைத்தே...//


திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

26

373

காதலி கொடுத்த நெற்றிப்பொட்டு முத்தத்திலும்/

மல்லிகையின் நறுமணத்திலும் மன்னவன் மயங்கினான்/

மங்கையவள் முகமோ நாணிக்கொண்டது!!


    ஜயந்தினி வாகீசன்        

27

345

மல்லிகை  மயக்கத்தில் மன்னவன்  கண்ணுரக்கம்

நிலவிற்கு  மலர்ச்சூடி நிசத்தில்  அனுப்பிவைத்து

முத்தத்தில் மூழ்கிடச்செய்த பிரம்மனுக்கு  நன்றி.


வைர. நாகராசன்.

28

618

மல்லிகை வாசத்தில் மங்கையின் நேசம்/

மண்ணில் காணும் மலர்கள் எல்லாம்/

மன்னன் மயங்கும் நினைவுகளே/


ஔவை.

29

710

கொண்டவள் குறைகளும் கண்களை மறைக்கும்//

காவியக் காதலென கவிரசம் சொட்டும்//

மன்னவனும் மயங்கிடுவான் மல்லிகையில்.


அம்பிகா ஸ்ரீகுமார்.

30

238

மாலையாகத் தோளிலே மங்கையவள் சாய்ந்திட../

போதையாகிப் பெண்ணிடம் இதழமுதம் பெற்றானே../

மடிமீது தலைசாய்ந்த மந்திரமே..///


இளந்தை சேது

31

470

அரிவைக்கூந்தல் மல்லிகையோ அதரப்பூவின் புன்னகையோ

மல்லியின் மயக்கமோ அல்லியின் கிறக்கமோ

பள்ளியறையில் பாசாங்கும் இன்பமே.


நா.சுகுமாறன்

32

510

எந்தன் உள்ளத்தில் நிறைந்த என்னவன்/

மல்லிகை மயக்கத்தில் மயங்கிய மன்னவன்/

இதயம் கவர்ந்த காதலன்/


ராதாமணி

33

256

விழியின்  கவிதைக்கு சுதி சேர்த்தாய்/ 

இதயம் மீட்டிய நாதத்தில் மயங்கினேன்/ 

மடியிலிருந்து ரசிக்கட்டுமா மல்லிகையே/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

34

669

சுற்றிவாரும் மல்லிகையின் வாசனையோ தூக்குதடி/

சுவாசமே நீயாக மடியினிலே சாய்ந்திடவே/

நித்தமுமே நிழலானேன் மயக்கத்திலே வீழ்ந்தேனே/


நஸீரா வசூக்

35

518

உன்னிடம் கொஞ்சி உறவாடிட வேண்டி/

சென்மம் மீண்டும் எடுத்து வந்தேன்டி  /

வாழ்கின்றேனுன் வாசத்தை ஏந்தி.../


வி.கல்பனாதர்மேந்திரா...

36

605

இதழமுதம் தான்பருக ஏந்திழையும் காத்திருக்க /

மல்லிகையின் மணம் மயக்கப் /

பதமாகத் தந்தானே பைங்கிளியின் அதரத்தில் .


மஞ்சுளா ரமேஷ்

37

207

மனங்கள் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சிப் பிறக்கும்/

மணங்கள் ஒன்றிணைந்தால் மனதைத் திறக்கும்/

மல்லிகை மயக்கத்தில் மன்னவன்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

38

706

கொள்ளை கொண்டவன்/

மல்லிகை மயக்கத்தில் மயங்கிய மன்னவன்/

மனங்களின் இணைப்பு வசந்தவாசல் திறப்பு/


மாயாதேவி, சென்னை.

39

613

மல்லிகை  வாசம் மன்னவனை  ஈர்க்க//

மங்கையவள்  இணைந்து   கவிப்பாடிட/

மல்லிகைப்  பூவாய் மலர்ந்தது  கனவே


ஜெயா சந்திரமோகன்

40

261

அல்வாவும் மல்லிகையும் மன்னவன் தந்தான்

அன்பும் அரவணப்பும் அவள் தந்தாள்

மயக்கத்தில் அவனோடு அவளும்தான் !


வள்ளல் இராமமூர்த்தி

41

348

அடம்பில் படர்ந்த மல்லிகை மங்கையின் //

கூந்தலில் மணக்க மயக்கத்தில் மன்னவன் //

மடல் வரைந்தானே கண்களில் //

அடம்பு = அடர்ந்த படர்ந்த கொடி வகை

உடுமலை ராமர்

42

615

மல்லிகை மணத்தால் வீழ்த்தினேன் உன்னை,/

என்னவனே உன்மேல் சாய்த்தேன் என்னை,/

கொஞ்சம் மறந்தோம் நம்மை../


செ.தமிழ்ச்செல்வன்.

43

592

கொல்லும் காமத்தீயின் இடையே வெல்லும் தென்றலாய்

பொல்லாத கன்னியிவள் அவனருகில்

மல்லிகை மயக்கத்தில் மன்னவனவன்.


கவிஞர் ராம்க்ருஷ்

44

616

மடி சாய்ந்த என் வரமே💞

உன் மூச்சில் நான் சுவாசிக்கிறேன்💞

நீ நான் ஒருவரானோமே💞


கா.கேமலாரூபினி

45

490

காதலி மடியினில் காதலன் உறங்க/

அவன் நெற்றியில் செல்லமாய் முத்தமிட/

மல்லிகை மயக்கத்தில் மன்னவனே/


செ.புவிதா

46

572

மல்லிகையின் வாசனையை நீ உணர்ந்துண்டோ

மன்னவா அதன் வாசனை உன்னை 

தீண்டினால்  உலகையே மறந்துவிடுவாய்


ஶ்ரீதரன் பிரியா

47

463

மங்கையின் கூந்தலில் அமர்ந்து 

வாசம் பரப்பி வசியம் செய்தாய்..

அழகினில் மயங்கும் மன்னவனுக்கு அவசியம் /


அரவிந்தன் தஞ்சை

48

434

இருவீட்டார் ஒருசேர ஊரெல்லாம் புடைசூழ/

மணவாளன் பக்கத்தில் மங்கை அமர்ந்திட/

மல்லிகை மயக்கியது மன்னவனை//


மீனாட்சி சுந்தரம்

49

242

தன்னவளின் வருகை நோக்கியே தவமிருந்த 

மன்னவனும் மயங்கிக் கிடந்தானே மஞ்சத்தில்

பெண்ணவளின் மல்லிகை மணமாய்…….


கவி செங்குட்டுவன்

50

287

மல்லிகைப் பூவிலேயே மயங்கி விழுந்திட்டால்

மங்கை என்னை தழுவுதல் எப்போது 

கன்னியாய்க் கழிக்க வேண்டுமோ 


தண்டபாணி

51

267

வேண்டலின் வரத்தில் விடிந்த பொழுது! /

தீண்டலின் இனிமையில் தேகச் சிலிர்ப்பு ! /

கூந்தலின் மணத்தில் குதூகலம்! /


...தமிழம்மா

52

541

மல்லிகையும் மன்னவனும் தோள் சேர

மங்கையிவள் நாணத்தில் முகமலர

மன்னனவன் மயங்கினானோ கன்னியிவள் அன்பினிலே.......


முல்லை நீதன்......

53

649

சாய்ந்த மடியில் ரசனை சொட்ட நெகிழ்ந்திருப்பான்...///

மல்லிகை மயக்கத்தில் மன்னவன்...///

அவனே என்னை மகிழ்விப்பான்...///


சம்சுதீன்_நெல்லை

54

721

மங்கையின் மடி மலர்ந்த மாதவனின் புன்னகை போல்/ 

பொங்கிடும் புதுவாழ்வு /

இனி மல்லிகையாய் மணக்கட்டும்…


.....பாலு தியாகராசன்....

55

716

மூச்சு காற்று பரிமாற்றம் // 1

மூக்கிலே ஏறுது பூ வாசம் // 2

சூடு பிடிக்குது காதல் சகவாசம் // 3.


- நாகை. ஹாஜா

56

262

மங்கையின் குழலிடை மல்லிகை ஆடிட/

மன்னவன் மனதிடை மான்றலும் உலவிட/

எண்ணங்கள் எங்கிலும்  வண்ணங்களானதே/


சதா.முருகன்

57

688

பூக்கள் என்றாலே மயக்கிவிடும் ஆளை/

மல்லிகைப்  பூக்கள் வசப்படுத்திடும் மச்சானை/

 இனியென்ன கொண்டாட்டமே இவ்வேளை/


கீத்தா ராமன்

58

206

○மல்லிகை மொட்டின் மெல்லிய இதழ்கள்/

○மெல்லவிரிந்து புன்னகை பூக்க கள்ளினும்/

○போதையில் மன்னவன் மடியிலே/


சோலைகண்ணன்

59

204

போதையை ஊட்டுதே பேதையிவள் வாசம்//

மல்லிகை சூடியிருக்கும் மங்கையின் கேசம்//

மயங்கித்தான் போனானே மன்னவன்//


ஆஸாத் கமால்

60

240

காத்திருந்த நொடிகள் எல்லாம்  காற்றாக,🍁

கரைந்து விட்டது அருகில் சுவாசமாய் 🍁

மொட்டு மலர்ந்தது மடியில்🍁


உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️

61

697

புன்னகை பொழியும் தேவதை அன்பில் / 

மன்மதன் அம்பு தைத்திடும் முல்லையாய் / 

மன்னவன் காட்டிடும் சுவர்க்கத்தில்...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,,குடந்தை...

62

259

காத்திருந்த கனவு கல்யாணத்தில் கைகூட.../

பூத்திருந்த பூக்கள் மாலைகளாக.../

நேசத்தின் நெருக்கம் மஞ்சத்தில் மயங்குகின்றது.../


ஜெயலெட்சுமி

63

699

மல்லிகை மயக்கத்தில் மாதவன் மயிற்கோத/

மங்கையோ மன்னவன் தோள் சாய/

மதிமயங்கி காமத்தில் கட்டிருக்க என்னழகே/


முனைவர் அக. வீரவன்சாரா

64

347

காதலின் மயக்கத்தில் கலக்குது மனங்கள்/

இடமெதும் பாராமல் ஈர்க்குது இதயங்கள்

ஒரேசாதி  மல்லியோ மணக்கிறதே/


வேங்கடலட்சுமி ராமர்

65

228

மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மஞ்சத்தில்/

மெல்லிடையாள் முகத்துடன் முகர்ந்தாள் நெஞ்சத்தில்/

துல்லியமாய் அன்போடு அரவணைத்தாள்! /


கவியன்புடன் கவிஞர் கோவி.இராசேந்திரன்.

66

569

மங்கை  முகம் பார்த்து //

மன்னவன் இவன் வாழ்வில் //

மங்கிய இருள் அகன்று ஒளி வீசுதே //


செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன்

67

674

மங்கையவளின் கழுத்தினிலே மாங்கல்யமும் தவழ்ந்திடவே//

மல்லிகையின்  மயக்கத்திலே மன்னவனும் மடி சாய்ந்தானடி//

விளக்கணைந்த  வேளையிலே//


இரா.தேவி

68

263

இமைகள் மூடி இனியவள் உறவினில்

ஈடில்லா இன்பம் இருவரும் கண்டிட

அமைந்த நல் இல்வாழ்க்கை


அன்பரசு சுமதி

69

401

காதலெனும் களத்தில் காதலன் காதலியை

 கவருமொரு ஆயுதம் 

காதலிக்கோ காதலனை கதிகலங்கச் செய்யுமொரு துருப்புச்சீட்டு.


      செல்வம் பழனியப்பன்.


70

425

காதலியின் மடியா..? பஞ்சணை மெத்தையா.. ?

மல்லிகையின்  நறுமணமும் தென்றலில் வீசுவதால்

இருவரின் இதயங்களும் இணையட்டும்...


கலாகண்ணன்

71

312

மல்லிகை என் மன்னவனை மயக்க

நானோ அவன் தந்த மல்லிகையில்

மகிழும் இல்லறச் சிறப்படனே


பொ.சுப்புலட்சுமி

72

317

கன்னங்கள் ஒட்டி  உறவாடிய நேரம்

கண்களில் பேசி மகிழ்வது தினமும்

மணமக்கள் இருவருக்கும் மயக்கம்...


.. சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவினாசி

73

399

🍁/ அந்தி குவியுது ஆசை பிறக்குது!.../

🍁/ முந்தி விரிக்குது  பந்தி தொடருது!.../

🍁/ மஞ்சத்தில் மல்லிகை உதிருது!.../


--சாக்கை.பொன்னழகு.                                                                            

74

289

மல்லிகை  மயக்கத்தில் மன்னவன்  இருக்க / 

சொல்லிய சேதியில் சொர்க்கம்   தெரிய /

அல்லி  விழிகளில் ஆனந்தமே  /  .


சியாமளாரகுநாதன்

75

233

காமக் கிறக்கத்தில் கவர்ந்திடும் வல்லவன்/

நேசம் சுரந்திடும் நல்லவன்/

மல்லிகை மயக்கத்தில் மயங்கிடும் மன்னவன்/


முபீன் றிஸான்

76

565

மல்லிகை மலரோடு மதுவுண்டுக் களிக்கும் /

இல்லிதழ் வண்டாய் இளைபாறிக் கிடக்கிறான்!..

சொல்லிடும் காதலோடு மன்னவன்!!


முனைவர்.பாரதி.சிவசங்கரி

77

562

பூச்சூடிய மங்கையவள் அருகில்/

மன்னவன் அவளழகைக்  காதலில் வர்ணிக்க/

மங்கையோ சிரித்திட்டாள் மல்லிகையாய் பல்வரிசை/


பா.பத்மநாபன்

78

574

மல்லிகையோ மலரவளோ மயக்கியது மன்னவனை/

மனதில் காதல் மணத்தில் மோகம் /

இரவெலாம் இன்பக் கனா .


துரைராசா காண்டீபன்,திருக்கோவில் .

79

707

மன்னவன் தனியே காத்துக் கிடக்கிறான்/

மல்லிகை அவளின் வரவிற்காக/

மஞ்சத்தில் பூவாய்ப் பூத்துக் கிடக்கிறான்/


✍️பா.ச.கண்ணன்

80

564

மன்னவன் மயக்கத்தில் மல்லிகைப் பூவவள்

கன்னம் வைத்துக் காணும் அழகில் 

தன்னை மறந்த கனவில்.


இராசையா கௌரிபாலா.

81

723

மல்லிகை மென்மையாய் மொட்டு அவிழ்க்க

கன்னிகை மன்மதனை மடியில் கவிழ்க்க

 மல்லி கைமயக்கத்தில் மன்னன்


- நெல்லை ஆடலரசன்,   துபாய் 

82

201

மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மயங்கிட /

மணமாலை சூடிய மணப்  பெண்ணாய் /

தன்னிலை மறந்த தருணமிதுவோ//


புவனா  சற்குணம்   கனடா

83

568

நாண் ஏறிய நிலையில் நங்கை//

நாணம் மறந்து தழுவ//

மல்லிகை மணத்தில் மெய்மறந்தானோ மன்னவன்!!


கு.ஜெயக்குமாரி/ஜெய்

84

250

சூடினாள் மங்கையும் மல்லிகையைக் கூந்தலில்

மயங்கினான் மன்னவனும் தடுமாறினான் நிலையில்

இயக்கம் கொண்டது காமமும்


செல்வலஷ்மி

85

634

மன்னவன் மயங்கினான் மேகக்கூந்தலின்  மயக்கத்தில்// வானவில்லாய் வளைத்திடும் வளைகரங்கள்...// 

பருவகாற்றில் சிந்திடும் காதலின் தேன்துளிகள்...//    


நெம்மேலி சுரேஷ்குமார்

86

578

மன்னவள் மல்லிகையில் மன்னவன் மயங்கிட//

மடிசாய்ந்து மணநாள் களிப்பினிலே//

செவ்விதழ் மொழியாலே மொழிந்தாளே காதலினை//


...கவியாசகன்...!!!

87

709

மல்லிகை வாசத்தில் மயக்கத்தை ஊட்டினேன்// 

உணர்வுகள் உந்துகோலாக முகமோடு முகமானேன்// 

மயங்கியே மன்னவன் மடியினிலே// 


தாழை. இரா.  உதயநேசன்

88

215

தேன்மொழியால பேசாது மீன்விழியை உருட்டிட

மயங்கியவனை மடிதாங்கினாள் மல்லிகையாள்

புலி பதுங்குகிறது புடவைக்குள் புதையலெடுக்க


கிருஷ்ணநாதன்

89

515

மணமாலை சூட்டிய மணமகள் கூந்தல்

மல்லிகையின் நறுமணம் மணமகன் இதயத்தில்

மகரந்தக் காதலாகக் கருக்கொண்டது


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

90

700

மல்லிகை வாசம் மன்மத பாணமாய்

மெல்ல நாசி வருடும் நடுநிசி

மயக்கம் கொண்ட மன்னவன் விழிகள்

சொப்பன உலகில் சொக்கின…!

+++++++++++

மைக்கேல்ராஜ் 

91

597

நெஞ்சுக்குள் கோயிலாக வாழ்ந்த உன்னை//

இருமனமும் ஒருமனமாய் இணையும் நாளில்/

மல்லிகை(யே)யின் வாசமென்னை மயக்குதடி//


லக்க்ஷிகண்ணா

92

675

மல்லிகையே உன்னை மணமகளாய் பார்க்கையிலே/

நாற்குணத்தோடு கூனிக் குறுகி நிற்பதேனோ?/

மாமனிவன் மல்லிகைப்பூவால் மயங்கியவன்தானே/


அருண்

93

269

மல்லிகை வாசத்தில் என்னிதயம் துடிதுடிக்க//

உன் செவ்விதழ் முத்தத்தில் கதகதக்க//

அவள் கண்ணிமைகள் படபடக்க//


ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன்

94

691

வாலிப வயதில் வைபவம் கண்டு/

பேரின்ப நிலை கொண்டாள்/

நாணத்தில் மங்கை நாயகனை சேரவே!/


சோலை ராஜகுமாரன்

95

654

மணமாலை தந்தவனின் தோள்சேரத் துடிக்கின்றாள்!  

மடிதந்த மனையாளின் மல்லிகை வாசத்தில் 

மயங்கியே  கிடந்தான் மன்னனிவன்!   


பொன்.சுந்தர பாண்டியன்  சோழவந்தான்

96

720

சொல்லில் வடிக்க திணறும் நங்கை/

மெல்ல திறந்தது பள்ளிக் கதவு/ 

உள்ளமிணைந்து உறவு பூத்தது.


நிர்மலா பத்மநாபன்

97

445

தேகமே மல்லிகையோ சந்தேகம்தானடி எனக்கு//

இப்படியே உன் கிறக்கத்தில்//

வதையின்றி இறந்தாலும்  பதைப்பில்லை தேவதையே//


                    மு.பிரபு ,     நெருஞ்சனக்குடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages