02.08.20-முழு(து)மை - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

02.08.20-முழு(து)மை












Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

606

நுரைத்த நரையில்  நிரம்பிய  அனுபவம் /

மங்கிய கண்களில் தங்கிடும் ஏக்கம்.. /


அழையா விருந்தாளியாய் வந்திடும் நோயும்.. /

தவிப்பின் சிறைகளில் மனமது மாயும் 


ரேகையாய்  படர்ந்த முகத்தின் சுருக்கம் /

காமம் கலவா காதலின் நெருக்கம்.. /


             -  வினோத் பரமானந்தன்

2

697

முதுமை முகத்திலே ரேகையாகி ஓடுகையில் / 

இளமைக் காலத்து இன்பங்கள் அருவியாகும் / 


நெஞ்சிலே ஊற்றாகி அன்பாக சுரந்திடும் / 

கண்களால் பார்ப்பதே பேரின்பம் ஆகும் / 


தள்ளாடும் போதினிலே துணையாகும் மனங்கள் /  

இணைந்தே இருந்திட்டால் அதுவே சுவர்க்கம்...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை….        பி

3

698

தள்ளாடும் காலத்தில் தலைமையான நெஞ்சங்கள்//

முதுமை காலமிது அனுபவத்தின் கோலமிது//


ஆதரவை நாடும் பாசத்தின் வெளிச்சமிது//

கட்டியவனே கைக்கொடுக்கும் கலங்கமில்லா உறவுமிது/


எதிர்ப்பார்த்த கோணங்களில் எச்சங்களாய் 

இளமைப்பருவம்//

முதுமை காற்றினிலே ஊஞ்சலாய் கடந்தகாலம்//


தேனி ஆ.சுந்தர்

4

461

அனுபோக அனுபவ ஆட்சிப் பெற்றது/

இளமையின் துள்ளல் இழக்க ஏற்றது/


தொற்றிக் கொண்டு தொடரவே உற்றது/

அன்பு ஒன்றே அணைத்துப் பற்றியது/


உனக்கு நானாய் எனக்கு நீயாய்/

பண்பின் வழியது பாதையும் ஆனதே/


கோ.அருச்சுணன்


5

715

கடல் கடந்த இரு பறவைகள் //

ஒன்றையொன்று கோதிக் கொள்கிறது விரல்களால்//

தங்கப் பலகையில் ஓவியம் காவியமாக//


வாழ்ந்த நாட்களை  மனதில் வரையும் //

நரை விழுந்தாலும் பிறை விழாது//

தாங்கிப் பிடிக்கும் ஓர் அன்பு.


அ.உமர்பாருக்.

6

716

வயதான காலத்தில்வந்துவிடும் முதுமை /1

யாருக்கும் தெரியாது இதனுடைய அருமை /2

எந்நாளும் இருக்கும் உடலினிலே நடுக்கம் /3


சொன்னாலும் புரியாது காதினிலே மந்தம் /4

அக்காலத்து பேச்சையே இக்காலத்திலும் பேசும் /5

பக்கம்வர துடிக்கும் பாசத்திற்கு ஏங்கும் /6.


- நாகை. ஹாஜா

7

482

முதுமையில் நோய் மனிதனை வாட்டுமே /

வேதனையை நெஞ்சில் நாளும் கூட்டுமே /

அன்புள்ளம் கொண்ட மனைவி துணையிருக்க/


வேதனையும் கானல் நீராகும் வாழ்க்கையில்/

மனைவி மட்டுமே உயிராகவே காத்திடுவாள் /

ஈருடல் ஓருயிராகி இன்பமாகவே பார்த்திடுவாள் /


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

8

710

1.  கண்டதும் காதல் கலவியில் முடியலாம்/

2. காவியக் காதல் கதைகளில் வரலாம்/

3. கருத்தொருமித்த காதலே கடைசி வரைக்கும்/


4. இன்றைய காதல் இடையிலே முறியலாம்/

5. மரணம் வரைக்கும் தொடரும் காதல்/

6. முழு(து)மை பெறுமே முது(ழு)மைக் காதல்/


அம்பிகா ஸ்ரீகுமார்.                           

9

462

ஓடிக் களைத்தகாலம் இதுவோ/

துன்பங்கள் கூடும் காலம் இதுவே/

துயரங்களை அன்பு காட்டி போக்கிடுவீர்/


நமக்காய் உழைத்தவரை ஒதுக்காதே யாருக்காகவும்/

உழைப்பினால் அவர்களை பார்த்துக் கொள்/

போன பின் அழுவதில் பயனேது/


தயா

10

708

மாசற்ற காதல் இங்கே மகத்துவமாய்/

பாசத்தின் பிணைப்பும் உடன் பக்குவமாய்/

ஆசைகளைக் கடந்து அன்பிலே திளைத்து/


அத்தனை உறவினையும் ஒருங்கிணைந்த பாடு/

இளமையின் இனிமைகளை இல்லறத்தின் முழுமைகளை/

நிறைவாய்க் காட்டுது இழையோடும் சதுரத்தில்...//


திருமதி பிரிந்தா புஷ்பாகரன்.        

11

700

ஊன்றும் ஒருகோல் உதவும்  கைதாங்கி/

தோற்றம் மாற்றம்  தோலிலே சுருக்கம்../

காயின் முதிர்ச்சி உண்ணக் காய்கனியாக/


நாற்றின் முதிர்ச்சி பல்வகை தானியமாக../

மனிதனின் முதுமை அனுபவ பெட்டகமாக/

நரைதிரை நடுக்கத்தினுள்வாழ்வியலின் முழு(து)மை..!

+++++++++++

மைக்கேல்ராஜ், ஒசூர்

12

483

இளமையிலே ஒன்றாகி இனிமையிலே கலந்தாடி/ 1

தள்ளாடும் வயதுவரை தனிமையை அறியாமல்/2

முதுமைவரை இல்லறத்தில் முழுமையாய் அறம்வளர்த்து 3


துன்பத்தும் இன்பத்தும் தொடர்ந்திடும் துணையாகி /4

வாழ்வதுதான் உலகுக்கு வழிகாட்டிச் சிறப்பதுதான் /5

அன்பான அறவாழ்வில் அமுதான பண்பாகும்/6


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

13

450

கூந்தலின் கருமையும் வெண்மையும் காதலின்

வண்ணங்களை கலைக்க இன்றளவும் இயலவில்லை!

ஒன்றை ஒன்றுப் புரிந்த உள்ளங்கள்


இளமையிலும் முதுமையிலும் அன்பின் முகவரியில்

குதூகலமாய் வசிக்கின்றன! உண்மைக் காதலுக்கு

ஒரு ஆயுள் போதாதென உணர்ந்ததாலே!


ரேணுகா சுந்தரம்

14

238

மண்ணில் விழுந்த நாளின் தொடக்கம்.../

தொடரும் ஆயிரம் நினைவுகள் கூட்டம்.../

இல்லறம் தொடங்கி இதயம் இணைந்தது../


நல்லறம்  கடந்தது நாட்கள் நலமுடன்../

வாரிசுகள்  வசதியுடன் வாழ்வைத் தொடங்க../

இறைவன்  தந்தது அனைத்தும் முழுமையே../


இளந்தை சேது

15

428

எழுபதும் எண்பதும் சருகாய் போயுமே

இனியதாய் காதலில் இருபதாய் இருக்குதே

புன்னகை அன்பிலே புரிதலில் தோழனாய்


கள்ளமே இல்லாத உள்ளமே வெள்ளையாய்

கல்லறை வரைக்குமே கனிவுடன் காதலே

இறையவன் படைப்பிலே இப்படியும் அற்புதம்.


சுப்பிரமணியன் அன்புமலர்.

16

721

வாலிபங்கள் பெற்ற முதுமைக் குழந்தைகள்/

வயதான பின்னாளில் வருந்தாத அன்றில்கள்/

ஆற்றோரம் வீற்றிருக்கும் அழகான தேவதைகள்.../


அரிதாரம் பூசாத வாழ்வின் இலக்கணங்கள்/

எச்சங்கள் துச்சமென விட்டதனால் இந்நிலையோ/

மிச்சங்கள் வாழவிட்டு முழுமை பெற்றனரோ.../


......பாலு தியாகராசன்....

17

618

நரையும் வழுக்கையும் கூடி வர/

நோய்கள் எல்லாம்  தொடராய் வர/

நடை தளர்ந்து மெதுவாய் வர/


தடி வேண்டும் துணைக்கு வர/

நினைவுகள் மட்டும் பசுமையாய் வர/

வாழ்க்கைப் பயணம் அனுபவமாய் வருமே/


ஔவை.

18

671

முடிவன்று முதுமை வாழ்வின் வளமை/

இளமை தொடங்கிய அனுபவ செழுமை/

இனிமையின் முழுமை முதியோர்க்கு பெருமை/


இன்றைய இளையோர்க்கு எதிர்காலக் கருவூலம்/

காலத்தின் அற்புதத்தை காட்டிடும் கண்ணாடி.../

பின்பற்றிட இனித்திடுமே இவர்களின் முழு(து)மையே.../


கி.அருள்குமரன். தலைஞாயிறு.

19

652

அன்பின் முழுமை முதுமையில் தெரியும்./

குழந்தைகளாக மாறும் முதுமை அருமை./

நரை விழுந்த பின்னேயும் காதல்./


அறுபது ஆகியும் பிரியாத முதுமை./

கரம் பிடித்தது முதல், காதலே!/

நரை அதிகரித்தும் கொஞ்சல் குறையவில்லையே!/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

20

201

முதுமை வாழ்வில் வருவது வழமை /

சாதிக்கப் பிறந்தவர் நாமென்ற பெருமை/

ஆற்றோரம் ஆறுதலாய் வீற்றிருக்கும் இவர்கள்/


தனிமையில் வாழ்ந்தாலும் தாங்காத மகிழ்ச்சி/

காலத்தின் அற்புதம் கொடுத்து வைத்தவர்கள் /

முதுமையிலும் அன்பாய் வாழ்வது  மகிழ்ச்சி  //


புவனா சற்குணம் கனடா

21

207

இளமை அழகில் வாழ்ந்த காலம்/

மலரும் நினைவுகளாய் மனதில் ஓடும்/

முதிர்ந்த அழகில் சிறக்கும் வாழ்க்கை/


பாசத்தின் பகிர்வில் பல்லாண்டு வாழும்/

நேசக் கனவுகளாய் நெஞ்சம் நிறையும்/

வாழ்வின் முழுமை முதுமையில் சிறக்கும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

22

597

முன்னோக்கிச் செல்கையிலே முழு(து)மையைக்

காண்பாய்/1

வில் போன்ற முதுகின் தோற்றம்/2

வெண்முடி தோல் சுருங்கி நிலத்திலே/3


இளமையைத் தேடுவது போலுன் நடையழகு/4

கூண் விழுந்த கண்கூடத் தனியழகு/5

பொக்குவாய்ச் சிரிப்போடு பார்க்கையிலே

கொள்ளையின்பமே..//

லக்க்ஷிகண்ணா

23

518

கரம் பிடித்த நாளில் இருந்து /

முழுமையாய் வாழ்கின்றோம் ஓருயிராய் இணைந்து /

ஒருவருக்குள் ஒருவர் என்றும் அடைக்கலம் /


அன்பில் படைக்கின்றோம் புதிய இலக்கணம்/

காலங்கள் கடந்தாலும் நிற்போம் நிழலாக /

இன்பத்திலும் துன்பத்திலும் இருப்போம் துணையாக... /


வி.கல்பனாதர்மேந்திரா..

24

675

காலங்கள் ஓடுகையிலே காண்பது ழுழு(து)மையே//

வாழ்கையின் முடிவினை உணர்த்துங் கோலமே//

கூண் விழுந்த கண்கள் நரைமுடி//


வில்லைப்போல் முதுகிருக்குமே இளமையின் மறுபக்கமே

கருவிலே பரிணாம வளர்ச்சி இப்போ/

பரிணாமம் தேய்ந்து போகும் காலமிது//


அருண்

25

269

கண்களோடு இணைந்திடும் கரையில்லா சுவாசமே..!!

கண்ணீரில் கலந்திடும்ரகாலத்தின் கவசமே..!!

கவலைக்கு மருந்தாகும்  மனைவியும் நீயே..!!


கண்டிப்பை வழங்கிடும் ஆனந்தத்தின்  தீயே..!!

முதுமையின் வாழ்க்கையழகு பாசத்தின் பிணைப்பழகு..!!

வளர்பிறை வாழ்க்கை வளமான முழு(து)மையே..!!


ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன்

26

312

முதுமை உடலில் தான் மனதிலில்லை. 1

வயது வயது ஆக ஆசை 2

மகிழ்வு நிறைந்த எண்ணங்கள் தானே 3


உருவாக்கி வாழத் தோன்றும் நிலை 4

கடந்த காலத்தின் நிகழ்வுகள் தானே  5

மனம் அசை போட்டு வாழும். 6


பொ.சுப்புலட்சுமி, தேவகோட்டை

27

268

முதுமை கொண்ட  மனங்கள் இரண்டு…

முழுமை கண்ட  வாழ்வை மகிழ்ந்து...

இளமை குளுமை பசுமை வனத்தில்...


இனிமை தந்தத் தனிமை இடத்தில்...

நினவாய் மலரும் காதல் கனிந்து...

நிழலாய்த் தொடரும் புனிதம் அறிந்து...


...பூமகன்...

28

465

முழுமை என்பது முதுமையில் கனவே//

இளமை கவர்ச்சியில் விழுகிற மனங்களில்..//

மோகமே இருப்பின் முப்பதில் முடியும்//


காமமே நிற்பின் கழிந்ததும் புளிக்கும்//

அன்பின் பிணைப்பே அணைத்த நகரும்//

துன்பம் வரினும் தொடரும் பிணைந்தே.//


இரா.வெங்கடாசலம்

29

386

முதுமைப் பருவம் வாழ்வில் வழமை/

ஆற்றங் கரையின் பூங்கா வனத்தில்/

அமர்ந்து ஆடும் இனிய மனங்கள்/


நிறைந்த வாழ்வு நீளும் இன்பம்/

குறைந்த பொறுப்பு கூடிய வாழ்க்கை/

சிறந்த தம்பதியர் சீருடன் வாழட்டும்/.


தென்கரை தாயுமானவன்.

30

668

இளமை ஊஞ்சாலாடும் இனிய பருவத்தில்/

கன்னியை கைபிடித்து இல்லறமாம் பாதையில்/

இனிதாய் நடைபயின்று  இன்றுவரை இடறிடாமல்/


முதுமையிலும் முழுமையாக முத்தமது இனித்திடவே/

முன்பயனின் நன்மையினால் முல்லையவள் அன்பினிலே/

இதயமது ஒன்றாக இணைந்தே வாழ்கின்றோம்/


ஏஞ்சல்சோபிதா

31

249

இளமையில்  கொண்ட அன்பு  குறையாமல் !

முதுமையிலும்  தொடரும்ட பந்தமே தம்பதிகளாக !

ஒருவரை ஒருவர் புரிந்துணர்வு கொண்டே !


வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இணைந்தே !

அனுபவித்து  வாழ்ந்திடும் நேசக்கார சோடியாக !

இளையோருக்கு  இவர்களே பாடமாக  அமைந்தனரே  !!!


வாணியம்பாடி தியாகராசன்

32

373

இருபதில் தொடங்கிய அறுபது வரையிலும்/

அன்பான காதல் ஆசையுடன் ஊடல்/

இனிமையான வாழ்வு  இளமையைத் தந்தது/


முதுமை நாட்களில் முழுமையாய் ஆனது/

இருவர் கரங்களும் இணைந்தே இருந்தது/

கடைசி வரையும் கூடியே இருக்கும்!!


ஜயந்தினி வாகீசன்

33

613

இளமைக்கடந்து முதுமையிலும் முழுநிலவாய் அவரிருக்க 

தள்ளாடும் முதுமையிலும் தளராத மேனியுடன்//

இளமையின்  நினைவுகள் முதுமையிலும் அசைப்போடும்//


தாங்கிப்பிடிக்க துணையிருந்தால் அடம்பிடிக்கும் மனமே

முதிர்ந்த  வயதிலும் பேசியே கொன்றிடுவார்//

இருகரம் கோர்த்தே இணைந்திருப்போம் இறுதிவரை//


ஜெயாசந்திரமோகன்

34

573

இளமையில்  பற்றிய கரங்கள் இவை/

முதுமையிலும் விடுவதற்கு மனமில்லை இன்றுவரை/

இன்பத்தையும் துன்பத்தையும் இணைந்தே  எதிர்கொண்டோம்/


இனிவரும்  நாட்களிலும்  இயலாத நாட்களிலும்/

இறைவனின்  அழைப்பினிலும்  விலகாமல் பயணிப்போம்/


                     மு .சுகப்பிரியா 

35

724

படைப்பின் பரிணாமம் பார்ப்பதற்கு பரிதாபம்/

கொடுப்பதெல்லாம் கொடுத்து கோடியே உலகுக்கு/

விடைபெறும் வேளையில் வேதனையான உறவுகள்/


எச்சங்கள் மிச்சங்கள் எதிர் பார்க்கும் கழுகள்/

எதிர்பார்ப்பின்றி தவிக்கும் இனிமையான ஜோடிகள்/

அடிமைக்கோலமிடும் வாரிசுகளிடம் அகப்பட்டு தவிக்குது


ஒலுவில் எஸ்.எல்.அன்வர்

36

515

இல்லறத்தை நல்லறமாய் ஏற்றுவாழும் பந்தத்தில்/

இன்பமும் துன்பமும்  இருவருக்கும் பொதுவாகும்/

இளமையில் தொடங்கும் உண்மையான காதல்/


இயலாமை முதுமையிலும்  நீங்காமல் தொடரும்/

அன்பான பிணைப்பு ஆயுளுக்கும் நீளுகின்ற/

அற்புத நேசமாக முழுமையுடன்  இனிக்கும்/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

37

578

இளமைக் கோலமது காலத்தால் மாறிடவே//

வாலிப கனவுகளை இதயத்தில் சுமந்தப்படி//

துன்பத்தில் துணையென இன்பத்தில் மகிழ்வென//


குறைவில்லா அன்பினிலே குடிகொண்ட முதுமையிது//

களங்கமற்ற காதலிற்கு தற்கால ஆசான்கள்//

தடுமாறும் வயதினிலும் தளராத உள்ளங்கள்//


...கவியாசகன்...!!!

38

602

நாதஸ்வர ஓசையிலே கைபிடித்த நாயகனே

கட்டழகு காளையாக காட்சி தந்தவனே

மாறாத மனசோடு மகிழ்வ தருபவனே


ஏற்றமிகு வாழ்வினிலே எனை காப்பவனே

உனது அங்கத்தில் சரிபாதியாய் கொண்டவனே

முதுமையே ஆனாலும் முழுமையாய் ஆட்கொள்பவனே.

            

.......கோ.வெங்கடேசன்........

39

564

முழுமை பெறும் முதுமையில் முதிர்ச்சி 

வெறுமை இல்லை மனம் பொறுமையாய் 

குறுநகை செய்து குற்றம் காணாது 


திடமான முடிவுகள் செயல் வடிவம்பெற 

அடம் பிடிக்காது அன்புடன் நிறைவேற்றிட 

அனுபவ அறிவிலும் அர்த்தங்கள் சேர்க்கும்.


இராசையா கௌரிபாலா.


இத்துடன் நிறைவு பெற்றது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages