Sl | எண் | புகைப்படம் | கவிதைக்ஷ |
1 | 462 | மண்ணை நம்பி விதை விதைக்கிறோம்/ மழையை நம்பி பயிர் இடுகின்றோம்/ அது மட்டும் போதுமா இருக்குமா/ உன்னை நம்பி உழைப்பைக்கொடு/ வரப்புயர நெல் உயரும் மெய்யாகவே/ தயா | |
2 | 216 | கருமேகம் திரண்டது காவிரி நிறைந்தது// கல்லணைத் திறந்தது கானலும் மறைந்தது// காணியில் பாய்ந்ததது காய்ந்தது விளைந்தது// வெம்மை மறைந்தது பசுமை படர்ந்தது// வரப்புயர நெல்லுயர்ந்து உள்ளம் மலர்ந்தது// அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
3 | 461 | வெட்டும் வரப்பு கூட்டும் உயரம்./ திரட்டும் தண்ணீர் உருட்டும் கதிரே/ சிறக்கும் வளமே சேர்நெல் களமே/ பிறக்கும் மகிழ்ச்சி பட்டப் பாடே/ ஊருக்கும் உணவு உவந்து அளிப்பரே./ கோ.அருச்சுணன் | |
4 | 450 | நீரும் வேரும் சீராய் அமைந்தால் நாளும் பொழுதுமாய் பயிரும் வளரும் காலம் நேரம் கருத்தாய் பார்த்தால் வரப்பின் உயரம் ஓங்கியே உயரும் உழைக்கும் மக்களின் பசியும் தணியும்! ரேணுகா சுந்தரம் | |
5 | 477 | உழுது பயிரிடவே ஆசைகள் பிறக்கும்!!// சேற்றை சந்தனமாய் உள்ளமது நினைக்கும்!!// நெல்லோ அடுத்தவர் உலையில் கொதிக்கும்!!// வைக்கோலே உழவனுக்கு கூலியாய் கிடைக்கும்!!// ஆயினும் விதைத்திடவே கைகளும் துடிக்கும்!!// ******ரத்தின பாரதி கோவை*** | |
6 | 240 | ஆடிப்பெருக்கு எடுத்து ஒடிவரும் காவேரி// ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை// வயல்களில் எல்லாம் பசுமை படர்ந்தது// பக்குவமா பாதுகாத்தனர் விளைச்சல் பெருகியது// வரப்புயர நெல்லுயர்ந்து விவசாயம் செழித்தது// உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️ | |
7 | 698 | காரிருள் மேகமும் கனலாய் வெம்மியது // காத்திருந்த உழவனுக்கு உற்சாகம் கொட்டியது// கழனியிலே நீரும் வானுயரமாய் உயர்ந்தது// விதைத்த வித்து பசுமையாய் மாறியது// உழைத்த உழவனுக்கு வாழ்க்கையும் உயர்ந்தது// தேனி ஆ.சுந்தர் | |
8 | 428 | காணி நிலமுண்டு காளை மாடுண்டு கலப்பை இங்குண்டு காலில் பலமுண்டு ஆழ உழுவதற்கு ஆசை எனக்குண்டு வானம் பொழிந்தாலே வயலுக்கு வளமுண்டு வரப்புயர நெல்லுயர வயிறாற உணவுண்டு. சுப்பிரமணியன் அன்புமலர் | |
9 | 238 | உழுதொழில் செய்வோனே உலகில் உயர்ந்தவனாம்../ விளைநிலத்தை வீரியமாய் நலமான விதையோடு../ பருவத்தில் பயிர்செய்து பக்குவமாய் உரமிட்டு../ தேவையான நீரினைத் தேக்கியே சீரமைப்பான்../ விளைந்தக் கதிர்களை விளைவாக்கி சேர்த்திடுவான்../ இளந்தை சேது | |
10 | 463 | மருத நிலத்தின் மாண்பு வயல்களே! செந்நெல் வயல்நிரப்ப கதிரோன் உதவும்! உழவுக் காளைகள் கழனியை பண்படுத்தும் ! விதைதூவி நாத்துநட்டு களைபறித்து நீரபாய்த்தால் தலைகுனிந்து நெற்கதிர்கள் நிலம் நோக்கும் ! அரவிந்தன் தஞ்சை | |
11 | 517 | வரப்புயர நெல்லுயரும் வரமென்றே வாழ்வுயரும்/ பயிர்களின் வளர்ச்சியிலே வளமண்ணும் பெருமையுறும்/ கதிரெல்லாம் சிரந்தாழ்ந்து அறுவடையை எதிர்நோக்கும்/ வேர்வைக்கு வித்திடும் விளைநிலம் செழித்திடும்/ உழவரின் உழைப்பினில் உலகமும் நிலைத்திடும்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
12 | 409 | ஆடியும் வந்தது தேடிய மழையும்// பொழிந்தது வாய்காலில் வெள்ளம் வழிந்தே// ஓடியது வரப்புயர நெல் உயரும்// கதிர் முற்றும் அறுவடை செய்தே// அவனியைக் காப்பான் நம் உழவன்// ********* க.சுதர்சனக்குரு. | |
13 | 261 | ஆடிப்பட்டம் தேடிmவிதைத்தால்mவிளைச்சல் அமோகம் ஆகுமன்றோ வரப்பும் உயர்ந்தால் கேட்கவும் வேண்டுமோ நீரும் உயரும் நெல்லும் உயரும் விவசாயம் செழிக்குமே மக்களின் தேவைகளும் மகிழ்வோடு நிறைவேறுமே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
14 | 614 | செல்வம் சேர ஆசை பிறக்கும்/ பிறருக்கு பகிர மனம் தடுக்கும்/ லட்சம் சேர்ந்தால் கோடியை நாடும்/ பட்டினி சாவை போக்கிட நினைத்தால்/ நாமும் வாழ்ந்து பிறரும் வாழலாமே/ விஜயலட்சுமி | |
15 | 510 | மேகம் சூழ்ந்திட மழையும் பொழிந்திடும்/ வயலும் வாழ்வும் வளம் பெற்றிடுமே/ பார்க்கும் இடமெல்லாம் பசுமை பொங்கிடும்/ வரப்புயர நெல்லும் உயர்ந்து செழித்திடுமே / உழவனின் மனமும் களிப்பில் மூழ்கிடுமே/ ராதாமணி | |
16 | 592 | நீர்ச் சேந்தல் நிரந்தர நிலையானால்/ நீரணைக்க வரப்புயரும் நீரளிப்பும் அதிகமாகும்/ நீரளிப்பு அதிகமாகியதும் வேர்ச்செடியும் உயரும்/ நிரந்தரக் குளிப்பிலே நிம்மதியாய் உண்டிடும்/ உண்டிடும் உணவாலேmநெல்லும் நீண்டுயருமே./ கவிஞர் ராம்க்ருஷ் | |
17 | 613 | மழை பொழிந்தால் பயிர் விளையும்/ ஆடியிலே விளைச்சல் தையிலே அறுவடை/ உழவன் உழைத்தே ஓடாய் போனான்/ உழவன் சேற்றில் கை வைத்தால்/ நாம் சோற்றில் கை நனைப்போம்/ ஜெயாசந்திரமோகன் | |
18 | 201 | வானம் பொழிந்தாலே வயலும் செழிப்பாகும்/ பயிரின் வளர்ச்சியிலே நெல்லும் கதிராகும் / வரப்புயர நெல்லுயரும் வளமான வாழ்வுயரும்/ கதிர்கள் தலைசாய்ந்து அறுவடைக்குத் தயாராகும்/ உழவரின் உழைப்பினிலே உலகமே பசியாறும் // புவனா சற்குணம் கனடா | |
19 | 234 | ஆடிப் பிறந்தது மழையும் பொழிந்தது..!! உழவன் ஏர்பூட்டி நாற்று நட..!! ஏற்றமுடன் பயிர்கள் செழித்து வளர..!! நாளும் உழைப்பான் வேர்வை சிந்திட..!! வரப்புயர நெல்லுயரும் தரணியில் வாழ்வுயரும்..!! அமுதா.ரா | |
20 | 386 | வானமழை பொழிந்தாலும் தானதவம் மிகுந்தாலும்/ விவசாயி மனம்வைத்து ஏரிகளைப் பெருக்கிடவே/ மடைதிறந்து உழவிட்டு நடவிட்டுப் பயிர்வளர்ப்பான்/ வரப்புயர நீர்பாய்ச்சி நெல்லுயர விளைவிப்பான்/ அன்னவனின் உயர்வில் அவனியும் உயர்ந்திடுமே/. தென்கரை தாயுமானவன். | |
21 | 204 | அல்லும் பகலும் அயராது உழைத்து// அகிலத்தின் பசியாற்ற அக்கறையோடு விதைத்து// நெல்லும் வளர்ந்து விளைச்சலும் மலிந்து// பஞ்சத்தை தீர்த்திடப் பாடுபடும் விவசாயி// சீரான மழையினால் வரப்புயர நெல்லுயரும்// ஆஸாத் கமால் | |
22 | 476 | மழையும் பொழிந்து மகசூல் பெருகியது/ பயிர்கள் செழிக்கப் பஞ்சமும் நீங்கியது/ நீரும் உயர நெல்லும் உயர்ந்தது / வரப்பும் உயரவே நெல்லும் நிமிர்ந்தது/ நாடும் வீடும் நலமும் பெற்றதே/ தங்க.ஜான்பீட்டர் | |
23 | 207 | நிலமதைப் பண்படுத்தி நாற்றுகள் நட்டு/ வளமதைப் பெருக்க நன்னீர் பாய்ச்சி/ கதிர்கள் வளர்ந்திட காவல் காத்து/ பொறுப்புடன் உரமதை நிலத்தில் வார்த்தால்/ வரப்புயர நெல்லுயர்ந்து வாழ்வு சிறக்கும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி தேனி. | |
24 | 692 | வரப்புயர நெல்லுயரும் உள்ளமுயர உயர்வுயரும்/ நீருயர மணந்திடும் மலர் உயரும் குணமுயர கோபுரமாகும்! பள்ளத்தை நோக்கி பயணிக்கின்ற நீரோட்டத்திலே ஊறிட்ட கதிரே ஊருக்கே படையிலிடும்! ஊயிரையும் காத்திடும்! முனைவர். சு. சித்ரா , கரூர் தமிழ்நாடு | |
25 | 258 | வரப்புயர நீரும், நீருயர நெல்லும்/ உயர்ந்திட, ஆடிப்பட்டம் தேடி விதை..!/ படித்து ரசிக்கலாம், வேறென்ன சொல்ல!/ விளைநிலத்தை எல்லாம், விலைநிலங்கள் ஆக்கிடவே/ விவசாயி துணிந்திட, நாளை சோற்றுக்கு..? தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
26 | 434 | ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளர் மத்தியில்/ நிலத்தை உயிராக நேசிக்கும் மனிதம்/ விவசாயம் செய்திடும் உழவனின் வாழ்க்கை/ உயரும் அந்நாளில் உலகம் பசியாறும்/ வரப்புயர்ந்து நாற்றுகளோ வானுயர்ந்து வளரும்// மீனாட்சி சுந்தரம் | |
27 | 726 | பூமித்தாயின் மடியில் புனித ஆன்மாவாகி/ நீலவானின் மடியிலே மழலையாக உருமாறி/ மேகம் என்ற மேன்மைப்பிறவி கொண்டு/ மழை என்னும் மகிழ்ச்சிதேவதை பிறந்திட/ மண்ணிலே நீர்பாய வரப்புயர நெல்லுயரும்/ 🙏காளிராஜ்பாலகணேஷ்🙏 | |
28 | 259 | விவசாயம் நாட்டின் வனப்பும் வளர்ச்சியும் / உண்ணும் உணவு உயிர்களுக்கு அவசியம் / உழுதல் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் / சேற்றில் புதையும் கால்கள் செப்பனிடும் / வயிற்றுச் சோற்றுக்கு வழி சொல்லும் / ஜெயலெட்சுமி | |
29 | 728 | வரப்புயர நெல்லுயரும் அதுவழியாய் பசிகுறையும்// இரப்பவர்கள் இல்லையென்றால் இவ்வுலகு தழைத்தோங்கும்// புறப்படுவாய் வயல்நோக்கி பூமிதனை உனதாக்கி// இரக்க குணத்தோடு எல்லோர்க்கும் உணவுகொடு// மரித்துவிட்ட மனிதம் மாண்படையும் மண்ணுலகில்.// கவிஞர் ஆவூர்க்குமரன் | |
30 | 483 | மாதத்தில் தவறாமல் மூன்றமுறை மழைபொழிய /1 தீதகல வரப்புயரும் செழித்தோங்கி நெல்உயரும் /2 கதிர்முற்றித் தலைசாய காசினியில் உழவர்கள்/3 தலைநிமிரும் பூமியிலே தடுமாற்றம் நீங்கியே /4 நிலையுயரும் மக்களிடம் நிம்மதி உருவாகும் /6 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
31 | 697 | அல்லும் பகலும் உழைத்து விளைத்தப் பயிர்கள் / நெல்லை முத்தாய் மணியாய் தருகின்ற பொழுதில் / பஞ்சம் நீர்ந்து நெஞ்சம் நிறையும் இன்பத்தில் / வரப்பு உயர நெல் உயர்ந்தது சுவர்க்கமாகுமே...! முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை... | |
32 | 254 | மேகங்கள் கருத்து ஆடிக் காற்றடித்தாலே/ தாகமும் விவசாயி சோகமும் நீங்கிவிடுமே/ பயிர் வளர்த்து உயிர் காக்கவே/ வரப்பு உயர்ந்து நீர் நிறைந்தாலே/ சிறப்பாக வாழலாம் புவி மீதிலே/ கி.மா.கனகராசன். சூலூர். | |
33 | 716 | கார்மேகம் பொழிந்திடவே பூமியெங்கும் குளிரும் //1 வயற்காடு அத்தனையும் தண்ணீரால் நிறையும் //2 ஏறுபூட்டி உழுதிடவே நெற்பயிர்கள் வளரும் //3 அறுவடைக்குத் தயாராகி தலைவணங்கி நிற்கும் //4 உழைத்ததற்குப் பலனாய் உழவருக்குக் கிடைக்கும்.//5 - நாகை. ஹாஜா | |
34 | 725 | தரிசைப் புஞ்சையாக்கி ஏரோட்டிச் சீராக்கி/ வயலில் வரப்பிட்டு நீர்ப் பாய்ச்சி/ நெற்பயிர் நட்டு வளர்ந்துக் களையெடுத்து/ நிறைந்த நெல்மணிகளை அறுவடைசெய்தே/ உணவும் பணமும் சேர்த்தானே உழவன் ...........! கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
35 | 348 | கடைமடைக் காவிரி மறிக்காமல் பாய்ந்தால் // சிறுவிழி மழையும் இருகால் ஓடுமே // நடவை நாற்றும் செழிப்பாய் இருக்க // வரப்பும் உயரும் நெல்லும் உயரும் // உழவன் கனவும் உருப்படியாய் உதவிடுமா // உடுமலை ராமர் | |
36 | 482 | நிலத்தை வளப்படுத்தி நீரைக் கட்டுவான் / சேற்றுடன் ஓன்று கலந்து உழைத்திடுவான்/ நாற்றைப் பக்குவமாய் பறித்து நட்டு / பகல் இரவாய்ப் பக்குவமாய் காத்திடுவார் / வரப்புயர நெல் உயர்ந்து மகிழ்ந்திடுவார். தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
37 | 242 | வானம் பார்த்த பூமியிலே நாளும் வரையறை இல்லாமல் உழைத்தே வாழும் உழவனின் உழைப்புக்குக் ஊதியமாய் இங்கே விளைச்சலும் இல்லை விலையும் இல்லை வரப்புயர நெல்லும் உயரும் காலமென்று?…….. கவி செங்குட்டுவன் | |
38 | 707 | மருதமும் இன்றோ மறந்து போனதே/ மனித இனமோ மருந்தில் வாழுதே/ வரப்பினை உயர்த்தியே வாழ்விழந்து போகிறான்/ நெல்மணிகள் உயரவே நெடுங்காலம் உழைக்கிறான்/ இயற்கையதை ஒழிக்கவே எவர்வாழ்வும் உயராதே/ ✍️பா.ச.கண்ணன் | |
39 | 616 | நீர் நிரம்ப நிலம் செழிக்கும்/ நிலம் குளிர்ந்தால் வெள்ளாமை பெருகும்/ உழைப்பின் உன்னதம் உயர்வின் வெளிச்சம்/ இயற்கை உழவனின் உயிர்த் தோழன்/ வரப்பும் நெல்லும் வாழ்வை செழிக்கும்/ கா.கேமலாரூபினி | |
40 | 618 | மேகம் திரண்டு மழையாய்ப் பொழிய/ மண்ணில் எங்கும் மகிழ்ச்சி பொங்க/ பாயும் நீரை வெள்ளமாய்த் தேக்க/ வரப்பை உயர்த்தி கதிர்கள் செழிக்க/ அறுவடை பெருகி வாழ்வு சிறக்குமே/ ஔவை. | |
41 | 605 | வான்மேகம் அமுதத்தை வகையாகப் பொழிந்திடவே / கானாறு பெருக்கெடுத்துக் காசினியை வளமாக்க / ஊணதுவும் உருவாக்கி உண்ணுகின்ற நிலைபெறவே / பூண்டிடுவோம் சபதத்தைப் புவியினிலே நாமுந்தான்/ உயர்த்திடுவோம் வரப்பினையே உலகோரும் வாழ்வதற்கே. மஞ்சுளா ரமேஷ் | |
42 | 562 | உலகிற்கே உணவளிக்கும் உழைக்கின்ற விவசாயி/ என்றும் ஏழையாக இருந்திடலாமா இப்புவியில்/ இயற்கையன்னை தவறாமல் பொழியட்டும் மாமழையை/ வரப்புயர நீருயரும் நல்விளைச்சல் பெருகிடுமே/ உழைப்பவனின் மனம் இன்பத்தில் திளைத்திடுமே/ பா.பத்மநாபன் | |
43 | 723 | அரைவயிறு கஞ்சிச்சோறுக்கு உடல்பூசிய கழனிச்சேறு/ வராமழைக்கும் தராகாவிரிக்கும் நிலம்சிந்திய வியர்வையீரம்/ வரப்புச் சண்டையில் வயல்கள் வக்கீல்களுக்கானது/ விதைநெல்லுக்கும் வாங்கிய கடனுக்கும் அறுவடை/ வரப்புயர்ந்தென்ன வறுமையில் வாடும் என்னுழவன்/ - நெல்லை ஆடலரசன்@Natarajan,துபாய் | |
44 | 674 | பகலெல்லாம் பாடுபட்ட பாமரனும் பசியுடனே// பச்சைத்தண்ணீரோடு பழைய கஞ்சியே ஆகாரமானதே// படுத்தாலும் உறக்கம் இன்றி பாவிகளாய்// வரப்புயர நெல்லுயருமே வாழ்வும் உயருமா// இரா.தேவி | |
45 | 718 | வரப்பு உயர நெல்லும் உயரும்!/ வாழ்வு மிகவே செழித்து ஓங்கும்!/ இரந்து உண்ணும் நிலைமை ஒழியும்!/ இனிய உழவர் இதயங்கள் மகிழும்!/ இன்பமே வாழ்வில் என்றும் தங்கும்!!/ கீழ்கரவை குலசேகரன் இலங்கை | |
46 | 668 | வான்மழை பூமித்தாயை குளிர்விக்க வேண்டி/ வள்ளலாய் நீரை வாரி வழங்கிட/ வரப்பை உயர்த்தும் மண்ணின் மைந்தனின்/ வியர்வை முத்துகள் நிலத்தில் வீழ்ந்து/ உழைப்பின் பரிசாய் நெற்கதிர் விளைகிறது/ ஏஞ்சல் சோபிதா | |
47 | 515 | வானம் பொழிந்தால் பூமி செழிக்கும்/ வயல்களில் வரப்புயர்ந்து நீர்வளம் சிறக்கும்/ விவசாயிகள் உழைப்பு தடையின்றி நடைபெற்று/ விளையும் நெற்கதிர்கள் எல்லோருக்கும் பசியாற்றும்/ வறுமை ஒழிந்து நாடும் உயர்வடையும்/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
48 | 221 | பரபரப்பு வாழ்க்கை பாழாகி மறையாது வரப்பு உயர வாழ்வு செழிக்கும் சிறப்பாய் உரைத்த சிந்தனையை ஒளவை உழவரின் கைகளில் உழுதிடும் கலப்பை உழைப்பைத் தந்திடும் கவலைகள் தீர்ந்திடும் புஷ்பா கிறிஸ்ரி | |
49 | 247 | மழையாய் பொழிந்த மேகத்தை நீரை / மண்ணில் நனைந்திட வளமாய் பயிர்கள் ./ நாளும் வளர்ந்திட வரப்பு உயர்ந்து/ நெற்கதிர் வளர்ந்து உழவனின் மனம்குளிர / தானியம் பெருகி உலகம் செழித்திடும் / த.காமராசு.தாராசுரம் கும்பகோணம் | |
50 | 652 | வரப்புகளை உயரமாக்கி நீரை சேமித்திடு/ நீரின் உயர்வால் நெல்களுக்கு கொண்டாட்டமே!/ கொண்டாட்டத்தில் மென்மேலும் உயர்ந்திடுமே!/ உயர்ந்திடும் நெல்லால் விவசாயிக்கு கொண்டாட்டமே!/ விவசாயிகள் மகிழ்ந்தால் புவியெங்கும் பட்டினியின்மையே! கூ.மு.ஷேக் அப்துல் காதர் |
கவிதை பதிவிட்ட
கவிஞர் பெருமக்களுக்கு வாழ்த்துகள்💐



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக