Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 216 | நோக்கமது செம்மையானால் எண்ணியது நிறைவேறும் வாக்கதுவும் இனிமையானால் வாழ்க்கை ஆனந்தமே தாக்கிடும் தடியரைத் துணிந்தே வென்றிடு நீக்கமற நிறைந்த இறையைப் பணிந்திடு// அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
2 | 210 | எதிர்காலம் பற்றித் தூர #நோக்கு நல்லோர் #வாக்கு பலித்திட துன்பங்களை எதிர்த்துத் #தாக்கு தீய சிந்தனைகளை மனதில் #நீக்கு. திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
3 | 698 | புதிய சிந்தனைகளைத் தினமும் நோக்கு வாக்கிலே வாய்மையை நிறுத்து சோம்பல் எதிரியை தாக்கு தீய எண்ணங்களை அறவோடு நீக்கு தேனி ஆ.சுந்தர் | |
4 | 461 | தூய்மை நோக்கு நெஞ்சம் முழங்கு. வாய்மை வாக்கு வழங்கு. தீமை எதிர்த்து தாக்கு. கடமையில் கையூட்டு களைந்து நீக்கு. கோ.அருச்சுணன் | |
5 | 243 | நோக்கம் நல்லதானால் நன்மையே விளையும் // வாக்கு சாதுரியம் உலகையாளும் // தாக்கும் எண்ணம் உண்டானால்// நீக்கு இன்றே மனம் அமையாகும்// இந்திரா ஆனந்தன் | |
6 | 723 | உன்னை நோக்கியதால் வந்த நம்காதல்/ உற்றார் தாக்கியதிலென் குருதிபோனதில்/ வாக்கு தந்தயென் உறுதிபோகாமல்/ நீக்கிய தடைகளைத்தாண்டியே நடந்தது நம்திருமணம்/ - நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய் | |
7 | 201 | பத்திரிகைச் செய்திகளை உற்று நோக்கு / வாக்குச் சுத்தம் இருக்கிறதா / எதிரியைத் தாக்கும் தன்மையா / தீய சக்திகளை முற்றாக நீக்கு // புவனா சற்குணம் கனடா | |
8 | 614 | நல்லவர்கள் செயல்களை தினமும் நோக்கு/ தீயவற்றை உடனடியாக நிறுத்து/ கொடுமை நடந்தால் தாக்கு/ தீங்கு இழைப்போரை தண்டித்து நீக்கு/ விஜயலட்சுமி | |
9 | 256 | #நோக்கு வர்மம் காதலுக்கு அவசியம்/ #வாக்கு ஏதேதோ வெளிப்படும்/ #தாக்கு சுயநல எண்ணத்தை/ #நீக்கு சந்தேகத்தை வெற்றி நிச்சயம்/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
10 | 450 | கேட்கும் சொற்களில் உண்மையை நோக்கு! பொய்யான வாக்கு கயமையே! அன்பினாலேயே அகிலத்தை தாக்கு! போலிகளை மனதில் இருந்து நீக்கு! ரேணுகா சுந்தரம் | |
11 | 605 | நோக்கத்தை அடைவதற்கு நெஞ்சுறுதி கொண்டிடுவோம் / வாக்கினிலே இனிமை கொண்டு / தாக்க வரும் தடைகளையே / நீக்கிடுவோம் நித்திலமாய் இப்புவியில் வாழ்வதற்கே. மஞ்சுளா ரமேஷ் | |
12 | 348 | ஏதுமற்ற நோக்கு இல்லாத போக்கு // வாக்கு தவறிய சாக்கு // தலை கவிழ்ந்தத் தாக்கு // இருக்கும் குறையை நீயும் நீக்கு // உடுமலை ராமர் | |
13 | 483 | நோக்கும் போது நுண்மை வேண்டும்/ வாக்குத் தவறாமை சிறப்பு / தாக்குத் தனியுடமை கொடுமை / நீக்கு கவவைகளை நிமிர்ந்து செயலாற்று / ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
14 | 557 | தீவிர முயற்சியோடு இலக்கை #நோக்கு தவறாமல் நிறைவேற்று #வாக்கு சமூக அநீதிகளை #தாக்கு தீமை செயல்களை முழுமையாக #நீக்கு கவிஞர் வெற்றிப்பொன்மொழியன் | |
15 | 238 | வாக்களிக்க செல்லுமுன் உற்று #நோக்கு../ நல்லவருக்கே அளித்திடு #வாக்கு../ ஊழலில் ஈடுபட்டால் #தாக்கு../ மறுமுறை வாய்ப்பு வந்திடும் #நீக்கு..// இளந்தை சேது | |
16 | 259 | அலைபேசியை ரகசியமாக நோக்குவதைக் கைவிடு / வாக்குவாதம் புரிந்து வருத்தாதே / சந்தேகம் தாக்கும் நிம்மதியை / மன அழுக்கைச் சுத்தமாக நீக்கு....!! / ஜெயலெட்சுமி | |
17 | 386 | நல்லன அனைத்தும் நாடியே நோக்கு/ நலம்தரும் முன்னோர் வாக்கு/ தீமைகள் இடர்ப்படின் தாக்கு/ தீதெனத் தெரிவதைத் திறனுடன் நீக்கு/. தென்கரை தாயுமானவன். | |
18 | 234 | சுற்றி நடப்பதை உற்று நோக்கு..!! வாக்கு இனிமையை தரும்..!! தாக்கு தடைகளை அறவே..!! நீக்கு மனதில் இருக்கும் தீயதை..!! அமுதா. ரா | |
19 | 727 | குற்றம் நோக்கு சுற்றமில்லை.. யோசித்து கொடுத்திடு வாக்கு.. அநியாயத்தை கண்டால் தாக்கு.. தாழ்வு மனப்பான்மையை நீக்கு.. சுசி சுசேனு | |
20 | 428 | குற்றம் நோக்கு குறைகள் போக்கு. உண்மை ஒன்றே வேத வாக்கு பொய்மை எழுந்தால் எதிர்த்துத் தாக்கு ஏழைக்கு நேரிடும் இன்னல்கள் நீக்கு. சுப்பிரமணியன் அன்புமலர் | |
21 | 716 | பார்வையை என்றும் நேராய் நோக்கு //1 மாற்றாதே சொன்ன வாக்கு //2 கயவரையை எதிர்த்துத் தாக்கு //3 ஏழையின் துயரை உடனே நீக்கு.//4 - நாகை. ஹாஜா | |
22 | 207 | உண்மைத் தன்மையை எதிலும் நோக்கு/ கொடுத்த வாக்கைக் காப்பாற்று/ தடைகளை எதிர்த்துத் தாக்கு/ தீய எண்ணங்களை மனதில் நீக்கு/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
23 | 482 | நோக்கத்தை அடைவதற்கு கடினமாக உழைத்திடுவோம் / வாக்கினிலே உண்மைக் கொண்டு / தாக்கவரும் துன்பத்தை நாளும்/ நீக்கிடவே முன்னேற்றம் அடைவோம் வாழ்க்கையில் தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
24 | 425 | நோக்கும் பார்வையில் மயங்கி விட்டேனே வாக்கும் சுத்தமாக இருக்கட்டும் தாக்கும் வார்த்தையால் பேசாதே நீக்குவாய் நீயும் கசப்பான வார்த்தைகளை கலாகண்ணன் | |
25 | 726 | நோக்குங்கள் சுற்றிலும் கயவர்களை கருவறுக்க/ கொடுங்கள் வாக்கினை வளமையாய்/ தாக்குங்கள் முப்பொழுதும் தடைகளை/ பாரதியினைப் போல் அச்சமதை நீக்குங்கள்/ காளிராஜ்பாலகணேஷ் | |
26 | 283 | சிறந்த நோக்கை மனதில் சுமந்திடில் / வாக்கும் வளமாய் இருந்திடும்/ தாக்குதல் இன்றியே மகிழ்வாயிடும்/ பொறாமை நீக்கியே வாழ்ந்திடு உலகில்/ ஜமுனாமலர் இந்திரகுமார் | |
27 | 347 | அடக்க. வருவதனை அச்சமின்றி நோக்கு / தந்த. வாக்கு காப்பாற்று / தன்மானம் சுடுகையில் தாக்கு / மனதாலும் தீயதைத் தீண்டாது நீக்கு / வேங்கடலட்சுமி ராமர் | |
28 | 735 | சமுக நோக்கு உன் இலக்கு மக்கள் வாக்கு செல்வாக்கு அநீதி கண்டால் எதிர்ப்பு ஆபாச கவிதை கண்டால் நீக்கு ரமேஷ் பைரவி | |
29 | 706 | சுற்றி உள்ளவர்கள் நல்லவர்களா நோக்கு/ யோசித்த பின்பே நீ கொடு வாக்கு/ தவறெனத் தெரிந்த உடனே செய்பவனைத் தாக்கு/ செய்நன்றி மறந்தவனை மனதிலிருந்து நீக்கு/ மாயாதேவி சென்னை | |
30 | 718 | எதிரியின் நகர்வினை உற்று நோக்கு!/ என்றுமே வாக்குகளை நிறைவேற்று,/ பலத்தோடுமே நீ தாக்கு!/ பாதையில் தடைகளை நீ நீக்கு!/ கீழ்கரவை குலசேகரன் இலங்கை | |
31 | 258 | உலகில் எவரையும் சமமாய் நோக்கி/ சான்றோர் வாக்கினை மதித்து/ எல்லையில் எதிரியைத் தாக்கி/ நலமுடன் வாழ்வோம் துன்பங்கள் நீக்கி..! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
32 | 430 | எண்ணங்களில் தேவை தொலைவு நோக்கு // தவற விடாதே வாக்கு // எதிர்த்தால் நேரிடையாகத் தாக்கு // எதிர்ப்படும் இன்னல்களை எளிதாய் நீக்கு // பானுமதி இராஜேந்திரன் | |
33 | 345 | நோக்கும் எண்ணம் தவராக அமைந்திடின் வாக்கும் பொய்யாய் வலிமையிழக்குமே. நீக்கும் நட்பையும் பிரிவாக தாக்கும் தம்மையே தான்சொன்ன பொய். வைர. நாகராசன். | |
34 | 604 | | வெற்றியைத் தொலைநோக்குப் பார்வையால் நோக்கு// வாக்குச் சாதுர்யத்தால் எதையும்// தாக்கும் வல்லமையை வளர்த்து// வரும் தோல்விகளைத் தன்னம்பிக்கையால் நீக்கு// கவிஞர் கோவை ஆறுமுகம் |
35 | 715 | நேர்வழி நோக்கு சொல்லாதே போக்கு தவறாகாது அறிஞர்கள் வாக்கு இலக்கைத் துரத்தித் தாக்கு தேவையில்லாதது உன் மனதிலிருந்து நீக்கு அ.உமர்பாருக். | |
36 | 406 | அற வழி நீ நோக்கு அதுவே வாழ்வியல் வாக்கு புத்திமை கொண்டு தாக்கு கத்திச் சண்டையை நீ நீக்கு....! கிறுக்கி ஆதிரா | |
37 | 522 | நாட்டில் நடந்திடும் அநீதிகளை நோக்கு/ தீயவரைத் துணிந்து தாக்கு/ தீமைகளை வாழ்வில் நீக்கு/ நல்லோரைத் தேர்ந்து அளித்திடு வாக்கு/ _புதுவை.க.சரவணன் | |
38 | 463 | நல்லதை நோக்க நன்மை விளையும் ! சொல்லிய வாக்கு சத்தியமாகும்! அதர்மம் கண்டால் தாக்கிடு! ஒவ்வாத செயலை உடனே நீக்கிடு!! அரவிந்தன் தஞ்சை | |
39 | 652 | எதையும் புரிந்து கொள்ள நோக்கு/ சந்தர்ப்பங்களில் மீறிடாதே வாக்கு/ நம்மை தாக்குபவனை தாக்கு/ வாழ்வில் பொறாமை குணத்தை நீக்கு/ - கூ.மு. ஷேக் அப்துல் காதர் - | |
40 | 562 | எந்தச் செயலையும் விழிப்புணர்வோடு நோக்கு/ கொடுத்த வாக்கைக்காப்பாற்று/ சமூகக் கொடுமைகளைத் தாக்கிடு/ கெட்ட எண்ணங்களை மனதிலிருந்து நீக்கு/ பா.பத்மநாபன் | |
41 | 613 | விளைவுகளை எதிர் நோக்க விரைவோம்// நம்மிடையே வாக்கு வேண்டாம்// எதிர்ப்பு வந்தால் தாக்கு// நம்பினார் கெடுவதில்லை நன்பனானாலும் நீக்குவோம்// ஜெயாசந்திரமோகன் | |
42 | 517 | சான்றோர் வழியை மனதால் நோக்கு/ ஈன்றோரின் வார்த்தையே வாக்கு/ உயர்வினில் இடரினைத் தாக்கு/ முயற்சியைத் தடுக்கும் சோம்பல் நீக்கு/
-ஆனந்த் சுந்தரராமன் | |
43 | 254 | நோக்கும் போக்கும் சரியாக அமைந்தால்/ வாக்கும் வளம் காணும்/ தாக்கும் எண்ணம் தங்கினால்/ நீக்கு வாழ்வு நலம் பெறும்/ கி.மா.கனகராசன். சூலூர். | |
44 | 423 | நோக்கும் வினையும் ஒன்றென இருப்பின்/ வாக்கும் செயலும் சிறப்புறுமே/ தாக்கும் எண்ணம் வந்துவிடின்/ நீக்கும் நல்லவை நினைவில் இருந்தே !/ க.தங்கவேலு. | |
45 | 636 | கொண்டிடு என்றும் அரிமா நோக்கு/ கொடுத்திடு உண்மை வாக்கு/ தகவிலர் தருவர் தாக்கு/ தகாத நட்புறவு சடுதியில் நீக்கு! சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி | |
46 | 737 | நோக்கு சிறப்பாய் அமைய வேண்டும் வாக்கில் வாய்மை வேண்டும் தாக்கி அழித்திடு பகைவரை நீக்கு நெறி பிறழ்ந்தோர் உறவினை திருமதி சரோஜனி நடேசன் | |
47 | 674 | நல்லன நோக்கு நன்மை பயக்கு // பெரியவர்களின் வாக்கு பெற்றிடவே // தீமைகளை தெரிந்து தாக்கு // வாழ்வில் தேவையற்ற தேடலை நீக்கு// இரா.தேவி | |
48 | 296 | வறியவரைக் காண்பின் கனிவுடன் நோக்கு/ நிலையறிந்து கொடுத்திடு வாக்கு/ இடர்வரின் அன்பினால் தாக்கு/ குறை சொல்வதை அடியோடு நீக்கு/ சுஜந்தினி யுவராஜா | |
49 | 344 | உனக்கென உருவாக்கிக் கொள் பணிநோக்கு அதையடைவதாய் வாக்குப் பண்ணு வரும் சவால்களைத் தாக்குப்பிடி வெற்றியடையுமட்டும் சோம்பலைத் தூர நீக்கு! எமா | |
50 | 582 | தினமும் பெறுவாய் ஈசனருள் வாக்கு மனத்தில் சினத்தை நீக்கு குணத்தில் அறத்தைத் தேக்கு இனத்தின் பகையை ஈரமின்றித் தாக்கு! நெடுவை இரவீந்திரன் | |
51 | 263 | நோக்கு தூரமாய் இருத்தல் சிறப்பு வாக்கு சுத்தம் வேண்டும் தாக்கும் வார்த்தைகள் தவிர்த்திடு நீக்கு மனதில் குரோத எண்ணத்தை அன்பரசு சுமதி | |
52 | 733 | இன்பமே இதயமே எனை நோக்கு மாறாது என்பதே வாக்கு காதல் கண்களால் தாக்கு கைபிடிக்க மறுத்தால் மன்னவனை நீக்கு கவிஞர் கோ.நவமணி, மணப்பாறை | |
53 | 717 | சிந்தனையில் வேண்டும் தூரநோக்கு சிந்தித்தே அளிப்பாய் வாக்கு வாழ்வின் கொடுமைகள் தாக்கு வரவுக்கு மீறிய செலவினை நீக்கு கந்தசாமி நடேசன் | |
54 | 734 | உற்று நோக்கு.......... தவறாமல் இருக்கட்டும் நீ கொடுத்த வாக்கு..... தீயவைகளை கண்டால் உடனே போட்டுத் தாக்கு.. பொறாமை..தீயகுணங்களை மணதில் இருந்து நீக்கு........ ...ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன். | |
55 | 709 | ஏற்றத்தாழ்வுகள் இன்றியே நேர்பட நோக்கு// கூறிடு நம்பிக்கை வாக்கு// மடமைகள் அனைத்தையும் தாக்கு// சாதித் தீட்டுகள் முற்றிலும் நீக்கு// தாழை. இரா. உதயநேசன் | |
56 | 707 | அகக்கண் கொண்டு அத்தனையும் #நோக்கு/ அரவணைப்பாய் இருக்கட்டும் #வாக்கு/ அநீதி கண்டு #தாக்கு/ மற்றவர் புரளியை மதியினின்று #நீக்கு/ ✍️பா.ச.கண்ணன் | |
57 | 618 | நல் நோக்குடன் செயற்படும் பிரதிநிதியை/ வாக்களித்து தெரிவு செய்தால்/ தாக்குதல் எதுவும் இன்றி/ போலிகளை அதிகாரத்தில் இருந்து நீக்கலாம்/ ஔவை. | |
58 | 732 | நன்மை பயக்கும் செயல்களை நோக்கு/ அதிகரிக்கும் உன் செல்வாக்கு/ தீயவற்றை அஞ்சாமல் தாக்கு/ நண்பர்களாக இருந்தாலும் கண்டித்து நீக்கு/ கீதாஞ்சலி | |
59 | 409 | இதையும் நோக்கு எதையும் கவனி// எதற்காக வாக்கு அளித்தாய்// அதனால் தாக்கு அவனுக்கே// சினம் அதனை நீயே நீக்கு// ********** க.சுதர்சனக்குரு | |
60 | 388 | கண்களில் வேண்டும் கனிந்த நோக்கு ஆளறிந்து கொடுத்திடு வாக்கு, அநியாயத்தை எப்போதும் தாக்கு அச்சம் என்பதை அறவே நீக்கு...! செண்பக ஜெகதீசன்... | |
61 | 721 | அகன்ற பார்வையால் அகிலத்தை நோக்கு./ அன்புக்கே அளித்திட வாக்கு./ அநீதியை உந்தன் அகிம்சையால் தாக்கு./ அறிவால் இருளை நீக்கு./ .....பாலு தியாகராசன்..... | |
62 | 692 | குருவின் கருவான கருத்தை நோக்கு!/ தேசமே மந்திர வாக்கு!/ தடுத்திடும் தடைக்கற்களைத் தாக்கு/ மேன்மை படுத்தாத தாழ்வெண்ணங்களை நீக்கு/ முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு | |
63 | 244 | கர்ணனின் பேராற்றலை நோக்கினான் கண்ணன் // பெற்றவளின் வாக்கில் அடிமையாக்கினான் // தமையனைக் கொண்டே தாக்கினான் // தர்மத்தையே தானமாக்கி நிலைத்திட்டான் கர்ணன் // கவிஞர் கோவை செல்லப்பன் | |
64 | 668 | நற்சிந்தனை நிறைந்த தீர்க்கமான நோக்கமும்/ வெளிப்படும் வாக்குகளில் கனிவும் நேர்மையும்/ புழுதிப் புயலென தாக்கும் துன்பத்தையும்/ அறிவைக் கொண்டு நீக்குவாய் தீமையை/ ஏஞ்சல்சோபிதா | |
65 | 287 | வாக்கின் வலிமை வாளினும் மிகுதி தாக்கும் முறையைப் பொறுத்து வெறுப்பை நீக்கிடின் நன்று இன்றேல் நோக்கு திரும்பிடும் நம்மீதே தண்டபாணி | |
66 | 725 | நோக்கு உலகை உண்மை விழியால்/ வாக்கு சேகரி நேர்மையாக/ தாக்கு அநீதிகள் இழைப்போரை/ நீக்கு அவர்களை உனதுத் தொடர்பிலிருந்தே..! கவிஞர். மரு.கி.ம.எழிலன் | |
67 | 578 | நேர்மையே உலகினில் வாழ்வென நோக்கு// உயிரென எண்ணு வாக்கு// பொய்ம்மையை உடைத்து தாக்கு// போலி முகங்களை நட்பினில் நீக்கு// ...கவியாசகன்...!!! | |
68 | 569 | நோக்கு எதிர்காலம் உந்தன் கைகளில் // வாக்கு நேர்மையாக இருக்க // தாக்கு தடைகளை நீயும் // நீக்கு எதிர்மறை சிந்தனைகளை என்றும் // செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன் | |
69 | 722 | நேர்க்கொண்ட பார்வையால் திறம்பட #நோக்கு/ அறமான வாழ்வில் நேர்மையான #வாக்கு/ பெண்மையை வதைக்கும் புல்லுருவிகளை #தாக்கு/ அறியாமையை இயலாமையை என்றும் #நீக்கு/ சுஜாதா அருணாச்சலம் திருப்பூர் | |
70 | 291 | எதிர்காலத்திற்கு தேவை நீண்டகால நோக்கு இதனைக் கருதி போடு வாக்கு தடைகள் வரின் நேரடியாகவே தாக்கு கூடவே தீயனவற்றைத் தேடி நீக்கு ஜெயா தமிழினி |
சனி, 8 ஆகஸ்ட், 2020
06.08.20-நோக்கு, வாக்கு, தாக்கு, நீக்கு
Tags
# கவிதை போட்டிகள்
# மின்னலாய் ஒரு பின்னல்
# முடிவுகள் நிலுவை
Share This
About பாலா திரு
முடிவுகள் நிலுவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக