அருவி - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அருவி











Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

462

வாழ்க்கையை வாழும் வழி தெரியவில்லை/

குழப்பத்தைத் தீர்ப்பார் யாரும் இல்லை/

அருவி கூறியது என்னைப் பார்/

என்னைப் போல ஓடிக் கொண்டேயிரு/

தெளிந்தது மர்மம் ஓடுகிறேன் நிற்காமலே/


தயா

2

697

மழையில் நனைந்த மலைக் கிழவி / 

நீர்க் கூந்தலை நிலத்தை நோக்கி / 

தலைகீழாய் உலர்த்தி மகிழ்கிறாள் அருவியாய்

கார் காலம் நரைத்த நிலையில் / 

காற்றோடு நீர்த் திவலைகள் விளையாடுகின்றன...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை...

3

698

காற்று மண்டலங்கள் தென்றலாய் சப்தமிட//

கார்மேகக் கூட்டங்கள் கைக்கூடித் துளிர்க்க//

வெள்ளமாய் கரைப்புரண்டு அருவியாய்க் கொட்டுகிறது//

இயற்கையின் கொண்டாட்டம் எழிலாய்த் தோன்ற//

மனிதனின் திண்டாட்டம் குளிராய் குறைகிறது//


தேனி ஆ.சுந்தர்

4

477

வெள்ளிச் சலங்கை சூடிய மாதவி//

ஆடும் ஆட்டம் காணுவோம் வாரீர்//

சூட்டைத் தணிக்க அருவியாய் வந்தாள்//

மூலிகை முத்தம் உடலெங்கும் தந்தாள்//

மீண்டும் வருவாயா?கண்ணீரோடு கேட்டாள்???//


ரத்னபாரதி

5

735

இயற்கையின் இன்ப ஊற்று

சுற்றுலாவில் மகிழ்வு

அருவியின் அரும்பணி

பசுமையின் தோழமை

நாட்டின் செழுமையெ


ரமேஷ் பைரவி

6

409

கருமுகில் வந்தாலே கனமழை பொழியும்//

ஊரில் மண்ணும் வளம் பெறும்//

மலைகளில் இருந்து அருவி சொரியும்//

பலவித சுகங்கள் பலன் அளிக்கும்//

மாந்தர்க்கு கையாள்வது அவரவர் திறமையே//

****************

க.சுதர்சனக்குரு.

7

614

பசி போக்கிட வருமானம் இல்லை/

வேலை கொடுப்போர் யாரும் இல்லை/

கொட்டும் அருவி போல் வாழ்க்கை/

முடிவில்லாமல் செல்கிறது புகலிடம் தேடி/

கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்து/


விஜயலட்சுமி

8

715

அசைந்தாடும் மேகமாய் பாறைகளுக்கிடையே வடிகட்டி

கரடு முரடான  கற்களில் மோதி

சேதாரம் ஏதுமில்லாமல் இறங்கும் அருவி

உடையாமல் உருண்டோடி வளையும் நாணலாகும் 

மனமும் ஆற்றில்  படகாய் நடனமாடும். 


அ.உமர்பாருக்.

9

280

மலையின் உச்சியில் மறைந்து நின்றாய்//

மருத்துவ மூலிகைகள் சேகரித்து வருவாய்//

மழையில் கொட்டும் அருவி அழகாய்//

குளிக்கத் தூண்டும் குளிரும் நடுங்கும்//

வேடிக்கைப் பார்த்து வீட்டுக்குத் திரும்புவோம்//


கோட்டீஸ்வரி ராமசாமி

10

428

தென்றலது தேவதையாய் தேகத்தைத் தீண்டியதே

குற்றாலச் சாரலிலே குளிரென்னைச் சீண்டியதே

கொட்டும் அருவி குளித்திடவா என்கிறதே

என்னவள் துணையின்றி நனைவதற்கு மனமில்லையே

அருகிருந்தால் அவளுடனே அந்திவரை மூழ்கிடுவேன்.


சுப்பிரமணியன் அன்புமலர்


11

307

ஓங்கிய மலையில் ஊற்றாய் பிறப்பாய்//

ஓடைகளாய் ஒன்றுசேர்ந்து சிற்றாறு சேர்ந்திடுவாய்//

நீர்நிலை அடைந்து அருவியாய் பொழிந்திடுவாய்//

உன்போக்கில் சென்று கடலிலே கலந்து//

நீர் சுழற்சியால் மழையாய் பிறந்திடுவாய்//


வில்லியம் சம்ராஜ்


12

483

விழுந்தாலும் நடந்தாலும் வியனுலகு பயனுறுமே/

பொழிகின்ற மழைவெள்ளம் புரண்டுவிழும் மலையில்/2

எழில் ததும்பும் அருவியாய் இன்பத்தின் எல்லையது / 3

வழியெல்லாம் மூலிகையின் வளமெடுத்து மக்களுக்குப்/4

பழுதின்றித் தொண்டுசெய்யும் பாலெனவே மனம்மயங்கும்/5


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

13

254

துளித்துளி மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி/

பாதை அமைத்து ஓடுவதால் ஆறானாய்/

சோதனைகள் வரும்போது பாயும் அருவியானாய்/

பார்ப்போருக்குப் பாடம் ஒன்றைச் சொல்கிறாய்/

சோதனைகளை சாதனையாக்கி  வாழ்வில் வெல்லலாம்/


கி.மா.கனகராசன். சூலூர்.

14

722

கார்முகில் கூட்டம் முகடுகளின் நடுவே/

மலையைக் கடந்து சென்ற கருமேகம்/

பொறாமையால் கண்டது வீழ்ந்த #அருவியை/

இரைச்சலின் ஓசையை ரசித்து ஆர்ப்பரிக்கும்/

ஆனந்த அழகில் மயங்கி சென்றது/


சுஜாதா அருணாச்சலம், திருப்பூர்

15

671

மலைமகள் முந்தானை காற்றில் அசைந்திட

அழுதிடும் மண்குழந்தைக்கு அமர்ந்தபடி பாலூட்டும்

அன்பின் அழகுதான் வெள்ளை  அருவியானதோ

விந்தையோ விண்வெளி வீசிடும் சாமரமோ

வெண்ணிற ஆச்சரியக்குறியோ அழகின் தொங்கலோ...


கி.அருள்குமரன். தலைஞாயிறு.

16

238

மலையில் பிறந்த மழலை நீயே../

மகிழ்ந்து மடங்கி மண்ணில் மணக்கும்../

சரிந்து தெரிக்கும் சாரல் அருவி../

படர்ந்து நிலத்தில் பாய்ந்து நிறைக்கும்../

நன்செய் புன்செய் செழித்து வளரும்..//


#இளந்தை சேது


17

721

கார்மேகம் கருக்கொண்டு பார்மீது நீர்த்தூவ,/

நிலமகளின் மேனியிலே நெளிந்தோடும் நீரழகே./

அருவியெனப் பேராகி அசைந்தாடும் பேரழகே./

வீழ்ச்சியும் தோல்வியன்று விளக்கிட்ட தத்துவமே./

அனைத்தும் உன்னாலே அறிவோமே மண்மேலே./


......பாலு தியாகராசன்....


18

207

பச்சைப் பட்டுடுத்தி பரவசமாய்த் திகழும்/

அழகிய மலைத்தொடர் ஆனந்தக் காட்சி/

சிந்தைக் குளிரக் கொட்டும் அருவி/

வீழுகின்ற அருவியில் குளித்தாலே குதூகலம்/

மூலிகைகளைச் சுமப்பதால் நோய்கள் தீரும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

19

344

குருவி போல உயரப் பறந்திடு

கருவி போன்ற வாழ்வை மறந்திடு

அருவியாகப் பூவுலகில் பொங்கிப் பாய்ந்திடு

மருவி வரும் குணங்கள் காத்திடு

உருவி நீயும் தீயதை வீசிடு!


#எமா#

20

718

இயற்கை அழகோ எங்கும் கொஞ்சுகின்ற/

இனிதான மலை முகட்டிலே இருந்து/

மலை அருவி பாய்ந்தே வரும்!/

மனங்களுக்கு மகிழ்வினை அள்ளித் தரும்!/



கவிஞர் கீழ்கரவை குலசேகரன்

21

732

மலைகள் மீதிருந்து உருண்டு புரண்டு/

செடி கொடிகளை கடந்து வருகையில்/

மூலிகைளுடன் கலந்து  வரும் அருவி/

நோய் நொடியின்றி நாம் வாழ/

இயற்கை அளிக்கும் உன்னத பரிசு/


கீதாஞ்சலி

22

618

இயற்கையின் அழகாய் இறைவன் படைப்பாய்/

இமயத்தில் இருந்தும் மண்ணின் காதலால்/

இறங்கி வரும் அருவித் தாயே/

இவ்வுலகம் உய்த்து உயர்ந்து வாழ/

இரங்கும் உனதருள் மண்ணிற்கு வரமே/


ஔவை.

23

688

மலையோரம்  தென்றல் வீசும் குளிர்மையாக/

சாலையோரம்   கைகோர்த்து நடப்பார்கள் மகிழ்ச்சியாக/

அருவி கொட்டும் இடங்களில் சலசலப்பாக/

கேட்கும் சத்தங்கள் மனதுக்கு இதமாக/

ஆனந்தமான வாழ்க்கை தருமே  நிம்மதி/


கீத்தா ராமன்

24

386

அன்பே அணைத்ததும் ஆரத் தழுவுகிறாய்/

ஆனந்த மழையிலே உடலே சிலிர்க்கிறாய்/

அருவிபோல் ஏன்தானோ கண்ணீர் உகுக்கிறாய்/

அன்புக்குக் கரையின்றி உடைப்பாய் வழியுதோ/

ஆசையில் கூடுவேன் அணைகள் போடுவேன்/.


#தென்கரை##தாயுமானவன்#

25

463

மலையினில் பெய்த மழைத் துளியெல்லாம் /

திரண்டு காட்டாற்று வெள்ளமாய்ப் பாயும் /

அருவி எனும் பெயரில் தானும்

வின்னில் இருத்து நிலம் நோக்கி

பாய்வது வீழ்வது போல் இருக்கும் /

நிலவினை உருக்கி ஊற்றியது யாரோ....


அரவிந்தன் தஞ்சை

26

259

ஓசையுடன் வெண்மேகக் குவியலாய் கொட்டும் /

கண்ணுக்கும் உடலுக்கும் வழங்கும் குளிர்ச்சி /

உச்சி மலையின் வற்றா அருவி /

உல்லாச உற்சாகக் குதூகலத்தின் தளமாகும் /

வயது வரம்பின்றி அனைவரையும் கவரும் /


ஜெயலெட்சுமி

27

348

பழைய ஆணையை விட்டுத் தள்ளுங்கள் //

விளையும் மூடத்தனத்தைச் சுட்டு விடுங்கள் //

அசையும் கணக்கில் அருவிப் பெருக்கில் //

தூங்கும் நாவாயும் கரையைச் சேரட்டுமே //

ஏங்கும். தாகமும் விரைவில் தீரட்டுமே //


உடுமலை ராமர் 

28

707

நித்தமும் விழுகிறது விழுந்ததும் எழுகிறது

நில்லாமல் பாய்கிறது நிம்மதியாய் வாழ்கிறது

அருவி போலவே ஆனந்தம் கொள்ள

அன்றாடம் நீயும் அயராது உழைத்திடு

கெடுதலை அகற்றி கேடின்றி வாழ்ந்திடு


✍️பா.ச.கண்ணன்

29

226

மலையில்  விளைந்தாலும்  கடலையேச்  சேருமது// 

மண்ணின் துணைநாடும் வெள்ளி  நீரோடையது //

ஓடைகளாய் ஒன்றிணைந்து அருவியாய்க் கொட்டிடுமே/ /

மந்திரச் சலங்கையென மலையினின்றுப் பாய்ந்தோடும்/ /

வழிநெடுக வளமாக்கி  மக்களால் வாழ்த்தப்படும்!!!

&&&&&&&&&&&&&&&

இராம.சுதாகரன்..சென்னை..

30

737

மேகம் கறுத்தது மின்னல் இடித்தது

தாகம் தீர்க்க தரணி செழிக்க

ஆகாய கங்கை அருவிகள் ஆகி

ஆர்ப்பரித்து ஓடின ஆழியுடன் கலந்தன

அவனி எங்கும் பசுமை விளைந்தது


திருமதி சரோஜனி நடேசன்

31

723

கடலின் நீரெடுத்து ஆவியென மேகமானாய்/

கார்மேக புணர்ச்சியில் துளித்துளியாய் மழையானாய்/

மழைநீர் பெருக்கெடுத்து பொதிகைமலை அருவியானாய்/

வீழ்ந்த நிலமோடி ஆறென கடலடைந்தாய்/

வாழ்வின் ஓட்டமோர் சக்கரமென கற்ப்பித்தாய்/


- நெல்லை ஆடலரசன்@Natarajan   துபாய்   

32

434

மண்ணுக்குள் புதைந்த வளங்கள் ஆயிரம்/

தோண்டக் கிடைக்கிறது தமிழரின் அடையாளம்/

அருவி போன்று கம்பீரமாய் காட்சியளிக்கும்/

தேடலில் கிடைத்திடும் புதைபொருள் ஆதாரங்கள்/

உலகமே பாராட்டும் தமிழரின் பாரம்பரியம்//


மீனாட்சி சுந்தரம்

33

652

எங்கிருந்து இங்கு வந்தாய் அழகிய/

எப்பொழுது நின்று பேச போகிறாய்/

ஆழமாக குதிக்கும் அருவியே பயமில்லையோ?/

எங்கு விரைவாய் ஓடி செல்கிறாய்/ இயற்கையின் அழகு செல்வம் நீயுமல்லவோ?/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

34

347

பருவத்தில் பெய்திடும் மழைநீர்  கூட்டணி /

தடைகளைத் தாண்டி தாவியே பாய்ந்திடும் /

தடுத்திட முனைந்தால் தகர்த்திடும் அருவி/

இயற்கை அன்னை வெண்கேசம்  உலர்த்துகின்ற

காட்சியினை ஒக்கும் பார்த்தாலே பரவசம்/


வேங்கடலட்சுமி ராமர்

35

616

இயற்கை அன்னையின் அழகிய கொடை#

சிகரத்தில் பூக்கும் வெள்ளைத்தாமரை#

அருவியாய் பொழியும் ஆனந்த மழை#

காண்பவரை மயக்கும் வெள்ளை மேனகை#

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவுப்பாலம்#


கா.கேமலாரூபினி

36

261

தென்மேற்குப் பருவமழை அண்டை மாநிலங்களில்

அளவுக்கு அதிகமாக பூமியில் பொழிந்திட

திசை மாற்றப்பட்ட உபரிநீர் அருவிகளில்

ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகினைக் காண்பதற்குக்

கண்கள் இரண்டும் புண்ணியம் செய்தனவோ !


~ வள்ளல் இராமமூர்த்தி

37

482

மலையில் இருந்து புறப்பட்டதே வெள்ளமாக /

மனதுக்கு மகிழ்வை கூட்டுதே அழகை/

அருவி கொட்டும் எழிலை கண்டேன் /

கவலைகள் காணாமல் போனது எனக்கும் /

இயற்கை அற்புதம் மனதுக்கு நிம்மதி .


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

38

317

கானக வழியில் விழுந்தது தண்ணீர்/

காணக் காட்சியில் அழகானது பன்னீர்/

அருவித் துளியில் ஆனந்தம் வெண்ணீர்/

ஆர்பரித்துக் கொட்டும் ஆடியில் மழைநீர்/

ஆபத்து இருப்பதை உணர்ந்துத் தவிப்பீர்/


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

39

725

மேலிருந்து விழுந்தாலும் சிலிர்த்து எழுகிறாய்/

உற்சாக மிகுதியால்  மகிழ்ந்து சீரிப்பாய்கிறாய்/

சிற்றோடையை நதியாக்கும் அருவி நீயே/

எல்லோரையும் மனம் குளிரச் செய்கிராய்/

வெண்மை நிறத்திலிருந்து சமாதானத்தையும் உணர்த்துகின்றாயே.......✍️


கவிஞர். மரு.கி.ம.எழிலன்

40

388

உருக்கி யூற்றிய வெள்ளியாய் வீழ்கிறாய்

உள்ளங்கள் எல்லாம் கொள்ளை கொள்கிறாய்,

அருவி உந்தன் அழகிலே மயங்கினோம்..

நிலத்தில் நதியாய் நீயே ஓடிடினும் 

நிலைத்திடும் நீரின் வீழ்ச்சியாய்ப் பேரழகே...!


செண்பக ஜெகதீசன்...

41

717

கறுத்தது மேகம் தெறித்தது மின்னல்   

இடித்தது வானம் பொழிந்தது மழையே

ஓடைகள் அருவிகள் ஆறுகள் விரைந்தன

ஓதும் கடலினைக் கலக்க விழைந்தன

உழவோர் உழைப்பில் உவகை கொண்டனர்


கந்தசாமி நடேசன்

42

716

அருகில் வர தயங்கி நின்றேன் //1

தண்ணீர்க் கொண்டு  தலையில் அடித்து //2

சத்தியமே செய்து நான்தான் அருவியென்றாய் //3

தேகம் பிடித்து வலி எடுத்தாய் //4

நீ அருவியல்ல இயந்திரக் கருவி.


- நாகை. ஹாஜா

43

221

தாளத்துடன் ராகத்துடன் தானாகப் பாய்கிறது

தாகத்துடன் இருக்கும் தன்னுயிரைக் காக்கிறது

வீழ்ந்தாலும் வேகத்துடன் நடந்திடும் அருவி

தாழ்திடாது சோர்ந்திடாது தொடர்ந்து நடக்கிறது

பள்ளத்திலும் மேட்டிலும் பாதைகளக் கடக்கிறது


புஷ்பா கிறிஸ்ரி

44

668

வான்மழை நிலத்தில் பொழிந்திட நீரானாய்/

காணும் இடமெல்லாம் உரிமை கொண்டாய்/

மலையிலிருந்து வீழ்ந்திட அருவி யென்ற/

பெயர்க் கொண்டு அனைவரின் மனதையும்/

கொள்ளைக் கொண்டாய் இயற்கையின் படைப்பே/


ஏஞ்சல்சோபிதா

45

674

வானமகள்  வடித்த கண்ணீரில் வந்திறங்கி //

பாறை இடுக்கில் பதுங்கி பயந்தோடி //

பருவத்தில் பாயும் அருவி    நீயோ  //

உந்தன் அழகில் அனைவரையும்  ஆழ்ந்திடவே//

உலகின்   எட்டாம் அதிசயம்   என்பேனே//


இரா.தேவி

46

270

கயல்நீந்தும்      கடல்நீரும் கனன்றதால் ஆவியாக  !//

உயரமாய்       எழும்பியே உலாவரும் மேகமாகி   !//

அயராது       மழைபொழிய அருவியாய் உருவெடுத்துப்  !//

பயமின்றிப்       பாய்கிறது பார்தழுவி ஓடவே !//

நயமுடன்       நாட்டினை நலமுடன் செழிப்பாக்க  !//


தளவை வில்லவன்கோதை . அண்ணாமலைப்புதூர் .

47

654

அரங்கினிலே  இசை வாணரின் பண்ணிசை!   

பாய்கின்றது இசையெனும் இன்ப வெள்ளம்! 

ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியென.கீதமழை! 

இன்னிசை கேட்டிடும் மாந்தரெல்லாம் மயங்குகின்றார்!    

மகுடியின் ஓசையில் மயங்கிடும் நாகமென! 


பொன் .சுந்தர பாண்டியன் சோழவந்தான்

48

741

மலையின் மழலையே மண்தொடும் விடலையே /

விட்டு உருவியே கொட்டும் அருவியே /

இரைந்திடும் இசையே ஈடில்லா விசையே /

ஒய்யார ஓசையே உனக்கில்லை பாசையே /

இடறி விழும் வெள்ளைக் கம்பளமே /

இடறி விழுபவர் ஆவார் நொம்பலமே /

இயற்கை விரித்த திரைச் சீலையே /

தண்ணீர் கொண்டு செதுக்கிய சோலையே/

நீ மட்டுமே விழுந்தால் அழகு /

மற்றவை விழுந்தால் ஆகுமே பழுது /

கண்ணைப் பறித்திடும் நீர் வீழ்ச்சியே /

கண்ணால் கண்டிடகிட்டும் எழுச்சியே /


கவிரதன்,மதுரை

49

636

முத்தான கருத்தில் நின்று நிறுவி/

மூன்று வார்த்தை கவிதை தருவி/

கவிதை எழுத தலைப்பு அருவி/

கவினுறு சொற்கள் தமிழில் தருவி/

தானொரு கவிஞர் என்று நிரூபி!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

50

562

மலைகளில் பிறப்பெடுத்து மண்ணை வளமாக்குகிறாய்/

கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கிறாய்/

அருவியே உன்னழகை புகழாதக் கவிஞருண்டோ/

மூலிகைச்செடிகளை தழுவிப் பொழிகிறாய்/

உன்னத மருத்துவராய் உடலைக்காக்கிறாய்/


பா.பத்மநாபன்

51

728

மலை முகட்டி லிருந்து மழைநீர்//

அலையெனத் திரண்டு அடி நோக்கி//

விழுவதையே அருவியென விளம்பி நிற்போம்//

கலையழகு போலிருக்கும் அதன் ஒலியில்//

உளம் மகிழ்வோம் இயற்கையினை நாம்மதிப்போம்.//


ஆவூர்க்குமரன் தமிழீழம்,

(கணபதிப்பிள்ளை சிவகுமார்),சுவிட்சர்லாந்து

52

373

கொட்டும் மழை சில்லென்ற காற்று

குளிர்ந்த நிலவு நிறைந்த மனது

சலசலவென அருவி சாய்ந்து ஓடுது

குளித்திட ஆசை நித்தமும் ஓசை

பார்க்க அழகும் பருவத்தின் வயது!!


ஜயந்தினி வாகீசன்

53

201

மலைகளில் ஊற்றெடுத்து மண்ணை வளமாக்கி /

மேலிருந்து கீழ்நோக்கி ஓடிவந்து குதிக்கிறாய் /

அருவியே உனதழகைப் பாடாத புலவருண்டோ//

ஆர்ப்பரிக்கும் உன்னழகில் மயங்கியே சாய்கிறேன்/

அழகோடு அசைந்தாடி விரைந்தோடி வந்திடுவாய்//


புவனா சற்குணம்  கனடா

54

504

சாரல் கொண்டு நீயும் வீச//

சத்தம் இன்றி நானும் பேச//

ஆனந்த மொழி சிந்தும் அருவியே//

உந்தன் அழகில்  நனைந்தேன் மயங்கியே//

நீராட வேண்டும் நித்தமும் நீயே//


மு.சந்தோஷ்

55

613

ஆடிக்காற்றோடு மழையும் சேர்ந்து அடிக்க//

துளித்துளியாய் கொட்டும் பன்னீரைக் கண்டேன்//

குற்றால அருவியிலே குளித்த ஞாபகம்//

மேலிருந்து விழ்ந்தாலும் மலைகளின் மருந்தாவாய்//

என்னே  சுகம் சிறுப்பிள்ளை  ஆனேன்//


ஜெயாசந்திரமோகன்

56

726

கடவுள் கொடுத்த சுவையான பானமே/

உன்னில் மூழ்கியவனுக்கு கிடைக்கும் மோட்சமே/

தீராத அமுதினைக் கொண்ட அருவியே/

மேகங்களின் வீட்டு யுத்தத்தில் உருவானாயோ/

தெய்வங்கள் தட்டிவிட்ட குடத்து நீரே/


--காளிராஜ்பாலகணேஷ்

57

258

பொத்துக் கொண்டு பூமாரி பொழிய/                          ஆடிக்காற்று சில்லென, நெஞ்சை ஆரத்தழுவ/

அருவியாக வீழுகின்ற நீரினை, பூமியன்னை/

பொறுமை கொண்டு வாங்கியே வழங்குவாள்/ 

வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நீ பூமியாகிடு..!


                   தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.             










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages