sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 261 | இயற்கைச் சீரழிவு இதயத்தைக்ழ கரைத்திடுதே மண் சரிவில் மாண்டவர் பலரே தடைகளைப் படிகளாக மாற்றிடுவோமே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
2 | 735 | சுவர் வாழ்ந்தால் ஓவியம் நிலைக்கும்/ இயற்கைப்பாதுகாப்பு பிரபஞ்சம் பசுமை/ உலகம் உயர உழைப்பாயே,
படைப்பாளி பைரவி | |
3 | 482 | இயற்கைச் சீற்றம் இதயம் வாட்டுதே! எத்தனையோ உயிர்கள் மண்ணில் புதைந்ததே ! நினைத்தாலே கண்ணீர் பெருகுதே. தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
4 | 588 | மணலைச் சுரண்டியதால் அலைகள் சீறியது;/ பசுமை வனத்துடன் விலங்களையும் அழித்ததால், / தீய்ந்தோம், சரிந்தோம், புதைந்தோம். /
- - சர. பாரிஉமா | |
5 | 238 | இன்பமதை விதைப்பாய் இனிமையாய் இருக்கையில்../ காணாதத் துயரத்தை கட்டவிழ்த்து விடுவாய்../ வரம்பினை மீறும் மானுடர்க்கு../// #இளந்தை சேது | |
6 | 770 | இயற்கை சீற்றம் இன்னல்கள் கொடுக்குதே// பயணித்த வாழ்வு பாதியில் முடியுதே// இனிய வாழுவு எப்போது வருமோ// ஸ்ரீதர் லெட்சுமணன் | |
7 | 462 | இயற்கையின் சீற்றம்/ மனிதன் மீதான இறைவனின் கோபம்/ திருந்து மானிடா தயா | |
8 | 344 | அன்னை இயற்கை அழுதாள், அடங்கினாள்,பொறுத்தாள்.. ஆனாலும் மானிடர் அடங்கவில்லை இன்றோ ஆத்திரத்தில் கொதிக்கிறாள்! #எமா# | |
9 | 317 | மண்ணிலே புதைந்து போனது குடும்பம் கண்ணிலே கண்ணீர் வருவது நிறைந்தும் இதையெப்படித் தேற்றுவது அழுதும்... க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம்,அவிநாசி | |
10 | 614 | ஒரு பக்கம் மழையும் வெள்ளமும்/ மறுபுறமோ பசியும் பிணியும் வாட்ட/ அல்லல் படும் மக்கள் கூட்டம்/ என்று தீரும் இயற்கையின் சீற்றம்/ விஜயலட்சுமி | |
11 | 710 | இயற்கையை இயல்பாக இருக்க விடாது/ சீண்டி விளையாட நினைத்தது செயற்கை / சீற்றமாகி எழுந்தது இயற்கை/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
12 | 580 | இறைவன் தந்த இயற்கை உலகை/ துறைகள் சொல்லி அழித்திடும் போது// இறைவன் ஆடும் தாண்டவம்// சுந்தரலிங்கம் நிருத்திகன்., அல்வாய். | |
13 | 247 | ஊருவிட்டு ஊருசென்று மண்ணிலே மடிந்து மறைந்து போனவர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம் விண்ணிலே சென்று அலைந்து த.காமராசு. உ.எண்.247 தாராசுரம் கும்பகோணம் | |
14 | 312 | இயற்கை அழிவு பேரழிவு இரத்தம் உறைகிறது, இதைக் காண நான் ஏன் பிறந்தேன்.... பொ.சுப்புலட்சுமி | |
15 | 465 | மனித முயற்சியை உடலைப் புதைக்கும் இயற்கை ஆற்றலை இன்னும் புரியாத ஆறறிவு மனித மூடன். இரா.வெங்கடாசலம் | |
16 | 246 | இடைவிடாத மழையினால் ஏற்பட்டதே நிலச்சரிவும். இயற்கையின் சீற்றத்தில் இழந்ததெல்லாம் உயிர்களே தூக்கத்திலையே தொலைந்த வாழ்க்கையில். செல்வம் செல்வகுமார் | |
17 | 722 | நாம் சீராட்டாத இயற்கை சீற்றமாக/ நாம் அழித்த வனங்களின் அழுக்குரல்/ கண்ணீரின் சீரழிவாக வாழ்வில்/ சுஜாதா அருணாச்சலம் | |
18 | 709 | உயிரிழந்து மண்ணில் புதைக்கப்பட்ட ஏழையின் கனவுகள்/ தொடரும் இயற்கை சீற்றம்// விடியல் நோக்கியே எந்நாளும்// தாழை. இரா. உதயநேசன் | |
19 | 726 | பூமித்தாயின் முகத்திலே கீறப்பட்ட கீறல்கள்/ வலி பொறுக்காத அன்னை/ கோபம் கொண்டு வேதனையை விதைக்கிறாள்/ -காளிராஜ்பாலகணேஷ் | |
20 | 765 | பிழை பொறுக்கும் இயற்கை ஆங்கே// இழைக்கும் பிழையொன்றை மனம் பொறுக்க// மனிதருமிங்கே பிழைப்பதும் உண்டோ? திப்பு | |
21 | 326 | இயற்கைக்கு மாறாய் உயர்ந்திட நினைத்து// முயன்றிடும் போதில் சீற்றம் கொள்ளும்// துயர்பட வாழ்க்கை ரணமாகிடுமே// நாகராசன் சின்னசாமி | |
22 | 450 | நிலையில்லா உலகத்திலே நிலையானது மாற்றமே! இயற்கையின் சீற்றம் வெளிப்படுவதும் உயிர்களை அழிப்பதும் உலகினில் எவருக்கும் தெரியாதே! ரேணுகா சுந்தரம் | |
23 | 688 | பொறுமை கொண்ட பூமித்தாயை சோதித்தார்களோ அற்ப மானிட பதர்கள் சீற்றத்தின் விளைவு உயிர்ச்சேதம் கீத்தா ராமன் | |
24 | கண்மூடி திறப்பதற்குள் திரண்டு தாக்கும்.../ உயிர் உடைமைகளை அழிக்கும்.../ பார்க்கும் நெஞ்சங்கள் பீதியில் உறையும்...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | ||
25 | 755 | இயற்கையை அழித்தால் பேரிடர் வருமே காடுகள் மரங்கள் நீர் நிலைகளையும் பாதுகாப்பது நாட்டுக்கு நலமே - ஜெயக்குமார் சுந்தரம் | |
26 | 213 | மனிதர்கள் செய்கின்ற இயற்கை அழிவுகள் // மாபெரும் சீற்றங்களாக வருகின்ற விளைவுகள் // தடுத்திட செயற்கையை ஒழிப்போமே. கவி.மரு.ஜெயக்குமார் பலராமன். | |
27 | 743 | வானம் பொய்த்தால் மழை இல்லை/ நீர் இல்லையேல் விளைச்சல் கிடையாது/ இயற்கையின் சீற்றம் கோரமானது/ இளங்கோ | |
28 | 470 | இயற்கை மென்மையாய் வருடினால் வாழலாம் வன்முறை செய்தால் வாழ்வது எங்ஙனம் அனுகாது அகலாது பழகுவோம். நா.சுகுமாறன் | |
29 | 210 | மனிதம் மறந்த மனிதனின் செயலால்../ இயற்கையின் சீற்றம் இன்னலே..../ இயற்கையைக் காத்திட இயன்றவரை முயன்றிடு.../ திருமதி சுப்ராணி சிவகுமார்....✍ | |
30 | 207 | சீரும் இயற்கை சீரழிக்கிறது மக்களை/ உழைக்கும் மக்களின் உயிர்கள்/ மண்ணுக்குள் புதைந்தே மரணத்தைத் தழுவுகின்றனர்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
31 | 258 | இயற்கை சீற்றத்தை எவரும் வெல்லார்/ மனிதா நிறுத்திடு சுயநலம்/ உயிர்களின் ஓலம் நெஞ்சைப் பிழியுதே..! தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26. | |
32 | 732 | இயற்கை அன்னை சீற்றம் கொண்டால்/ நோய் பரவலை தடுக்க இயலுமா?/ பேரிழப்பை நாடு தாங்குமா/ கீதாஞ்சலி | |
33 | 766 | இயற்கையின் ஆட்டம் அடங்கி ஒடுங்கியபின் சவப்பெட்டியில் ஒரு சரித்திரம்..! மண்ணில் புதைந்த நாளைய வரலாறு...! சுரேஷ்குமார் தமிழ்செல்வன் | |
34 | 771 | வலியவன் பணத்தால் கனவினை வென்றிட/ எளியவன் உழைப்பால் வருந்திடும் ஏழையை/ அழித்திடலாமோ இயற்கையின் சீற்றம்/ மா.சு.திருக்குமரன். | |
35 | 241 | யார் மீது கோபமோ தெரியவில்லை கண்மூடித் திறப்பதற்குள் மண்ணில் புதையும் கட்டிடங்கள் பலியாகும் உயிர்கள். அனுராதா நாகப்பன் | |
36 | 409 | நிலநடுக்கம் நாட்டிற்கு உயிர்களுக்கு ஆபத்து// உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம்// அலைவது மக்கள் கூட்டம்// க.சுதர்சனக்குரு. | |
37 | கண்மூடி திறப்பதற்குள் காட்சிகள் மாறும்.../ உயிர் உடைமைகள் அழியும்.../ காணும் நெஞ்சங்கள் பீதியில் உறையும்.../ ஜெயலெட்சுமி மாணிக்கம் | ||
38 | 204 | பொறுமையை இழந்த பூமியின் உக்கிரம்// பொடியெனத் தகர்ந்தது மனிதனின் ஆணவம்// சிதைத்தது இயற்கையும் கருணையின்றி// ஆஸாத் கமால் | |
39 | 256 | இயற்கையைச் சீண்டி இயல்பை மாற்றினோம்/ சீற்றத்தின் விளைவே அழிவுக்குக் காரணம்/ இயற்கைக் காத்திட இணைவோம் / .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
40 | 756 | இறைவனின் படைப்பில் இயற்கையே மேல்//1 மனிதனின் செயற்கையோ இயற்கையோடு மோதல்//2 இதனது சீற்றமோ அழித்தல்//3 **** கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை. | |
41 | 399 | */ இயற்கையை சீண்டாதே இயற்கையும் அழிக்குமே!.../ */ செயற்கை அறிவியலை நம்பியதாலே!.../ */ இயற்கை பேரழிவுகளைக் கொடுத்து சமனாக்குகிறது.../ --சாக்கை.பொன்னழகு. | |
42 | 692 | கண்மூடி கண்ட எதிர்காலக் கனவுகளோடு // நித்திரை கொண்டவர்களின் வாழ்வு சரிந்ததாய் // மண்மூடி புதைந்துப் போனதே முனைவர்.சு.சித்ரா, கரூர் தமிழ்நாடு | |
43 | 378 | இயற்கையின் நன்மைதனை நாம் மறந்தோம் அபிவிருத்தியெனும் பெயரில் அழித்து ஒழித்தோம் இயற்கையின் கோபமே சீற்றமாய் ஆனது முல்லை நிரோயன் | |
44 | 727 | அநீதி தலைதூக்கி ஆட்டம்போட // இயற்கையன்னை இறக்கமற்று போக // விடியலுக்காக ஏங்கி இயற்கை எய்த நீதியிங்கே.. // சுசி. | |
45 | 636 | அடுக்கு மலைப் பகுதியில் சரிவு// மீட்புக் குழுவினர் அகழாய்வு விரிவு// மீட்கப்பட்ட சடலங்கள் வரிசை! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
46 | 768 | பாவங்களின் சுமையால் பூமித்தாய் சீற்றமுற// மண்ணில் புதைந்த மாந்தர்// தாய் மடியில் தஞ்சம் அமைதி வேண்டி// புவனா சந்திரசேகரன் | |
47 | 434 | செயற்கை மாற்றங்களை பூமியில் விதைத்தால்/ அழியும் உயிர்களோடு இயற்கையும் சாகும்/ இனியாவது விழிப்போமே மானிடரே// மீனாட்சி சுந்தரம் | |
48 | பாவங்களின் மூட்டை பாரமாய் அழுத்த// சீறுகிறாள் இயற்கை அன்னை// புதைகுழியில் அமைதியுறும் பூவுலக மாந்தர்// புவனா சந்திரசேகரன் | ||
49 | 388 | கண்மூடித்தனமாக மனிதன் இயற்கையை அழிப்பதால், காத்திருந்து அதுவே அவனை மண்மூடி அழிக்கிறது இயற்கைச் சீற்றமாய்...! செண்பக ஜெகதீசன்... | |
50 | 254 | படைப்பு இருந்தால் அழிவும் இருக்கும் இயற்கையை ஆளலாம் வெல்ல முடியாது கண்மூடிய மக்களை மண்மூடியது. அழகு மாசிலாமணி | |
51 | 707 | மண்ணுக்குள் உடல்களைத் தேடிடும் கூட்டமே/ மானுடம் என்றும் வாழ்ந்திடவே/ மண்ணின் உயிர்க்கும் இரக்கம் காட்டுங்களேன்/ ✍️பா.ச.கண்ணன் | |
52 | 647 | தன்னில் மூழ்கி எழும் பாவிகளின் // பாவ பாரம் சுமக்க இயலாது // பிளவுபட்டு நின்றதோ பேராழி // நாக நந்தினி | |
53 | 259 | பொங்கும் சீற்றம் புரட்டித் தள்ளும்.../ எதிர்பாரா தாண்டவம் எங்கும் நிகழும்.../ இயற்கை வழங்கும் பாடம்...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
54 | 425 | நாளையின் விடியலுக்காகக் காத்திருந்த மக்கள் இயற்கையின் சீற்றத்தால் புதையுண்டனரே வாழ்வையே இழந்தோம் நிரந்தரமாக என்றும்.... கலாகண்ணன் | |
55 | 716 | இயற்கையைப் போற்றிச் சிறக்க வாழு //1 இல்லையேல் அதன் சீற்றம் பாய்ந்து //2 புதையும் மானுட வாழ்வு.//3 - நாகை. ஹாஜா | |
56 | 763 | அள்ளிக்கொடுத்த இயற்கை அன்னை // இயற்கையின் சீற்றத்தால் கண்டிக்கிறாள் தண்டிக்கிறாள்// இனியேனும் மனம் தி(வ)ருந்துவாயோ மானுடா // பிரேமா பூ | |
57 | 721 | தண்ணீர் புதைத்த உடல்களை மீட்டுக்// கண்ணீரில் கழுவி மீண்டும் புதைக்கும் கொடுமை// வேண்டாம் இயற்கையே... ....பாலு தியாகராசன்.... | |
58 | 347 | அழிக்கும் செயலை இயற்கை செய்தால் / அகிலமும் நொறுங்கிடும் ஆணவம் அடக்கிட/ உலகிற்கு பாடம் நடத்திடும் வேங்கடலட்சுமி ராமர் | |
59 | 233 | ஏன் சீற்றம் கொண்டாய்/ எதனைக் கண்டு எதிர்த்து நின்றாய்/ எங்களைக் கொன்றாய் எதிரியாய் ஆனாயே/ முபீன் றிஸான் | |
60 | 410 | அள்ளித் தருகின்ற இயற்கையை வரவேற்று/ ஆர்ப்பரிக்கும் வேளையிலே தடுக்கும்/ ஆற்றலைப் பெறவே வல்லமை வேண்டுமே/ கவிஞர்.ஞான பிரசன்னா.. | |
61 | 386 | இயற்கையின் சீற்றம் எதிர்கொள்ளல் துன்பமே/இயைந்தே வாழுதல் இன்பம் சேர்த்திடும்/ மயக்கம் போக்கிடு வாழ்வது மாயமே/. தென்கரை தாயுமானவன். | |
62 | 21 | காடுகள் அழித்து கட்டடங்கள் வளர்த்தோமே/ இயற்கையின் கோபமோ மழையின் சீற்றமாய்/ மாய்த்ததோ உயிர்களை மண்ணோடு. #தனம்_மீனாட்சிநாதன் தூத்துக்குடி | |
63 | 758 | அழியும் காடுகள் உயரும் வெப்பம் கழிவுகளை வீசும் அணுஉலைகள். அழையாமல் வருமே இயற்கை சீற்றமே..!! சாந்தகுமாரி | |
64 | 717 | எல்லை இல்லா ஆசையாலே/ இயற்கை சமனிலை கெடுத்தோம் நாமே/ இதனால் தானே எழுந்தது சீற்றம்/ கந்தசாமி நடேசன் | |
65 | 652 | கொத்தாய் மனிதனை சரிக்கிறதே இயற்கை/ எதுவும் நிரந்திரம் இல்லை புரிந்ததே!/ மீண்டு வர இயலுமோ?/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
66 | 578 | ஐம்பூதம் மறந்து அகிலத்தை ஆண்டிட// தொழில்நுட்பம் வளர்ந்து அழிவுகள் நேர்ந்திட இயற்றையின் சீற்றம் தொடர்கிறதே// ...கவியாசகன்...!!! | |
67 | 616 | இறைவனின் படைப்பு இயற்கை அதிசயம் பேரழிவை உருவாக்கும் மாற்றம் துன்பத்தை வழங்கும் அடங்கா சீற்றம் கா.கேமலாரூபினி | |
68 | 428 | இயற்கையின் சீற்றத்தில் இழப்புகள் ஏராளம்// மதிக்கத் தவறிய மனிதனுக்கு// மனவலியில் கொடுத்த தண்டனையோ// சுப்பிரமணியன் அன்புமலர் | |
69 | 239 | வளம் தந்த இயற்கையன்னை/ ஏனிந்த கோபம் அப்பாவிகள்மீது/ வாழ வைத்து வாரிக்கொள்ளுவதேன்/ வரிசையாய் பிணங்கள்/ குமார் | |
70 | 772 | சினம் கொண்ட சீற்றமா..! இயற்கையின் மாற்றமே..! / அழிவின் ஆதிக்கமே வேண்டாம் மாற்றம் வேண்டி மன்றாடுகின்றோம். ப.க.கலாவதி | |
71 | 574 | கொதித்தெழும் இயற்கை சிரித்திடும் போது சாவாறு ஓடும் விழியருவி பாயும் மனிதம் சமுத்திரமாய் சுத்திகரிக்கும் . துரைராசா காண்டீபன், திருக்கோவில் . | |
72 | 240 | இயற்கையை மனிதர்கள் அழிப்பதால்// நல்லவைப் பயக்கும் பருவ மழை// புயலாய் மாறி வெள்ளமாய் பெருகியது// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
73 | 618 | இயற்கையின் சீற்றம் அழிவில் உலகம்/ இயல்பிற்கு மாறாய் மனிதனின் செயலால்/ இறைவனின் கோப வெளிப்பாடோ/ ஔவை. | |
74 | 562 | இயற்கையே ஏனிந்தப் பெருங்கோபம்/ நீதானே எங்களை மண்ணில் மலரவைத்தாய்/ உன்னைச் சிதைத்ததால் தண்டனை வழங்குகிறாயோ/ பா.பத்மநாபன் | |
75 | 564 | சீறுகின்றது இயற்கை சினம் கொண்டு புதுப்பித்தல் காண வேண்டும் மனிதன் விரைந்து செயற்படுதல் தீர்வு. இராசையா கௌரிபாலா. | |
76 | 773 | ஆணவம் ஒடுக்கி அகந்தை அகற்றிட மதம் மறந்து மனிதம் காத்திட இயற்கைச் சீற்றம் ஆசானாகுமே..! எம்.எம்.நிஜாமுதீன் | |
77 | 387 | செயற்கையை கொண்டு இயற்கையை சீண்டிட // சீறிடும் இயற்கை இறப்பைக் கொடுக்கும் // உணர்ந்திடு திருந்திடு மானிடா // சென். இலக்குவன் | |
78 | 221 | அன்பைத் தேடி அனுதினம் ஓடினாலும் அன்புக்காய் வாழ்வது அகிலத்தில் பிறர்க்காக அருகிருந்து காத்திட ஆண்டவன் தந்தவாய்ப்பு புஷ்பா கிறிஸ்ரி | |
79 | 287 | பொறுத்துப் பார்த்தாள் பூமிதேவி பெற்றவைகளை அழித்திட்ட மனிதனுக்கு பாடம் கற்பிக்கப் பொங்கி எழுந்தாள் தண்டபாணி | |
80 | 674 | வளங்களை அழிக்கும் மனிதனுக்கு // இயற்கைச் சீற்றம் எடுத்துரைத்திடுதே தண்டனயாகவே// பயனில்லையே பாமரன் பாவமே// இரா.தேவி | |
81 | 737 | இயற்கையின் சீற்றம் எல்லாமே நாசம் மண்ணுக்குள் மறைந்ததே மனித வாசம் நிலத்தின் நேசம் காப்போம் திருமதி சரோஜனி நடேசன் | |
82 | 750 | சொல்லிக் கொண்டு வருவது இல்லை..! ஈவு இரக்கம் இல்லாமல்..! அள்ளிக் கொண்டுச் செல்கிறது உயிர்களை..! - தமிழ் வேந்தன்...✍ | |
83 | 717 | எல்லை இல்லா ஆசையாலே இயற்கைச் சமநிலை கெடுத்தோம் நாமே இதனால் தானே எழுந்தது சீற்றம் கந்தசாமி நடேசன் | |
84 | 515 | இறைவன் நமக்களித்த இயற்கை வளங்களின்/ அழிவுக்கு வழியமைத்த அறிவீனம் ஏற்படுத்தும்/ அபாயத்தில் சிக்கி அழிகின்றோம்/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக