Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 261 | உண்ணும் உணவே உடலாய் உருமாறுமே அதனை வணங்கி உவப்புடன் உண்போமே உழைத்துக் கொடுத்த விவசாயியை வாழ்த்துவோமே உணவளித்த இறைவனுக்கும் நன்றி கூறிடுவோமே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
2 | 378 | எதிர்பார்ப்பு எதுவுமின்றி பிறருக்கு உதவி பசியைப் போக்கும் மகத்தான கொடையை மனதிலே மகிழ்வோடு வழங்கிடும் வள்ளலே உயிரைக் கொடுத்திடும் உன்னத தெய்வம் முல்லை நிரோயன் | |
3 | 735 | பசி கொடியது வறுமை வாட்டுமே/ வளமில்லை இளமைக்கல்வி துறக்கும் அபாயம்/ சுரண்டல் சுதந்திரம் வறியோர் பெருகும்/ உணவு உன் உரிமை பிச்சையல்லவே, படைப்பாளி பைரவி | |
4 | 760 | பசிப்பவர் வயிறு பதைக்கும் உயிரு ...... புசித்திடக் கொடுத்தல் புண்ணியம் ஆகும் ...... ஏழைகள் வாழ்வில் எரியும் நெருப்பு ......... வறுமை ஆற்று அனைத்திலும் சிறப்பு ...... கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத்.. | |
5 | 614 | கொடுமையில் வலி நிறைந்தது வறுமை/ அதைவிட துன்பம் இளமையில் பசி/ அதனை போக்கிட உணவு அளிக்கும்/ கருணை உள்ளங்களே உயிர் கொடுப்போர்கள்/ விஜயலட்சுமி | |
6 | 697 | உண்ணும் உணவை உழவு செய்து / உலக மக்களுக்கு கொடுக்கின்ற பெருமை / மண்ணில் விவசாயிக்கு மட்டுமே உண்டு / உண்டி கொடுத்தோரே உயிர் கொடோத்தோர்...! முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை... | |
7 | 482 | பசித்த உயிருக்கு உணவு அளித்திடுங்கள் ! இளமையில் வறுமை வாட்டம் கொடுமையே! இரக்கம் கொண்டால் சிறக்குமே வாழ்க்கை ! உண்டிக் கொடுத்தார் உயிர் கொடுத்தாரோ . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
8 | 755 | உணவின்றி பட்டினியில் பலகோடி மக்கள் உணவுதனை வீணாக்கி வீதியிலே கொட்டாதே! குழந்தையாக இருக்கையிலே கற்றுக் கொடுத்திடு கொடுக்கின்ற குணமதனை ஊட்டி வளர்த்திடு - ஜெயக்குமார் சுந்தரம் | |
9 | 722 | பசிக்கின்ற பொழுதினில் யாருமற்ற பாரினில்/ அறத்தைக் காத்து ஏழைகளுக்கு உதவிடும்/ அமுதளிக்கும் கொடையாளியே இறைவியாக என்றும்/ உயிரைக் காத்த உன்னத உத்தமர்கள்/ சுஜாதா அருணாச்சலம் | |
10 | 746 | பசியால் வாடுது ஏழையின் வீடு/ பார்ப்பவர் மனதில் எரியுது நெருப்பு/ ஏழைக்கு உணவு கொடுத்தவர் வாழ்வில்/ இறைவன் அருளால் இன்பம் பொங்குமே/ -- மௌஜீத் ஏ ஹசன்-- | |
11 | 344 | விந்தாக கருவறையில் உறங்கி உருவாகி விருட்சமாக மண் மீது தழைத்திட பசி போக்கும் சீவன்களெல்லாம் உலகில் உயிர் தந்த பெற்றோருக்குச் சமமே! #எமா# | |
12 | 593 | வறுமையின் பிடியில் வயிற்றுக்குள் போராட்டம்/ உணவின்றி மயக்கம் உள்ளத்தோடு உருவத்தையும்../ மாற்றியே நடைபிணமாய் நாளும் வாழ்வோருக்கு./ அன்னம் அளித்தலே அகிலத்தில் சிறப்பு/ ... . தங்க.மனோகரன். | |
13 | 238 | பசிப்பிணி ஆற்றிடும் பாரினில் உள்ளோர்.../ மறந்திட வேண்டாம் கடவுள் மனிதனாய்../ உண்டியை கொடுத்தவர் உயிரை கொடுத்தவரே../ காலம் யாவும் கடவுளாய் கண்டிடு../// #இளந்தை சேது | |
14 | 710 | பசியால் வாடிடும் குழந்தைகள் உள்ளவரை/ இறைவனுக்கு ஊற்றிடும் பாலெல்லாம் வீண் / உயிர் கொடுத்த பலனை அடைவாய்/ பசித்த வாய்க்கு அன்னம் வழங்கினால்/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
15 | 756 | அன்னை தந்தை ஆருமே இல்லையே// அக பையிலே பசியின் தொல்லையே// என்னை அழைத்தாரே ஓர் ஏழை// அன்னம் தந்தாரே; 'ஆண்டவனே' என்றேனே!//
கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை. | |
16 | 201 | அன்றாடம் கிடைத்த உணவுக்கு நன்றிகள் / வறுமையின் பிடியில் வாடிடும் உயிர்கள்/ பார்ப்பவர் மனதில் கவலைகள் ஆயிரம்/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/4 புவனா சற்குணம் கனடா | |
17 | 718 | உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!// உள்ளத்தால் அவரை வணங்குவோம் தினமே!// உண்மையிலும் அவரே உலகின் அச்சாணி!// உணவினைத் தந்துமே வளர்ப்பாரே பேணி!!// கீழ்கரவை குலசேகரன், இலங்கை | |
18 | 213 | பசியின் கொடுமையை அனுபவித்தால் புரியும் // கிடைக்கும் உணவே அமிழ்தமாகத் தெரியும் // உயிர் வாழ்ந்திட உணவு அவசியம் // கொடுக்கும் மனங்களே இறைவனின் ஆலயம். கவிஞர். மருத்துவர்.ஜெயக்குமார் பலராமன். | |
19 | 761 | இறைவன் படைப்பில் ஏராள தவறுண்டு/ அதில் ஒன்றுதான் பசியோடு இருக்கும் குழந்தைகள்/ அந்தக் குழந்தையின் பசிபோக்கும் மனிதர்கள்/ படைக்கும் இறைவனைவிட உயர்ந்தவர்கள்/ மு, துரைப்பாண்டியன் | |
20 | 743 | ருசிக்காக உண்டு வாழும் மானிடனே/ பசியால் வாடும் ஏழைகளை கண்டாயா/ அன்ன தானம் பல உயிர்களை/ காப்பாற்றும் என்பதை எப்போது உணர்வாய்/ இளங்கோ | |
21 | 259 | பசிக்கும் வயிறு சோர்ந்து துவளும்.../ கண்கள் இருண்டு காட்சிகள் மறையும்.../ தேவையறிந்து உணவு வழங்குதல் பலனாகும்.../ உண்டவர் கண்ணில் நன்றி கண்ணீராகும்...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
22 | 582 | மழைவான் பொழிந்து மண்ணில் வருவான் தொழுவோன் யாவருக்கும் சோதியாய் அருள்வான் பிழைப்போர் கொடும்பசிப் பிணித்தீர உழைத்து உழவோன் உண்ணகொடுத்து உயிர்கொடுத்தானே! நெடுவை இரவீந்திரன் | |
23 | 386 | இல்லறம் ஏற்றோர் நல்லறம் செய்தே// ஏழைகள் பசியைப் போக்கும் வண்ணம்// உறவெனப் பேணி உணவுகள் வழங்க/ உலகும் வாழும் வறுமையும் தீரும்/. தென்கரை தாயுமானவன். | |
24 | 207 | உண்ணும் உணவிலே உயிர்கள் வாழும்/ பசித்த உயிர்கள் துடித்துப் போகும்/ பட்டினி போக்கிடும் பசிப்பிணி மருத்துவர்களாலே/ உலகம் இன்றும் உயிர் வாழ்கிறது/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
25 | 317 | பசியால் வாடிய அந்த பிள்ளைக்குப் பசியை அறிந்தவன் கொடுத்தது அமுதம் வணங்கிச் சாப்பிட அன்னபூரணி அருளும் வளரும் மழலைக்கு ஒழுக்கம் அதிகம் க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
26 | 732 | செல்வந்தனிடம் கொடுக்க மனம் இல்லை/ பசியால் வாடினாலும் உயிரே போனாலும்/ கடந்து செல்லும் நாட்டினிலே உணவளித்து/ உயிர் கொடுப்போரை மறவாமல் போற்றுவோம்/ கீதாஞ்சலி | |
27 | 247 | உயிரையும் உடலையும் கொடுத்த இறைவன் / உயிர்களுக்கு பசியையும் கொடுத்து உணவைத்/ தேடிச் செல்கின்ற பக்குவத்தையும் கொடுத்து / பசியாறியவுடன் களைப்பையும் உறக்கத்தையும் கொடுத்தான்/ த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் | |
28 | 258 | பலவகைப் பலகாரம் உடல் கெடுக்கும்/ பசியிலே பழையசோறும் உயிர் காக்கும்/ உணவை வீணாக்காதீர், வேண்டுபவர்க்குத் தந்திடுவீர்/ உண்ணக் கொடுப்பவர்கள் உயிர் காப்போரே! தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26. | |
29 | 450 | பத்தும் பறந்திடுமே பசி வருகையிலே இடும்பைத் தரும் வயிற்றுக்கு உணவிடுவோர் உலகிலே உயர்ந்தோரே! தானங்களில் சிறந்த அன்னதானம் செய்வோரை நாமும் வணங்கிடுவோமே! ரேணுகா சுந்தரம் | |
30 | 709 | பசியால் வாடிட காதுகள் மூடும்// உணவுகள் ஈந்திட உள்ளம் குளிரும்// கண்கண்ட தெய்வம் கண்முன்னே தெரியும்// உள்ளங்கள் வாழ்த்தும் உயிர்கொடுத்த பெருமக்கள்// தாழை. இரா. உதயநேசன் | |
31 | 771 | ஏழையின் வயிற்றில் அணையா நெருப்பு/ பசியினை அகற்றிடு அதுவே சிறப்பு/ பயிரினை காத்திடு போய்விடும் பஞ்சம்/ பாரினில் புகழ்ந்திடும் உயிர்களின் நெஞ்சம்/
மா.சு.திருக்குமரன். | |
32 | 768 | அமுதூட்டும் கைகளில் அன்னையின் அன்புணர்ந்து// கைகூப்பி நன்றிதனைக் கூறுகின்றாள் சிறுமி// உணவளித்துப் பசிதீர்த்துக் கனிவளித்துத் தொண்டாற்றும்// நல்லோர் இருப்பதனால் நானிலமும் சிறக்கிறது// புவனா சந்திரசேகரன் | |
33 | 463 | பசியென்று வருவோர்க்கு உணவளித்தல் நன்று! அன்னமளிப்பது அறச் செயல்களில் ஒன்றே ! இருப்பதைப் பங்கிட்டு வாழ்தல் மனிதயியல்பு! மண்ணில் இருக்கும்வரை மனிதம் காப்போம் ! அரவிந்தன் தஞ்சை. | |
34 | 483 | ஒருநாளில் ஒருவேளை ஒருவாய் உண்டிதந்தோர்/1 உயிர்தந்தோர இறைவனாய் உலகில் உயர்ந்தோரே/2 தரணியிலே பசிக்கொடுமை தாங்கொண்ணாத் துயரம்/3 அழிபசி தீர்ப்போரை ஆண்டவனாய் வணங்குவோம் / 4 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
35 | 707 | பசியால் வாடிடும் பிள்ளையைக் காண/ பதறுதே மனமும் பட்டினியைப் போக்க/ அன்னையைப் போல அமுதினை ஊட்ட/ அவலமும் நீங்கி கமலமும் மலருதே/ ✍️பா.ச.கண்ணன் | |
36 | 425 | ஒருவேளை உணவுக்காக தவிக்கும் மக்கள் அன்றன்று ஆகாரத்தை இறைவா தாரும் வறுமை ஒழியட்டும் விடியல் மலரட்டும் அனைவரும் மகிழ்வுடன் உலகில் வாழ்ந்திடுவோம் கலாகண்ணன் | |
37 | 647 | படைத்தவனுக்குப் படையலிடும் பலநூறு கைகள்// பசித்தவனின் பாழும் பட்டினிப் போக்கிட // பிடிசோறும் பகிர மறுப்பதுவும் ஏனோ // பாசாங்குதாரியின் பசப்புதலை ஏற்பனோ பரமனுமே // நாக நந்தினி | |
38 | 692 | இரைப்பையவே இரையாக்கிடும் வேளையில் இரை / தந்திட்டு பசி கிள்ளி விட்ட / நேரத்தில் துள்ளி வந்து அள்ளித்தந்த / மனமும் வாழ்வதாலே மாரியும் பொழிகிறது!/ முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு | |
39 | 283 | பசியும் வந்தால் பத்தும் பறக்கும்/ அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்து/ பசியின் வலியைப் போக்கி நாமும்/ உலகில் உயிர்களை வாழவே வைப்போம்/ ஜமுனாமலர் இந்திரகுமார் | |
40 | 409 | உண்ணும் முன்னே வணங்கும் சிறுமி// பண்டு தொட்டே இன்று வரையும்// உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே// என்றே மொழியுது உண்மைத் தத்துவம்// *************** க.சுதர்சனக்குரு. | |
41 | 725 | உணவின் மகிமை உணர்ந்தக் குழந்தை/ முதலில் இறைவனையும் பின்னர் தாயையும்/ வணங்கி சாப்பிடத் தொடங்குகிறது/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே// கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
42 | 434 | அடுப்பூட்டி உணவூட்ட வழியின்றித் தவித்திடும்/ புலம்பெயர் மக்களோ பூமியில் பல்லாயிரம்/ தவிப்போர்க்கு தானமிட்டால் தரணியே சொர்க்கமாகும்/ கிடைத்த வாழ்க்கையை வரமென எண்ணுவோமே// மீனாட்சி சுந்தரம் | |
43 | 769 | கண்கள் மறைத்திடும் கருத்தினை அழித்திடும்// கடும்பசி போக்கிட, கயமையும் கைவரும்// உயிரென ஓம்பிடும் ஒழுக்கம் காத்திட// உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ! // - கற்பகாம்பாள் கண்ணதாசன் | |
44 | 636 | கண்ணுங் கருத்துமாய் கல்வி புகட்டலினும்// கொண்ட புண்ணியம் கொட்டிக் கொடுத்தலினும்// வண்டி வண்டியாகப் பொருள் கொடுத்தலினும்// உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
45 | 652 | உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவீரே!/ அவர்கள் வாழ்த்தினால் எங்கும் சிறக்கலாமே!/ உணவு கொடுத்தவனுக்கு நன்றி சொல்லி/ உண்ணும் வழக்கம் யாவருக்கும் பழக்குவோம்/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
46 | 717 | உண்டி இல்லா மனிதர் வாழ்வு/ அண்டி வாழும் அவலச் சாவு/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/ உண்மை இதை உணர்ந்தே நடப்போம்/ கந்தசாமி நடேசன் | |
47 | 616 | அன்னம் அளிப்போா் பூமியில் கடவுள் பசியை போக்கும் சிந்தையும் செயலும் அதிக மனங்களில் பதியும் புண்ணியம் ஏழையின் எதிரியை விரட்டி விருந்தோம்பு கா.கேமலாரூபினி | |
48 | 578 | ஏழையின் வாழ்வில் எதுவரை துயரோ// ஒருசாண் வயிற்றில் பசிதான் பிணியோ// மருந்தென உணவும் கிடைத்திடல் வரமே// வறியவர் உணர்வும் அறிவாரோ மனிதர்// ...கவியாசகன்...!!! | |
49 | 726 | உணவு தருபவன் ஆண்டவனின் மறுஉருவம்/ உணவைப் பெறுவனோ கடவுளுக்கே நிகரானவன்/ பசி என்பவனை பட்டினி போடாதே/ வயிறையும் மனதையும் குளிரச் செய்க/ -காளிராஜ்பாலகணேஷ் | |
50 | 574 | உணவின்றித் துடிக்கையில் உதவிடும் உள்ளங்கள் நிலையிலாத வாழ்வில் நிலையாக நிற்பர் வாடிடும் செடியை நாடிடும் நீராய் உயிர்ப்பிக்கும் தூதுவர் உலகிலே சிறப்பர் . துரைராசா காண்டீபன், திருக்கோவில் . | |
51 | 618 | வறுமையின் கொடுமையில் வாடும் உயிர்/ வயிற்றுப் பசியால் ஏங்கும் பிஞ்சு/ வரமாய்க் கிடைக்கும் அரிதாய் உணவு/ வணங்கி வாழ்த்தும் ஏழை உள்ளம்/ ஔவை. | |
52 | 564 | அன்பு கொள்வோம் அனைத்து உயிர்களிடம் துன்பம் கண்டு தோள் கொடுப்போம் பசித்தவர் வயறு பசியாறிட கருணையுடன் ரூசித்திடும் ஏழையின் உள்ளத்தில் நீயிருப்பாய். இராசையா கௌரிபாலா. | |
53 | 773 | ஒரு மனிதனை வாழ வைத்தால் // இனம் வாழ உரம் விதைத்தவரே.. // ஓரிறையின் உபதேசம் இதுதானே அறிந்திடுவீர். // பசித்தோர்க்கு உணவளிக்கும் பண்புதனை வளர்த்திடுவீர்...! // எம்.எம். நிஜாமுதீன் | |
54 | 716 | உண்ணும் உணவுக்க வந்தனைச் செய்வோம் // அன்னம் இட்டவர என்றும் மறவோம் // உழவினால் வந்தது தட்டில் சோறு // உழவருக்குக் கொடுக்கணும் நூற்றுக்கு நூறு.// - நாகை. ஹாஜா | |
55 | 387 | அண்டி வந்தவர்க்கு அன்னம் கொடுப்பதினும் // சிறந்த செயல் எதுவும் இல்லை // உண்டிக் கொடுத்தார் உயிர்க் கொடுத்தோரே // உணர்வாய் மானிடா நாளும் செயலாக்கு// சென். இலக்குவன் ஈரோடு | |
56 | 221 | ஏழ்மைக் கொடுமையை உலகில் தந்தவன் ஏழைக்கு உணவளிக்க எம்மைப் படைத்தானே உன்னை என்னை இங்கனுப்பிய இறைவனுக்கு உன்னன்றி காட்டிட உணவழிததிடு ஏழைக்கே புஷ்பா கிறிஸ்ரி | |
57 | 254 | மண்ணும் பெண்ணும் ஒன்னுன்னு எண்ணு/ பயிர் வளர்த்து உயிர்காக்கும் உழவன்/ உயிர் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்/ வட்டில்சோறு நினைத்தே நாளும் உண்ணு/ கி.மா.கனகராசன். சூலூர். | |
58 | 287 | உதிரத்தைப் பாலாக்க ஊட்டினாள் அன்னை ஓடாய் உழைத்தவன் உணவுக்காக தந்தை பள்ளியில் கற்கையில் பகலுணவுக்கு ஆசான் இப்படி இப்படி எத்தனையோ இறைவன் தண்டபாணி | |
59 | 613 | பண்போடு வளர்ந்தவள் அன்னப்பூரணியை வணங்க்கிறாள்/ உயிரென எண்ணிய தாய்தந்தை போற்றிட/ உணவின் அருமையை உணர்ந்தக் குழந்தை/ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/ ஜெயாசந்திரமோகன் | |
60 | 428 | ஏழைகள் இல்லாத இடமில்லை நாட்டினிலே பசியிலே வாடிய பலவுயிர் போகுத அன்னத்தை அளித்த அவர்களைக் காப்போம் இல்லார்க்கு இல்லையெனச் சொல்லாது கொடுப்போம் சுப்பிரமணியன் அன்புமலர் | |
61 | 604 | அன்னத்தில் தெரிகிறது ஆண்டவனின் முகம்//1 மழலையின் முகத்தில தெறிக்கிறது நிம்மதி//2 மனிதன் தெய்வமானதில் சாதம் பிரசாதமாகி// மழலையின் பசிப்பிணிக்கு மருந்தென ஆனதே/// ஃஃஃஃஃஃஃஃஃஃஃ கவிஞர் கோவை ஆறுமுகம் |
போட்டி முடிவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக