Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 312 | தினமும் உனைத் தாண்டித் தானே 1 பள்ளி போவதும் வருவதும் வாழ்க்கை. 2 உனைப் பார்க்க மட்டுமே முடியும். 3 பறிக்க முடியலையே ஏற்ற ஏக்கத்தில். 4 இன்று வரை ஏங்க நாம். 5 பறிக்க முடியாத எனக் கேள்வி?... 6 பொ.சுப்புலட்சுமி தேவகோட்டை. | |
2 | 482 | குளத்தில் தாமரைப்பூ ஆழகாக பூத்திருக்கு ! கன்னி மனது பறித்திடவும் நினைக்குது ! சாயங்கால பொழுதில் வீட்டில் விளக்கேற்றி! இறைவனக்கு தாமரையை சாற்றிடவும் பறிக்கிறாள்! மனது வெள்ளமென ஆசையில் மிதக்கிறாள். தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
3 | 238 | அந்தி வானத்திலே அழகியக் கோலம்../ ஆயிரமாய் கோலங்கள் அழகியை அடிமையாக்க../ கோதையிவள் காதலிலே கள்வனைத் தேடியவள்.../ மையலாகி மனதிலே தீயாகினாள் ஏக்கத்திலே../ குளக்கரையும் கொதித்ததே கன்னியிவள் மோகத்தில். / தூதாகப் போகுமோ மேகமது காற்றோடு../// #இளந்தை சேது | |
4 | 462 | சாயங்காலத்திலே ஓர் அதிசய அழகு/ கற்பனையால் வடிக்க முடியா பேரழகு/ இந்த தாமரை எமை மாற்றுதே/ மனஇறுக்கம் போக்கும் கொள்ளை அழகு/ உன்னைப் பறிக்கவே ஆசை கொள்கிறேன்/ அனைவரும் ரசிப்பதற்காக பறிக்காமல் செல்கிறேன் தயா | |
5 | 726 | தாமரையே வீற்றிருக்கிறாய் குளத்தின் கரையிலே/ பார்க்கின்ற காலையில் மலர்வது ஏனடி/ மாலைப் பொழுதிலே மயங்கிடத் தானடி/ தீராத மயக்கங்கள் காதல் நோயோ/ வெப்பம் கொடுத்திடும் திங்களும் நீயோ/ தண்ணீரில் கலையாதகண்ணாடிப் பூவே/ -காளிராஜ்பாலகணேஷ் | |
6 | 450 | மீனும் நண்டுமா நீந்தி விளையாடுது! பொன்வண்டும் தேன் மலருமாய் நிறைஞ்சிருக்கு! குளத்தங் கரையிலே சாயங்கால சூரியனும் நாணப்படும் அளவுக்கு மஞ்சள் மேனியோட பொண்ணு ஒண்ணு கண்ணால கனவுகளை கண்ணாளனோட கண்ணாலக் கனவுகளை மனக்கண்ணால குளத்து நீருலகண்டு ரசிக்குது! ரேணுகா சுந்தரம் | |
7 | 598 | தண்ணீர் ஒட்டாமல் இலை தவமிருக்க/ தாவி அணைப்பாய் என்று தாமரை மலர்ந்திருக்க/ தனியே நீ அமர்ந்து தையலே / தடாகத்தை கையினால் அவாவில் தடவி/ தனியே உன் காதலை சொல்லிடவா/ தாமரைக் குளத்துக்கு வந்தாய் பெண்ணே/ ஏ.எல்.ஏ.சாதாத்(இப்னு சாந்தி) | |
8 | 761 | அந்தி மசங்கையிலே அழகான தேவதைபோல்/ தாமரை மலர்போல தலைமுடியை விரித்துவிட்டு/ குலத்து கரையோரம் குளித்துவிட்டு போறவளே/ மஞ்சள் நிறத்தவளே மான்விழி கொண்டவளே/ மருதாணி சிவபாட்டம் மலர்மேனி உடையவளே/ மனசு தவிக்குதடி மன்மதநாய் துடிக்குதடி/ மு, துரைப்பாண்டியன் | |
9 | 773 | செங்கதிரோன் தன் தங்க நிறத்தை / இரவல் தந்தானோ அவள் தேகத்திற்கு / தாமரைப்பூ குளத்தினிலே சாயங்காலப் பொழுதிலே / மங்கை அவள் துயில் கலைந்து / நீராட.. நீரோடு கலந்த நிறத்தாலே.. / செந்தாமரை இதழும் பொன்னிறம் கண்டதோ..! / எம்.எம்.நிஜாமுதீன் | |
10 | 770 | எத்தனை எத்தனை மலர்கள் இருந்தாலும்// உன்னழகைப் போல இருக்குமா இங்கே// தாமரை முகத்தாளே பூவைப் பறிக்காதே// பூக்கள் உன்னழகைப் பார்த்து வெட்கப்படும்// கனவில் வந்த காதலன் குளத்திற்கு// வருவானோ உனக்கு பூச்சூடி மகிழ்வானோ// ஸ்ரீதர் லெட்சுமணன் | |
11 | 710 | 1.பச்சைப் புல்வெளியில் தாவும் மரைகள்/ 2.தடாகத்தின் நடுவே சிரிக்கும் தாமரைகள்/ 3.கடலிலே மறையும் கதிரவனை பார்த்து/ 4.வெட்கிச் சிவந்திடும் வான மகள்/ 5.அமைதியானதோர் சாயங்காலப் பொழுதினிலே/ 6.மங்கையிவள் காத்திருப்பு தொடர்கிறது காதலனுக்காக/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
12 | 727 | பொழுது சாயும் அந்திவான அஸ்தமனம் // ஆர்ப்பரிக்கும் பூக்களின் நந்தவனக் குளம் // இதழ்மலர்ந்து காத்திருக்கும் செந்தாமரை பூக்குளம் // முகம்மலர்ந்து பூப்பறிக்க வீற்றிருக்கு பெண்தாமரை // குளத்திலுள்ள மொத்த பூவுக்கும் இணைப்பூயிவளே // பூஜைக்கு ஏற்ற பொற்றாமரை பறிக்கிறாள் // சுசி சுசேனு | |
13 | 246 | தாமரைப்பூ கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே தனியாகத்தான் வந்தேனே பூக்களையும் பறித்திடவே அந்திமாலை கவிழ்ந்தாலும் மென்தென்றல் தழுவினாலும் தாமரைப் பூக்களும் தரிசனம் செய்யவே தயங்காமல் நானும் தண்டோடு பறித்தேனே. முக்கண்ணன் சந்நதியில் மூன்றாம் சாமபூசைக்கு. செல்வம் செல்வகுமார் | |
14 | 614 | இதழ்கள் விரித்த தாமரையை பார்க்கையிலே/ இதயத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சியிலே/ மனம் பறிக்க நினைக்கும் வேளையிலே/ குளத்தில் உள்ள ஆழத்தை நினைக்கையில/ தலையில் சூட்ட முடியாது போகையிலே/ எனது உள்ளம் பொங்குது ஆனந்தத்திலே/ விஜயலட்சுமி | |
15 | 470 | குளிக்க வந்தவனை கொதிக்க வைத்தாயே நீராட குளிர்ச்சியாகும் நீயாட மகிழ்சியாகும் சந்திரனைக் கண்டதும் அல்லிதானே மலரும் வள்ளியைக் கண்டதும் தாமரையே மலர்ந்ததோ பூக்களோடு அருகிருக்காதே மதுவுண்ட வண்டுகள் உன் அதரப்பூக்களில் தேனுண்டு விடும். நா.சுகுமாறன் | |
16 | 716 | கம்பனின் கற்பனைக்கு தப்பிவந்த சித்திரமே // 1 அர்சுனனுக்கு அகப்படாத ஆச்சரிய அசுத்திரமே // 2 குளக்கரையில் உனைக்கண்டு குவளைகளும் குதூகலிக்கும் // 3 அல்லிமொட்டும் அவசரமாய்க் கிட்டவந்து பூவிரிக்கும் // வழிநெடுகப் பூப்போட வயசுப்பையன் நானிருக்கேன் // 5 நீயும்நானும் சேர்ந்துவாழ தேதியொண்ணு குறித்திருக்கேன்.// 6 - நாகை. ஹாஜா | |
17 | 207 | தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/ பூத்திருந்த மலரெடுத்து பூவை உனக்கு/ சூடிட நினைத்தே ஆசையோடு காத்திருந்தேன்/ அன்பின் சுடரில் அரவணைக்க நினைத்தேன்/ பொங்கும் நினைவுகள் தங்கும் ஞாபகங்களில்/ உள்ளம் மகிழ்ந்தே உன்னில் கலந்தேன்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
18 | 735 | தாமரைக்குளத்திலே சாயங்காலப் பொழுதிலே. வயலில் உழுதுவிட்டு களைப்பார குளித்தேனே/ தூண்டிலால் மீன் பிடித்து மகிழ்ந்தேனே/ கரையிலிருந்து சிறுகல் வீசி சிரித்தேனே/ நீச்சல் அடிக்க பாய்ந்து வீழ்ந்தேனே/ தாமரைஇலையில் சுண்டல் சுவைத்தேனே/ காகிதக்கப்பல் விட்டு தூது அனுப்பினேனே. படைப்பாளி பைரவி | |
19 | 270 | அந்தியிலே ஆதவனும் அணிந்திட்டான் குங்குமத்தை !// சுந்தரியே நீயுமே சொக்கித்தான் போனாயோ ?// விந்தையாக வந்தேநீ விண்மீனாய் மின்னுகின்றாய் !// செந்தாமரைப் பூக்களின் சிறுகுளத்து நீரினிலே !// அந்தரத்து இரம்பையே அழகான ஓர்மலரை !// மந்திரத்தை ஓதியே மகிழ்வுடனே பறித்துவா !// தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைப்புதூர் . | |
20 | 766 | தாமரைக் குளத்திலே தங்கமென மிளிர்ந்தாய்/ தாமரையின் முகம்போல மலர்ந்ததடி உன்முகமும்/ சாயங்காலப் பொழுதிலே சந்தனம் மணக்குதடி/ சாலையோரப் பூக்களெல்லாம் தோற்றுப்போனதடி/ அடிவானம் சிவந்திருக்கும் ஆழ்மனமோ பூத்திருக்கும்/ இரவை எண்ணி வரவேற்று நிற்குதடி..! சுரேஷ்குமார் தமிழ்செல்வன் | |
21 | 465 | பெண்ணா பூவா பேசும் தெய்வமா கண்ணா கணையா காதல் சின்னமா வண்ண வானில் வரைந்த ஓவியமா தன்னை மறந்து தடாக நீரில் தள்ளினாள் படகை தாமரை பறிக்க சாய்ந்ததால் பொழுது சாய்ந்தது பூவும். இரா.வெங்கடாசலம் | |
22 | 261 | ஆதவன் மறைந்ததும் இருள் சூழ்ந்ததுவே புள்ளினங்கள் கூட்டிற்குப் பொழுதுடனே திரும்பினவே தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே மலர்ந்த மலர்கள் குவியத் தொடங்கினவே கயல் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றனவே வானத்தில் சந்திரன் ஒளிவீசத் தொடங்கியதே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
23 | 201 | காத்தாட வந்தாயோ களைப்பாற நடந்தாயோ/ பூக்களோட பூக்களாய் புனலாட வந்தவளே / மாமனோட மனசையும் மயக்கிப்புட்டுப் போறியேடி / தாமரைக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/ பூத்திருந்த பூக்களெல்லாம் பூவையே உன்னழகை/ பார்த்தே ரசிக்குதடி பரவசமா இருக்குதடி// புவனா சற்குணம் கனடா | |
24 | 373 | அல்லிக் குளமும் அலங்காரப் பெண்ணும் தாமரைப் பூப்பறிக்க தயங்காது சென்றாள் அந்திநேரம் ஆசைமச்சான் ஆசையோடு காத்திருக்க வஞ்சியிவள் வானிலே காதல்மழை பொழிகிறது உயிரான உலகத்திலே உறவைத்தேடி ஓடுகிறாள் வானமுள்ள காலம்வரை வாழட்டும் அன்புடனே !! ஜயந்தினி வாகீசன் | |
25 | 344 | ஆகாயவானம் அந்தி சாயும் நேரம் மையலுடன் காத்து நின்றாளே...மங்கை தடாகத்தில் தவமிருந்தாளே தவியாய்த் தவித்திருந்தாளே. கதிரோருனும் மறைய கலங்கிடுமாம் கமலம் கலங்காமல் வீற்றிருந்தாளே கன்னியிவள் சிவந்திருந்தாளே கண்ணனின் வரவிற்காக பலருடன் பூத்திருந்தாளே! #எமா# | |
26 | 647 | மெய்யோடு மெய் தீண்டியதும் இல்லை // சொல்லோடு சொல் வார்த்ததும் இல்லை // நேத்திரம் நான்கும் நேராய் நோக்கியதுமில்லை// நம் நாமமதை நாவால் நவிழ்ந்ததுமில்லை// ஆயினும் , உமது வரவால் உயிர்த்தேனே // தாமரைப்பூ குளத்திலே சாய்ங்காலப் பொழுதிலே // நாகநந்தினி | |
27 | 602 | "கன்னி உனை கண்டேன் குளக்கரையிலே கதிரவனும் மறையும் அந்திப் பொழுதிலே கன்னத்தில் குழி விழும் சிரிப்பாலே கட்டுண்டு மயங்கிப் போனேன் தன்னாலே எண்ணத்தைச் சொல்லிட விளைந்தேன் நேரிலே கண் விழித்தால் கனவானது முடிவிலே." வெங்கடேசன் கோவிந்தராஜ் | |
28 | 317 | தாமரைகள் தடாகத்தில் ஆயிரம் இருந்தது/ ஆவாரம் பூவாக அவள்மனம் நினைந்தது/ படகினில் சென்று பறித்தாள் மகிழ்ந்து/ பரவசத்தில் இருந்தாள் பனித்துளி குளிர்ந்து/ பொழுது போனது புன்னகை தவழ்ந்து/ புதுப்புதுப் பூக்கள் குளத்தில் நிறைந்து/ க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
29 | 774 | மாமனுனைக் காணவந்தான் மலலிகைப்பூங் கையோடு தாமரைப்பூ குளத்திலே சாயங்கால நேரத்திலே காமனவன் கணைதொடுக்கக் கண்மலர்ந்த தேவதையே தாமரைக்கண் ணால்பார்த்துத் தளிர்முகத்தில் சிவப்பேற நாமமுந்தான் கெட்டு நளினத்தைக் காட்டிடுக. இளவல் ஹரிஹரன், மதுரை | |
30 | 483 | தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே / 1 நீரெடுக்க அவள்வந்தாள் வான்நிலா வந்ததென/2 அல்லிப்பூ மலர்ந்ததே தாமரை கூம்பியதே/3 மெல்லியலாள் இடைதழுவி பூந்தென்றல் குறும்புசெய /4 சொல்லொண்ணா ஏக்கமுடன் சோலையைப் பார்த்தாள்/ மெல்லவே அவன்தொட்டான்மேற்குவான்சிவந்ததே/6 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
31 | 428 | தாமரைப்பூக் குளத்திலே தண்ணீரில் அசைகின்ற அழகைக் காண்பதற்குக் கண்கோடி வேண்டுமே தாரைகையும் தனியாகத் தலைவனுக்குக் காத்திருக்க பெண்ணிவளின் மதிமுகமும் செக்கச் சிவந்திருக்க தன்னிதழே தனியாக அவளிதழாய் மாறியதோ தாமரைக்குச் சந்தேகம் தலையைச் சுற்றியதே. சுப்பிரமணியன் அன்புமலர் | |
32 | 747 | ஊருக்கு மத்தியிலே அழகானத் தோற்றத்திலே// தாமரைப்பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே// தாமரையும் வாடலியே தாகமும் தீரலையே// குளிக்க வந்தவளே குளிர்ச்சித் தருகிறியே// குளிர்ந்துப் போனதடி குற்றமற்ற எம்மனசு// விருந்து தருவேனடி விருப்பத்தினைக் கூறிவிடு// மறுப்பு வந்தாலே மறைந்துப் போவேனடி// ஜெ.சுகமணியன் வாழப்பாடி | |
33 | 224 | 🌿அந்திமாலைப் பொழுதினிலே அழகியவள் வருகையிலே 🌿தாமரைப்பூ குளத்திலே தென்றலுமே வீசுது/ 🌿பூத்திருக்கும் பூக்களை வண்டுகளும் மொய்த்திடும்/ 🌿காத்திருக்கும் காதலுமே மெதுவாக அரங்கேறும்/ 🌿ஆயிரம் கனவுகள் அழகாக மலருது/ 🌿சாயங்காலப் பொழுதிலே சங்கீதம் ஒலிக்குது/ ✍🏻க.குணசேகரன் | |
34 | 461 | காலைக் கதிரவன் கடமை முடித்து/ மாலையது நேரத்திலே மயங்கியப் பொழுதிலே/ மங்கையவள் மனமெல்லாம் மலர்நிறை குளத்திலே/ தழுவியவன் மறையவே தாமரை குவியவே / சாயங்காலப் பொழுதிலே சூழ்ந்த அழகிலே/ அழகு அகலாத அழகு ஆளுமையே./ கோ.அருச்சுணன். | |
35 | 210 | செந்தாமரைக் குளத்திலே செவ்வந்திப் பொழுதிலே../ செங்கதிரோன் விடைபெறவே செங்காந்தள் விழியழகி../ செந்தூரப் பொட்டுவைத்து செவ்வண்ணச் சேலையிலே../ சேகரிக்க வந்தாளே செந்தாமரை மலர்களை../ சேற்றிலே மலர்ந்தாலும் செந்தூரான் திருவடியிலும்.../ சேவிக்க உகந்ததே சேமங்கள் பெற்றிடவே.../ திருமதி சுப்ராணி சிவகுமார்....✍ | |
36 | 386 | தாமரைப்பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/ பூப்பறிக்க வந்தவளே புதுநாற்றாய்ச் சிரித்தவளே/ கொடிபின்னிப் பழுதாக்கும் கொடியிடையே உன்காலை/ நொடிப்பொழுது காத்திரடி நூறுமலர் பறித்திடுவேன்/ கூந்தலிலே மலரொன்றைச் சூடிடவே வரங்கொடடி/ கொவ்வையிதழ் முத்தமும் தந்திடடி வழிவிடடி/. தென்கரை தாயுமானவன். | |
37 | 756 | செந்தாமரைப் பூத்திருக்கும் குளத்தினிலே பூப்பறிக்க சிங்காரிப் படகெடுத்து சென்றாளே மாலையிலே மலர்ந்திருந்த மலரொன்றில் மதுவுண்ட வண்டொன்று மயக்கத்தில் தனையிழந்து மலரென்று இசைமீட்ட மங்கையவள் நாணத்தில் கரங்கொண்டு முகமறைக்க இரவென்று கருவண்டு பறந்தோடிப் போனதம்மா! - ஜெயக்குமார் சுந்தரம் | |
38 | 748 | தாமரைப்பூ குளத்திலே சாயங்கால வேளையிலே/ இருவரும் மகிழ்திருக்க இனியவளே வந்துவிடு/ என்னருமைக் காதலையே ஏந்திழையே உன்னிடம்/ ஏகாந்த வேளையிலே நான் கூறி/ உன்னுடைய மடியிலே தலைசாய்க்க வேணுமடி/ காலங்கள் கடந்து நாம்வாழ வேண்டுமடி/ இரா.மதனகோபாலன், தருமபுரி. | |
39 | 221 | இனிமையான காட்சியிலே இளமை நிறைந்திருக்க இனிமை ததும்பிடும் இயற்கை அழகிலே நீர்ப்பரப்பின் மீதினிலே நீராடும் தாமரையை நீராடிட வைத்திடும் நித்திலத் திருமணியே கண்ணே உனக்கும் காதல் வந்ததுவோ கண்ணாளன் வருவாரென்று காத்திரு தேவதையே புஷ்பா கிறிஸ்ரி | |
40 | 258 | அத்தை மகளே அழகு ராசாத்தி/ மாமன் மகன் மோகத்திலே மயக்கமோ/ சாயங்கால வேளையிலே, தாமரைக்குளத்துப் பக்கம்/ தயங்காம வந்திடடி, தந்திடுவேன் நீகேட்டதை/ சந்தோசமாப் பேசிடலாம், சரசமாக இருந்திடலாம்/ தை பிறந்ததும் தாரமாகப் போறவளே! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
41 | 259 | குளத்திலே பரவலாகப் படர்ந்து வளர்ந்து.../ அழகிய இதழ் விரித்து மலர்ந்து.../ தாமரைப்பூ கண்களுக்கு நல்ல விருந்து.../ சோர்ந்த உள்ளத்திற்கு உற்சாக மருந்து.../ குழந்தையாய் தொட்டு விளையாடி மகிழ்ந்து.../ அந்திப் பொழுது போகுதே நகர்ந்து...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
42 | 638 | அந்தி நேரத்தில் அகன்ற குளத்தில் ஆரணங்கு அன்ன நடை பயின்று பூத்தமலர் பறித்து புத்தாடை நனைய புது மேனி குலுங்க வந்தால் சித்திரமாய் மங்கை சிலுசிலுக்க வந்தாள் முத்தமிட அசையடி அத்தை மகளே கவிஞர் கோ.நவமணி | |
43 | 254 | தாமரைப்பூ குளத்திலே அல்லித்தண்டு கைகளால்/ கதிர்சாயும் வேளையிலே மனதைப் பறித்தாள்/ அன்றலர்ந்த மலர் போலும் அவள்முகம்/ கள்ளமில்லா உள்ளத்திலே காதல் கொண்டவளே/ நல்வாழ்க்கை அமையவேண்டி கைகள் கூப்பிநின்றாள்/ கண்கள் திறந்தபோது நெஞ்சத்தில் மஞ்சமானாள்/ கி.மா.கனகராசன். சூலூர்( அழகு மாசிலாமணி ) | |
44 | 768 | தாமரை மலரொன்று தடாகத்தில் அசைந்தாட/ தாரகை ஒருத்தி மலரழகில் மயங்குகிறாள்/ முகத்தில் விரிந்த புன்னகையின் அழகு/ போதுமடி உந்தனுக்கு! வேறுமலர் உனக்கெதற்கு?/ போகட்டும் விட்டுவிடு பறிக்காதே கைநீட்டி!/ குளத்திலே உயிர்ப்போடு மலரதுவும் சிரிக்கட்டும்! புவனா சந்திரசேகரன் | |
45 | 718 | அந்திப் பொழுதினிலே தாமரைக் குளத்திற்கு/ வந்த இவள் வண்ண நிலவோ?/ செந் தாமரை மலரைப் பறிப்பவளோ சிந்துகின்ற புன்னகையும் சிறப்பு அல்லவோ?/ சந்ததமும் வருவாளோ சம்மதம் தந்துமே/ சுந்தரி வாழ்விலே துணையாக வருவாளோ கீழ்கரவை குலசேகரன், இலங்கை | |
46 | 722 | பொன்மாலைப் பொழுதில் மலர்கள் கொய்திட/ தரை இறங்கிய ரதியோ இவள்/ நின் அருகாமையில் சுகந்தமாக மணந்திட/ செங்காந்தள் சிவந்திட ஆம்பல் மலர்ந்திட/ பூக்களின் நடுவே உதயமான தேவதையே/ நாண நகைப்பில் சிறைப் பட்டேன்/ சுஜாதா அருணாச்சலம் | |
47 | 709 | தண்ணீர்கள் மேலெழுந்து தாமரைகள் முகம்காட்ட// மலர்மேலே ஆசைகொண்டு அருகினில் வந்தமர்ந்தாள்// கண்குளிரக் காட்சிதந்து காதலியாள் மின்னுகிறாள்// பூவாக அவதரித்த மங்கையிவள் அழகினை// தாமரைப்பூ குளமும் அலங்காரம் செய்கிறதே// இதழ்விரித்தக் கன்னியே இதயத்தைத் திருடிவிட்டாய்// தாழை. இரா. உதயநேசன் | |
48 | 636 | மராமத்து செய்து குளத்தைப் பராமரித்தார்! கிராமங்கள் தோறும் கழனியைப் பயிரிட்டார்! மண்வளம் விரவி ஊரும் செழித்ததுவே! மீன்வளம் பெருகிக் கிராமம் கொழித்ததுவே! ஓடிவரும் மதகுநீரின் மிசையால் விவசாயம்! செந்தாமரைகள் குளத்திலே மிதக்கின்றன தாராளம்! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
49 | 618 | தாமரைப்பூ குளத்தினிலே சாயங்காலப் பொழுதினிலே/ தண்ணீர் அள்ளக் குடத்தைக் கொண்டு/ தலை குனிந்து தரையைப் பார்த்து/ தயங்கி நடந்து போகும் பெண்ணே/ தவிக்கும் மனதைத் தடவி ஆத்தி/ தாகம் தீர்க்கத் தருவாய் பதிலை/ ஔவை. | |
50 | 707 | தாமரை நிறைந்த தடாகம் ஒன்றில் தாரகை ஒருத்தி பூத்து நின்றாள் பூத்த மலரினை அள்ளி எடுக்கும் பூக்கும் மலரும் இவள் அல்லவோ! மலரெது விரலெது விளங்க வில்லையே மங்கையின் மனமோ பாலின் வெள்ளையே ✍️பா.ச.கண்ணன் | |
51 | 652 | தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே/ எதற்கு வந்தாயோ அழகு மங்கையே!/ கையில் எட்டாமல் தள்ளாடும் தாமரையே!/ விடாது பிடிக்க முயற்சிக்கும் மாதுவே!/ இதுவென்ன அழகு விளையாட்டு நேரமோ?/ பார்ப்போம் யார் வென்று அகப்படுவதென/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
52 | 287 | வண்டுகள் மொய்க்கின்ற வண்ணத் தாமரைகள் ஆதவன் மறைந்திடின் இதழ்கள் மூடிடும் அதற்குள் வண்டுகள் அதனைச் சுவைத்திடும் மங்கையின் பிம்பம் மலரிடை தெரிகையில் மலரோடு மலராய் அவளும் கலந்திட்டாள் மங்கையின் கண்களே வண்டுகள் ஆயின தண்டபாணி | |
53 | 613 | செவ்வானம் சிவந்திருக்க சூரியனார் ஓய்வெடுக்க/ கதிரவனைக் காணாது தாமரையும் தலைகுனிய/ குளத்தருகே மங்கையவள் நாணம் கொண்டமர/ பூத்திருக்கும் பூக்களை தன்கரத்தால் வரடிவிட/ தாமரைக் குளமருகில் அந்திசாயும் பொழுதிலே/ தாமரையாள் கண்கள் தன்னவனைக்காண தவமிருந்தாள்/ ஜெயாசந்திரமோகன் | |
54 | 247 | மாலை நேரத்தில் மயங்கித் திரியும் / பறவைகள் போல சாலையின் ஓரத்தில்/ குளத்தில் பூத்திருக்கும் தாமரைப்பூவை பார்த்தவுடன் மங்கையவள் மயங்கிப் போகின்றாள் மன்னவனின்/ வருகையை எண்ணி கிறங்கித் திரிகின்றாள்/ மன்னவனும் வந்தான் கதையொன்றும் சொன்னான்/ த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் | |
55 | 434 | காலைக் கதிரவன் வரவில் பூத்திருக்கும்/ கண்கவர் அழகு செந்தாமரைப் பூக்களோ/ பறிக்க எவருமின்றி மாலையில் ஏக்கத்தில்/ பேரழகுப் பெண்ணவளோ கரையோரம் நடந்தாளே/ குளத்தின் பூக்களுக்குப் புத்துணர்வு பிறந்ததே/ பதுமைத் தீண்டிட குளமெங்கும் ஆர்ப்பரித்ததே// மீனாட்சி சுந்தரம் | |
56 | 515 | சூரியன் ஓய்வெடுக்கும் சாயங்காலப் பொழுது/ செவ்வானம் பூமியைக் குளிர்விக்கும் தருணம்/ சேல்விழி மங்கையின் தரிசனத்தில் மயங்கினேன்/ செந்தாமரைப் பூக்களால் சிவந்திருக்கும் பொய்கையில்/ செங்காந்தள் விரல்களால் மலர்களைக் கொய்திடும்/ சிற்றிடையாள் அழகில் தோற்குமோ வெண்ணிலவும்.. லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
57 | 717 | தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/ பூமகளும் வந்தாளே போதையினைத் தந்தாளே/ காமன் நானாக கன்னி அவளாகி/ தேமதுரம் தந்தாளே தித்திக்கும் இதழாலே/ பூரித்துப் போனேன் நானும் பூமகளை/ வாரி அணைத்திட்டேன் மையல் கொண்டே/ கந்தசாமி நடேசன் | |
58 | 769 | தண்ணீர்க் குடமெடுத்துத் தண்டை கிணுகிணுக்க/ தனிவழியே போறவளே! தங்கமே தாழம்பூவே!/ நினைப்புமே தோன்றலையோ? நெஞ்சந்தான் புரியலையோ?/ நிதமும் உனக்காக இதயம் துடிக்குதடி/ தாமதிக்காதே கண்ணே! காத்திருப்பேன் உனக்காக/ தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே!/ - கற்பகாம்பாள் கண்ணதாசன் | |
59 | 750 | தடைகள் நீங்கிடுச்சு விடைகள் கிடைச்சிடுச்சு..! கலியாணப் பேச்சும் கைக்கூடி வந்திடுச்சு..! ஆசையாய்ப் பேசிட ஆயிரம் கனவுகளோடு..! அத்தமக காத்திருப்பாள் அச்சத்தில வியரத்திருப்பாள்..! தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே..! கால்கடுக்க நின்றிருப்பாள் கண்ணிரண்டும் பூத்திருப்பாள்..! - தமிழ் வேந்தன்...✍ | |
60 | 668 | தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதில் அழகிய தாமரைப்பூ தடாகத்தில் சாயங்காலமாம்/ பொழுதிலே தேவதையாய் மங்கை யொருவள்/ புன்னகை முகத்தோடு இதழ் விரித்து/ மலர்ந்து நிற்கும் தாமரையை நீண்டகரத்தினால்/ மெலிதான தண்டினை வலியறியாமல் பறித்தெடுத்து/ மிதக்கும் தெப்பமாக வலம் வருககிறாள்/ ஏஞ்சல்சோபிதா | |
61 | 562 | மனதில் மலர்ந்தவளே இதயத்தில் இனிப்பளே/ கனவுகளை நிறைப்பவளே கற்பனைகளில் நிறைத்தவளே/ என்னுயிரை இயக்குபவளே வாழ்கையின் திசைக்காட்டியே துன்பத்தைத் துடைப்பவளே இன்பத்தை அளிப்பவளே/ என்னைத் தேடிவரத் தயக்கமேன் தேன்மொழியே/ தாமரைபூ குளத்துக்கு தவறாமல் வந்துவிடு/ பா.பத்மநாபன் | |
போட்டி முடிவடைந்தது | |||
62 | 204 | தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே// ஆசையோட காத்திருக்கேன் அஞ்சுகத்தைக் காணலியே// ஆளில்லாத நேரத்திலே அள்ளிக்கத்தான் தோணலியா// சித்திரமே செங்கனியே சீக்கிரமே வந்திடடி// சிந்தைக்குள்ளே வச்சிருக்கேன் சின்னவீடும் இலையடி// சில்லுன்ன காத்தும் கொல்லுதடி செண்பகமே// ஆஸாத் கமால். |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக