Sl | எண் | படம் | கவிதை |
1 | 735 | சமத்துவக்கல்வி தீண்டாமை நீக்கும் சமூகநீதிக்கல்வி/ எல்லோருக்கும் கட்டாயக் கல்வி வரம்/ கிராமத்தில் அறியாமை நீக்கும் அற்பதம்/ ஏழைக்கு எட்டும் ஏட்டுக்கல்வியகம்/ இலவச அரசுப் பள்ளி வாழியவே. படைப்பாளி பைரவி | |
2 | 668 | சமூகத்தில் மாற்றமும் மலர்ச்சியும் வந்திடவே/ மாறிட வேணும் கல்வி முறையே/ ஏற்றத் தாழ்வுகளின்றி கிடைத்திடும் கல்வி/ வளரும் தலைமுறையை வாழ்ந்திட வைக்கும்/ சாதனை திட்டம் சமத்துவ கல்வியே/ ஏஞ்சல்சோபிதா | |
3 | 773 | உன்மையிலே வெட்கக்கேடு கல்வியிலே பாகுபாடு தகப்பன் செய்வதே மகனின் தொழிலாம் ஓரினம் மட்டும் உயர்ந்து நிற்குமாம் நாடு வளம்பெற வேண்டும் என்றால் கல்வியில் சமத்துவம் வேண்டும் அன்றோ.. எம்.எம்.நிஜாமுதீன் | |
4 | 614 | ஏழை பணக்காரன் வேறுபாடுகள் போக்கவே/ சமத்துவ கல்வி நாட்டினில் வேண்டுமே/ தாழ்வு மனப்பான்மை எனும் நஞ்சினிலே/ மாணவர்கள் எதிர் காலம் பாதிக்குதே/ சிந்திப்போர் உண்டோ பணமிருக்கும் மேதாவிகளே/ விஜயலட்சுமி | |
5 | 221 | சாதியும் மதமும் சாற்றிடாத ஒருநிலையில் சாதித்துக் கற்றிடும் சமத்துவக் கல்வியை பாரபட்சமின்றி யாவரும் பொதுவுடன் கற்றால் ஏழ்மை பணக்காரனென எவ்வித பாகுபாடின்றி தாழ்ச்சியுடன் கல்வியைத் தரணியில் கற்றிடலாம் புஷ்பா கிறிஸ்ரி | |
6 | 207 | ஏற்றத் தாழ்வுகளை தகர்த்து எறிந்தே/ எல்லோரும் சமமென்ற எண்ணத்தை வளர்த்திடும்/ சமூக மறுமலர்ச்சியே சமத்துவக் கல்வி/ எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றம் அளித்திடும்/ கல்வியின் சாதனையை காலமெல்லாம் போற்றும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
7 | 483 | சீர்கொண்ட ஞானமும் சிறப்பான கல்வியும்/1 ஓர்நிலையில் எல்லோரும் உயர்வாகப் பெற்றிட / 2 இமயம் முதலாய்க் குமரி வரையில் /3 சமத்துவக் கல்வி சட்டம் வேண்டும் /4 உலகில் சமநிலை உருவாகித் தழைத்திடவே / 5 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
8 | 717 | வாழ்வை வளமாக்கும் சமத்துவக் கல்வி/ அனைவருக்கும் கல்வி அதுவே சிறப்பு/ வறியோர் செல்வர் வேற்றுமை வேண்டாம்/ ஏழைக்கு எழுத்து இறைவனின் வாக்கு/ கல்வி என்பதன் புனிதம் காப்போம்/ கந்தசாமி நடேசன் | |
9 | 224 | சமத்துவம் தந்திடும் சமச்சீர் கல்வியே/ நடத்துவோம் நாடெங்கும் அதற்கொரு வேள்வியே/ எளிமையான பாடங்கள் கற்றலை இனிமையாக்கும்/ கூடுதல் பாடங்கள்ஆற்றலை சோம்பலாக்கும்/ சமத்துவக் கல்வியால்சாதிக்கலாம் உலகினிலே/ ✍🏻க.குணசேகரன் | |
10 | 588 | சமத்துவ கல்வி சாதிவெறி போக்குமா?../ பாரதி கனவு முழுதும் பலிக்குமா?../ பள்ளிப் பருவம் கடந்து விட்டால்,/ அறிவுக் கண் மூடிடுதே, அகத்தில்.. / வஞ்சம் பெருகிட கொலைகளும் பெருகுதையா... // ~~பாரிஉமா. சர | |
11 | 238 | சமநிலையாய் சமுதாயம் சரித்திரம் பதியட்டும்.../ ஓர்நிலையென உயிர்கள் ஒப்புரவுடனே ஓங்கட்டும்../ சமநிலைக் கல்வியை சட்டமாக நிறைவேற்றிட../ ஏழையும் பணக்காரனும் வாழ்வானே சமமாக../ வாய்ப்புகள் சமமாகிட வளருமே சமத்துவம்../// #இளந்தை சேது | |
12 | 386 | சத்தியம் வேண்டியது சமத்துவக் கல்வியே/ நித்தமும் அரசுகள் வணிகமய மாக்கியே/ ஏழைக்கு ஒன்றும் செல்வருக்கு மற்றொன்றாய்/ கல்வியைக் கொடுக்கின்ற கபடம் நீடித்தும்/ வர்க்கபேதம் வளர்க்கும் வழிமுறை தவிர்ப்போம்/. தென்கரை தாயுமானவன். | |
13 | 450 | ஆண்டவன் தந்தது அனைவருக்கும் சமஅறிவு! இதில் உயர்வும் தாழ்வும் எங்கிருக்கு! வறுமைக்கும் செல்வத்திற்கும் போட்டிகள் எதற்கு! சமத்துவக் கல்வியே போதும் எமக்கு! அனைவரும் கற்போம் வேற்றுமைகள் இன்றியே! ரேணுகா சுந்தரம் | |
14 | 256 | சாதி மதம் மொழி கடந்து/ சகல குழந்தைகளும் ஒன்றாய் அமர்ந்து/ ஏற்றத் தாழ்வுகளை அறவே மறந்து/ இயல்பாய்க் கற்பதே சமத்துவக் கல்வி/ ஒற்றுமை ஓங்கி வேற்றுமை மறையும்/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
15 | 317 | சரிசமம் கொண்ட ஞானத்தின் வெளிபாடு// சந்தோசம் மிகுந்த அரவணைப் போடு// ஆண்கள் பெண்கள் படிக்கும் பாடு// அறத்தை அன்பை விதைப்பதைக் கூறு// செலவுகள் இல்லாமல் சிகரத்தில் ஏறு// க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
16 | 707 | நிறத்தின் பேதம் நிம்மதி கெடுக்கும்/ இனத்தின் பேதம் இன்னலைக் கொடுக்கும்/ நீயா நானா போட்டியும் இல்லை/ உயர்வோ தாழ்வோ வேற்றுமை இல்லை/ சமமாய்க் காணும் சமத்துவக் கல்வி/ ✍️பா.ச.கண்ணன் | |
17 | 763 | ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக/ எல்லோரும் சம மெனும் சமத்துவம் பெற / கல்வியை காலத்தால் அழியாது காக்க / எளியோர் அனைவரின் கனவுகள் மெய்ப்பட / சமத்துவக் கல்வியை சட்டமாக மாற்றுவோம்./ பிரேமா பூ | |
18 | 261 | சமத்துவ கல்வி அவசியம் தேவையே குழந்தைகளின் குறைகள் யாவும் நீங்கிடுமே அவர்களின் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் குறைந்திடுமே கல்வியின் பயன் அனைவருக்கும் கிட்டிடுமே அவரவர் தாய்மொழி தவறிடாமல் கற்பரே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
19 | 470 | திண்ணைக் கல்வி எல்லோர்க்கும் இல்லை குருகுலப் பாடமோ எளியவர்க் கில்லை குலக் கல்வி சாதிக்கொரு நீதி மேனாட்டு படிப்பு மேலோர்க்கு மட்டுமே சமத்துவக் கல்வியே சமச்சீர் கல்வி. நா.சுகுமாறன் | |
20 | 592 | கல்வியறிவில் ஏற்றத்தாழ்வில்லை கற்பதில் இருக்கலாமா சொல்லித்தரும் பாங்கில் பாகுபாடு காட்டலாமா சாதிமதமற்ற சமத்துவம் எங்கும் மிளிரணும் கடைச்சரக்கல்ல கல்வி பற்றுவரவு எதிர்பார்க்க எல்லோர்க்கும் கல்வி எளிதாகக் கிட்டட்டுமே. கவிஞர் ராம்க்ருஷ் | |
21 | 771 | சமத்துவம் ஒன்றே சரியென்று பாடு/ சமமதில் மாற்றிட வரலாற்றுக் கேடு/ கல்வியில் பிரிவினைப் பார்ப்பது வேதனை/ பாரினில் உயர்ந்திடப் படிப்பதே சாதனை/ சரித்திரம் படைக்கட்டும் சமத்துவக் கல்வி/ மா.சு.திருக்குமரன். | |
22 | 747 | வேற்றுமைக் கலைந்து ஒற்றுமை வளர்ந்திடுமே// உயர்ந்தோர் தாழ்ந்தோர் உள்ளம் மறந்திடுமே// கற்றல் வாய்ப்பினை சமமாய் பகிர்ந்திடுமே// ஏழைக்கும் ஏட்டுக்கல்வி எளிதில் கிடைத்திடுமே// அனைவருக்கும் உகந்தது சமத்துவக் கல்வியே// ஜெ.சுகமணியன்வாழப்பாடி | |
23 | 259 | அறிவுக் கண்களை திறப்பது கல்வி.../ ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் மனதில் இடைவெளி.../ வளரும் குழந்தைகள் பாகுபாட்டால் தள்ளி.../ தாழ்வு மனப்பான்மை வருமே சொல்லி.../ சமத்துவம் கைகோர்த்தால் சரியாசனம் சமமாகுமே...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
24 | 434 | சாதிகளை விடுத்துச் சமயங்களைத் துறந்து/ ஒற்றுமை உணர்வை ஊட்டும் வகையில்/ ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்/ உலகமே கையிலெடுத்த உன்னத ஆயுதம்/ சரித்திரம் போற்றும் சமத்துவக் கல்வி// மீனாட்சி சுந்தரம் | |
25 | 312 | கல்விக் கற்றுப் பெருமை அடையப் 1 பிறந்தோம் என உணர்ந்து மகிழ்வுடன்2 படித்து முன்னேற வேண்டும் என்ற. 3 நிலையில் வாழ்வில் உறுதி எடுத்து. 4 முன்னேற அனைவரும் கற்பதே சிறப்பு. 5 பொ.சுப்புலட்சுமி, தேவகோட்டை. | |
26 | 652 | சமத்துவமாய் கற்றுக் கொடுக்க வாரீர்/ பாகுபாடுகள் இல்லாமல் கல்வியைக் கற்பீர்/ வேறுபாடுகள் இன்றி ஒன்றாக படிப்பீர்/ திறமை உள்ளவன் அறிவை வளர்க்கலாம்/ எவனும் இதிலே முயற்சியை விதைக்கலாம்/ கூ.மு. ஷேக் அப்துல் காதர் | |
27 | 465 | கல்வியில் சமத்துதுவம் காண்பதே அறிவு சொல்லில் ஒன்றும் செயலில் ஒற்றாய் வெள்ளை உள்ள விலையிலா பாமரனை கள்ள பேச்சால் கரைத்து தன்னின் இனத்தைக் காக்கும் எண்ணம் இழிவே இரா.வெங்கடாசலம் | |
28 | 748 | சகலருக்கும் வேண்டும் சமத்துவக் கல்வி/ சாதி மதம் அனைத்தையும் கடந்து / சரித்திரம் படைக்கும் சமமான வாய்ப்பு/ பால் பேதம் அற்று சமுதாயத்தில்/ எல்லோரும் சேர்ந்து கூடியே முயல்வோம்// இரா.மதனகோபாலன், தருமபுரி. | |
29 | 716 | உடலில் ஓடும் இரத்தம் சிவப்பு சமத்துவம் என்பது இதிலே இருக்கு இதையறிந்தால் வருமோ நமக்குள் கசப்பு உயந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமைப் போக்க சமத்துவ கல்வியைத் தருவோம் சிறக்க. - நாகை. ஹாஜா | |
30 | 463 | மனிதரில் சகலரும் சமமாக வில்லை! கேள்விகள் நம்மை இனம் பிரிக்கும்! உயர்வும் தாழ்வும் பிறப்பில் இல்லை! மன ஊணம் உடையவர் செயலது. கல்வியை விற்பனை செய்வது மோசடியே! அரவிந்தன் தஞ்சை | |
31 | 726 | ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வி/ ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே நீதி/ கற்றிடும் படிப்பிலும் பல மாறுபாடுகள் / வேறுபாடுகளை வேரோடு களை எடுப்போம்/ சமத்துவம் படைத்து கற்றலை எளிதாக்குவோம்/ -காளிராஜ்பாலகணேஷ் | |
32 | 618 | சாதி மத பேதங்கள் கடந்து/ சரிநிகர் சமானமாய் சட்டங்கள் உதிக்க/ சமத்துவக் கல்வி தரணியில் ஒளிர/ சகலரும் அடைவர் அறிவில் உயர்வு/ சந்ததிகள் எல்லாம் ஒற்றுமை ஓங்கும்/ ஔவை. | |
33 | 636 | சாதிகள் சமயங்கள் இருக்கும் வரையிலும்/ அரசியல் வியாதிகள் அழியும் வரையிலும்/ சமத்துவக் கல்வி ஏட்டுச் சுரைக்காய்/ தேர்தல் நேரத்தில் பேசிக் திரிவார்/ காரியம் முடிந்ததும் கைகழுவி விடுவார்! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
34 | 613 | பள்ளித் தோட்டத்தில் தினம்தினம் பூக்கட்டும்/ புதிய சிந்தனைப் பூக்கள் மலரட்டும்/ சாதிமத வேறுபாடுயின்றி கல்வி தொடரட்டும்/ பூமிதாயின் மடியில் பிறந்த குழந்தைகளே/ சமத்துவகல்வியை வேறுபாடுகள் இன்றி பயிலுங்கள்/ ஜெயாசந்திரமோகன் | |
35 | 755 | உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் செல்வந்தனும் பாமரனும் நாட்டுபுறம் நகரத்தான் ஆணென்றும் பெண்ணென்றும் எந்தவித பேதமின்றி ஏற்றதாழ்வு ஏதுமின்றி கல்விதனைக் கற்றிடவும் உயர்கல்வியில் உயர்ந்திடவும் சமவுரிமை சமுதாயம் வளர்த்திடுமே சமத்துவகல்வி - ஜெயக்குமார் சுந்தரம் | |
34 | 247 | சமத்துவம் காணுவோம் சமாதானம் பேணுவோம்/ சமத்துவக் கல்வி யாவருக்கும் கொடுத்திடுவோம்/ கல்வியின்தரம் உயர்ந்தால் நாமும் உயர்ந்திடுவோம்/ நாம் உயர்ந்தால் நாடும் உயர்ந்திடும்/ என்று நாடே போற்றும்படி வாழ்ந்திடுவோம் / த.காமராசு.தாராசுரம் கும்பகோணம் | |
35 | 287 | வேலையைக் குறிவைத்து வேட்டையாடும் பெற்றவர் தனியார் பள்ளியில் தரமான படிப்பினில் தம்தம் பிள்ளையை தனித்து அனுப்பினர் ஏழைக்கு ஏற்றது சமத்துவக் கல்வி என்பதோர் நியாயம் எப்படி வந்தது தண்டபாணி | |
36 | 213 | பாகுபாடில்ல கல்வியே நாட்டின் தேவை // காமராஜரும் இதற்காகவே சிந்தினார் வியர்வை // வியாபாரமாக இன்று ஆனது நாட்டில் // அரசு பள்ளிகளோ ஆளில்லா சுடுகாட்டில் // அத்தனையும் மாறிட ஏக்கங்கள் நெஞ்சில். கவிஞர்.மருத்துவர். ஜெயக்குமார். பலராமன். | |
37 | 765 | சமத்துப் பிள்ளைகளுக்குத். தானென் றிருக்கும்/ குபேரக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும்/ சமாதிக் கல்வியை சம்மட்டியால் நொறுக்குவோம்/ பள்ளிக ளெல்லாம் அரசுடைமை செய்வோம்/ சமத்துவக் கல்வியால் அனைவரும் உய்வோம்! திப்பு |
போட்டி நிறைவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக