Sl | எண் | படம் | கவிதை |
1 | 624 | மொட்டு அரும்பியது மூவாயிரம் தோட்டத்தில்/ சிட்டுக்கள் போட்டது சிங்கார நடனம்/ பட்டு வண்டுகள் பாடி தேனுண்டன/ பட்டு வச்ச காவல்பொம்மை சிரித்தது/. முனைவர் சி அழகிரி | |
2 | 778 | மொட்டு மலர்ந்து அகம் மகிழ்ந்தது//1 சிட்டுக்கள் உறவைத் தேடுது//2 பட்டுச் சிதறிடும் சாரல்//3 வயல்வெளியில் நாற்று நட்டு பாடல் //4 கவி அழகன் | |
3 | 378 | மொட்டு மலர்ந்த மல்லிகைச் செடியிலே சிட்டும் வாழ்ந்தது மகிழ்வோடு அன்று கயவர் கைப்பட பட்டுப் போனதே மீண்டும் நட்டு வளர்த்திடுவேன் சிட்டினை முல்லை நிரோயன் | |
4 | 669 | அன்பின் உறவோ மொட்டாய் மலர்ந்திட / சிட்டாய் வானில் சிறகடித்துப் பறக்கவே/ பட்டான உள்ளம் இணைந்திட என்றும்/ நாற்றாய் வேரூன்றி நிலைத்ததே வாழ்வு/ நஸீரா வசூக் | |
5 | 254 | மொட்டு மலர்ந்தால் மெட்டமைக்கும் பறவைகள்/ சிட்டாகப் பறந்துவந்து தேன்குடிக்குமே/ பட்டு இதழ்கள் பாழ்படாமல் / நட்டுவைத்த செடியின் முகவரியே பூக்களானதோ/ கி.மா.கனகராசன். சூலூர். | |
6 | 773 | சிரிக்கும் மை விழி சிட்டு கைவிரல் மேனியில் பட்டு ஆசையை அவளிடம் நட்டு பெயர் சொல்ல மலர்ந்தது மொட்டு. எம்.எம்.நிஜாமுதீன் | |
7 | 779 | மொட்டென தாய் மடி பிறந்து...... / சிட்டென சிறகடித்துப் பறந்து...../ பட்டென உறவுகளோடு இணைந்து..../ நட்டு வைத்த விருட்சமாய் வாழ்வோம்......... ரமணி சிவா | |
8 | 261 | #_மொட்டு மலர்ந்தது மணம்,கமழ்ந்தது #_சிட்டுக்்குருவிகள் குவிந்தனவே #_பட்டு,உடை,அணிந்து மகளிர்,நாத்து,#_நட்டு,மகிழ்ந்தனரே !
~ வள்ளல் இராமமூர்த்தி | |
9 | 761 | மொட்டுப் போன்று அழகாய் சிரித்தவள்/ சிட்டாக பறந்து விட்டாள்/ பட்டுப்போன்ற என் மனதில்/ நட்டு வைத்தால் மலர் செடிகள்/ மு, துரைப்பாண்டியன் | |
10 | 580 | மொட்டு அவிழ்கின்ற தாமரை போல்// சிட்டுக்களாய் மழலைச் செல்வங்கள்// பட்டுப் போன்ற மனமுடனே// நட்டு வைத்தனர் அன்பெனும் மரத்தை// சுந்தரலிங்கம் நிருத்திகன்., அல்வாய். | |
11 | 763 | மொட்டு அவிழ்ந்து பூத்தப் பூவை / சிட்டுப் போல பறந்தே/ பட்டான தன் இதயத்தில் / நட்டு வைத்தாள் உன் நினைவுகளை / பிரேமா பூ | |
12 | 240 | மொட்டு இருந்தது செடியில் அழகாக// சிட்டு குருவி அமர்ந்ததும்// பட்டு இதழ்கள் விரித்தது// நட்டு வைத்தால் இயற்கையை ரசிக்கலாம்// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
13 | 735 | வண்ண மலர் மூலம் மொட்டு/ சிட்டுக்குருவி கானம் பட்டுப்புடவை ஆடம்பரம்/ மரக்கன்று நட்டு காப்பாய் பூமி. படைப்பாளி பைரவி | |
14 | 450 | செடியிலே மலராக விரிகிறது மொட்டு! அதன் பட்டு இதழ்களில் தேன் அருந்துகிறது சிட்டு/ அன்று நட்டு வைத்த செடியிலே! ரேணுகா சுந்தரம் | |
15 | 588 | ரோஜா மொட்டு தாய் செடியில்!... / வசிகரிக்கும் சிட்டு வருவதற்குள், / கை பட்டு பூப்பதற்குள்.. / மனைவி தலையில் நட்டு மகிழ்ந்திடுவேன். / ~~பாரிஉமா. சர | |
16 | 770 | மொட்டு மலர்ந்தது காதல் வந்தது சிட்டுக்குருவிடம் தூது போகச் பட்டாடை உடுத்தி பருவப்பெண் கண்களால் காதல்சொன்னேன் நாணத்தில் தலைநட்டால் ஸ்ரீதர் லெட்சுமணன் | |
17 | 259 | மொட்டு பூத்த செடியில் அமர்ந்து.../ சிட்டு உறவுகளை தேடுது.../ பலமான காற்று பட்டு.../ நட்டு வைத்த செடிகள் பாழானது...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
18 | 246 | மொட்டு ஒன்று மலர்கின்ற பருவம் நட்டு வைத்த செடியினிலே. சிட்டு ஒன்றுத் தொட்டுத்தான் பட்டுப் போகுமோ மொட்டும் மலராமலே. செல்வம் செல்வகுமார் | |
19 | 780 | செடி ஒன்று நட்டு வளர்த்தேன்/ மொட்டு ஒன்று விட்டது/ பட்டு இதழ் விரித்தது/ சிட்டும் திரும்ப வந்து விட்டது. இன்னிலா போஸ் | |
20 | 201 | நட்டு வைத்த பூஞ்செடியில் அழகிய/ மொட்டு ஒன்று மலர்ந்தது / பட்டு இதழ்களிலே தேனருந்த/ பறந்தோடி வந்ததே அழகிய சிட்டு// புவனா சற்குணம் கனடா | |
21 | 749 | மொட்டு விரிந்த அழகிய மலரிலே சிட்டு ஒன்று வந்தமர்ந்து பட்டு இதழ்களின் நடுவே அலகினை நட்டு நறுந்தேனைக் குடித்தது க.மூ.முகம்மது றிஸ்மி, இலங்கை | |
22 | 258 | நட்டு வைத்த குச்சி, கொடியாக/ மொட்டு மலரத் துடிக்கிறது/ ஓய்வுக்காக சிட்டு அமர்ந்திட/ பட்டுப் போகாமல் இருக்க வேண்டினேன்! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
23 | 461 | நட்டு வைத்த பூஞ்செடி ஒன்றில்/ மொட்டு மலர்ந்து விரிந்திட/ சிட்டுக் குருவி தேனருந்த / பட்டு இதழில் பதிந்து அமர்ந்தது./ கோ.அருச்சுணன் | |
24 | 769 | இங்கே பார் ஒரு மொட்டு பறக்கும் சின்னச் சிட்டு செடியோ பச்சைப் பட்டு இதைக் கிட்டு வைத்தான் நட்டு. - கற்பகாம்பாள் கண்ணதாசன் | |
25 | 614 | மொட்டு விரிய காத்திருக்கும் வண்டு/ சிட்டாய் வந்து அமர்ந்தால்/ கால்களில் மகரந்தம் பட்டு/ நட்டு வைத்த வேறொன்றுக்கு மாறுமே/ விஜயலட்சுமி | |
26 | 422 | மொட்டு ஒன்று மலர்ந்து சிரித்தது/ சிட்டு கண்டு மகிழ்ந்தது/ பட்டு மலர்ச் செடியினை/ நட்டு வைத்து வீட்டில் வளர்த்தது./ தங்கவேலு கந்தன் | |
27 | 207 | பூச்செடிகளை நட்டுப் பராமரிக்கும் அழகில்/ மொட்டுகள் மலர்ந்தே மணமாகும்/ பட்டு இதழ்கள் மென்மையாகும்/ சிட்டுக்கள் வந்தே தேனை அருந்தும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
28 | 755 | சிட்டுப் போன்ற பெண் ஒருத்தி பட்டுப் போன்ற கூந்தலிலே மொட்டவிழ்ந்த மலரைச் சூடி நட்டுவனின் தாளத்துக்கு நடனம் ஆடினாளே - ஜெயக்குமார் சுந்தரம் | |
29 | 698 | மொட்டாகி மலராகி பதுமையாய் பூத்தவளே/ மனமும் சிட்டாகி பறக்குதடி/ மெல்லிய கைகள் பட்டே/ நாயகனாய் வருகிறேன் நட்ட வீதியிலே/ தேனி ஆ.சுந்தர் | |
30 | 256 | #மொட்டு மலராகி மணம் பரப்பும்/ #சிட்டு வந்து தேனுண்ணும்/ #பட்டு பூச்சிகளும் நாடிடும்/ #நட்டு வச்சு பூங்காவாய் மாற்றுவோம்/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
31 | 482 | மொட்டு ரோசா அழகாய் இருக்குது/ நட்டு வைத்தேன் வாசலில்/ பட்டுப் போகாமல் நீரூற்று/ சிட்டு வந்திடும் தேனைப் பறிகிடவே. தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
32 | 647 | மொட்டாய் மலர்கையில் மனிதத்தை விதைத்துவிடு // சிட்டாயிருக்கச் சிந்திக்கக் கற்றுக்கொடு // பட்டாயிருக்கப் பண்பைப் புகுத்திவிடு // நல்நாற்றை நானிலம் தனில் நட்டுவிடு // நாக நந்தினி | |
33 | 756 | மொட்டு மலர்ந்து அழகு தரும்// சிட்டு விரைந்து வரும்// 'பட்டு' தேன் சிந்தும்// நட்டு வைத்த மனமோ மகிழும்// *** கன்னிமுத்து வெல்லபதியான் | |
34 | 768 | நட்டு வைத்தேன் நாற்றொன்றை நேற்று// மொட்டு மலர்ந்தது இன்று// பட்டுப் போன்ற பூவழகில்// விட்டுத் தெறித்தன உள்ளத்துத் துயரமெல்லாம் புவனா சந்திரசேகரன் | |
35 | 732 | நட்டு வைத்த செடியிலே ஒய்யாரமாய்/ சிட்டு குருவி ஒன்று/ பட்டு போன்ற இதழ்களிலே/ அமர்ந்து மொட்டை ஆராய்ந்து பார்க்கிறது/ கீதாஞ்சலி | |
36 | 771 | மொட்டு ஒன்று மலர்ந்திடக் கண்டு/ சிட்டுத் தேனையும் சுவைத்திடப் பட்டுப் பாதங்கள் பட்டவுடன் நட்டு வைத்த பூச்செடியும் அசைந்தாடியதே/
மா.சு.திருக்குமரன் | |
37 | 210 | #மொட்டு விரிந்து மணம் வீசிட... பறந்து வந்ததே #சிட்டு.. #பட்டுச் சிறகை விரித்து.. #நட்டு வைத்த மரத்தில் இளைப்பாறியதே... திருமதி சுப்ராணி சிவகுமார்...✍... | |
38 | 250 | #நட்டு வைத்த ரோசா செடியில் #மொட்டு ஒன்று கண்டேனே #சிட்டு ஆக சிறகடித்து #பட்டு ரோசா பறித்தேன் நான் செல்வலஷ்மி | |
39 | 414 | மொட்டு விரிந்தால் மலர் ஆகும்/ சிட்டுப் பறந்து சிறகடிக்கும்/ பட்டு நூல் சேலையாகும்/ நட்ட விதை பயிராகி வளரும்/ சோ.மீனாட்சிசுந்தரம் | |
40 | 463 | மொட்டு முகை ஆகி மலராகும்! தேன் உண்ணும் சிட்டு . பட்டு மென்மை இதழ்கள் ! நட்டு வைத்தால் பலன் தருமே! தஞ்சை அரவிந்தன் | |
41 | 775 | மொட்டு மலந்திடும் நேரமோ அதிகாலை// சிட்டு சிறகடிக்கும் வானிலே// பட்டு போல மின்னிடும்// நட்டு வைத்த நாற்றும் விளையுமே// மல்லிகா சக்திதேவி | |
42 | 238 | தோட்டத்தின் நடுவிலே முல்லையை #நட்டு../ வளர்ந்து பூத்ததே #மொட்டு../ #பட்டான இதழ்களிலே வாசம்../ #சிட்டொன்று வந்துதே சீர்மிகும் வாசத்திற்கு../ #இளந்தை சேது | |
43 | 709 | மொட்டு விரிந்த உன் காதல் // சிட்டெனப் பறக்குது மனம் // பட்டுத்தி தாலிக் கயிறுடன் // பந்தக்கால் நட்டு பரிசம் போடுவேன்// தாழை. இரா. உதயநேசன் | |
44 | பூத்தது சிரித்தது புன்னகை மொட்டு... பூந்தேனைப் புசித்தது சிட்டு... பூவிதழ் தென்றலில் பட்டு... பூக்களின் வாசனை பூமியில் நட்டு ! -ஆ.முருகானந்தம் | ||
45 | 717 | மொட்டு விரிந்த ரோசாப் பூவில் சிட்டுக் குருவிகள் பட்டுச் சிறகுகள் விரித்துப் பறந்தன நட்டு வைத்த நானும் பரவசமானேன் கந்தசாமி நடேசன் | |
46 | 386 | மொட்டு விரிந்தது இதழ்கள் பரப்பி/ சிட்டு விரைந்தது தேனருந்த/ பட்டுத் துகிலென சிறகடித்து/ நட்டுவைத்த செடியென நாணிக் கவிழ்ந்தது/. தென்கரை தாயுமானவன். | |
47 | 743 | மல்லிகை மொட்டு விரிந்து இருக்க/ சிட்டுக் குருவி அமர்ந்து/ அவசரப் பட்டு அசைந்ததால்/ நட்டு வைத்த செடியும் வீணாதே/ இளங்கோ | |
48 | 613 | நட்டு வைத்த ரோஜா செடியில்/ மொட்டு ஒன்று கண்டேன்/ சிட்டுக் குருவி பாதம்/ பட்டு ரோஜா மொட்டு விழுந்தது ஜெயாசந்திரமோகன் | |
49 | 399 | 📣/#மொட்டு மலராகிட தேன் உருவாகிட!..../ 📣/#சிட்டு காத்திருந்து புசித்தது!.../ 📣/#பட்டுச் சிறகால் பறந்தே!.../ 📣/#நட்டு உயர்ந்த கொடிக்கம்பில் அமர்ந்ததே!.../ --சாக்கை.பொன்னழகு. | |
50 | 727 | மொட்டு விட்ட ரோஜா மலர் // சிட்டு பார்க்க பூத்திருக்க // பட்டு வண்ண ரோஜாவே // உன்னை நட்டு வைத்தவர் யாரோ ? // சுசி சுசேனு | |
51 | 421 | மொடடு மலர்ந்து முகம் சிரிக்கும்/ சிட்டுக் குடிக்கும் தேன்/ பட்டுச் சிறகுப் பறவை/ நட்டு வளர்த்த நல்லச் செடியினிலே/ ---செம்போடை சோழன்--- | |
52 | 428 | என்னவள் ஓரு ரோசா மொட்டு பாவையோ பருவச் சிட்டு வதனமோ காஞ்சிப் பட்டு நட்டு வைத்த செடி அவள். சுப்பிரமணியன் அன்புமலர் | |
53 | 348 | மெட்டு கட்டி தொடர்ந்தது மொட்டு // கானம் சேர்த்த சிட்டு // பட்டுப் போல் சிரித்ததே // நட்டு வைத்த செடிகள் குலுங்க // உடுமலை ராமர் | |
54 | 347 | நட்டு வைத்த செடி உயிர்த்தது மொட்டு மலர்ந்து பூவானது பார்த்த சிட்டு பரபரப்பானாள் கண்ணடி பட்டு காயாது காத்திடவே/ வேங்கடலட்சுமி ராமர் | |
55 | 636 | மொட்டாக மலர்ந்து மணம் வீசுபவளே!! சிட்டாகப் பறந்து விடாதே! பட்டு எடுத்து விட்டேன்! நட்டுகிறேன் கொட்டகைக்கால் வீட்டில் இன்று! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
56 | 776 | மொட்டவிழ்ந்து சிரிக்கும் மலரில் . தேன் சிட்டு வந்தமர்ந்து. பட்டுசிறகை விரிக்க வேண்மென நட்டு வைக்கிறேன் நானுமொருசெடி. பார்வதி பாலசுப்ரமணியம் | |
57 | 718 | பட்டு விட்ட மரத்தின் அடியில்,/ நட்டு வைத்த மரத்தில்,/ மொட்டு ஒன்று மலர,/ சிட்டு வந்து தேன் குடித்தது!/ கீழ்கரவை குலசேகரன், இலங்கை | |
58 | 604 | மொட்டென இருந்த என் இதயத்தில்// சிட்டென நுழைந்துச் சிறகடித்து// பட்டென மனதைப் பறித்து // நட்டு வைத்தாள் காதல் செடியை// கவிஞர் கோவை ஆறுமுகம் | |
59 | 747 | நட்டு வைத்த ரோசாச் செடியிலே// மொட்டு விட்டு மலர்ந்திடவே// சிட்டு உறிஞ்சும் தேனினாலே// பட்டு விடுமோப் பாரம் தாங்காமலே// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
60 | 618 | நட்டு வைத்த பூச் செடியிலே/ பட்டுப் போன்ற இதழ்களுடன்/ மொட்டு மலர்வதைக் கண்டு/ சிட்டு ஒன்று சிறகடித்து வந்ததே/ ஔவை. | |
61 | 483 | தீபம் போன்ற அழகு மொட்டு/ துணையின்றித் தவிக்கும் சிட்டு/ ஆவணியில் கல்யாணப் பட்டு/ அழகாய் நடக்கும் முகூர்த்தக்கால் நட்டு/ ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
62 | 737 | நட்டு வைத்த பூஞ் செடியில் நன்றாய் மொட்டுக்கள் மலர்ந்தன பட்டுப் பூ விதழ்களில் சிட்டு வந்து தேன் குடித்தது திருமதி சரோஜனி நடேசன் | |
63 | 409 | செந்நிற மொட்டு மலரும் நேரம்// சிட்டு ஒன்று மரத்தில்// பட்டு மாதிரி பளபளக்கும்// குருவியும் உட்காரநட்டு வைத்தளரே// **** க.சுதர்சனக்குரு. | |
64 | 387 | மொட்டுகளே மனிதனில்லா இடத்தில் மலருங்கள் // சிட்டுகளே கானகம் செல்லுங்கள் // பட்டுப் போன மரமகற்றி// நட்டு வையுங்கள் புதிய மரம்// சென். இலக்குவன்,ஈரோடு | |
65 | 569 | மொட்டுப் போலவே கனவுகளை விரித்துச் // சிட்டு என்று பறந்து // பட்டுக் கொண்ட அனுபவத்தால் // நட்டு எழுந்திடு இலட்சியம் அதனை // செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன் | |
66 | 722 | மொட்டின் இதழ் விரிந்து மணந்திட/ சிட்டுக்களின் மனம் சிலிர்த்திட/ பட்டுத் தெறித்த ஒளியில்/ நட்டு வைத்த செடியின் பசுமை/ சுஜாதா அருணாச்சலம் | |
67 | 312 | மொட்டு மலர்ந்து மலர் ஆகும் சிட்டு தேனைக் குடித்து மகிழும் பட்டுப் போன செடி வாடியதென நட்டு வைத்தேன் வேறொரு விதையை.. பொ.சுப்புலட்சுமி | |
68 | 448 | மொட்டைப் போல மலரக் காத்திருந்து, சிட்டைப் போல சிறகடித்து, பட்டு போன்ற மென்மையான உன்மேல், நட்டு வைத்தேனென் காதலை!! சுமி ஹரி | |
69 | 269 | மொட்டாக அவள் விரித்த பார்வை சிட்டாக மணம் பறக்குதே பட்டு எடுத்து பார்க்கிறாள் நட்டுகால் பந்தலில் அத்தை மகள்..!! சொ.செ.சுப்பிரமணியன் | |
70 | 777 | மல்லிகை மொட்டுக்களோடு என் இதயமடி சிட்டாய்ப் பறந்த மனதால் பட்டுப் போன வாழ்க்கையடி நட்டு வைத்த மரத்தடியில் நானடி ~~~கவிதை காளிதாஸ் | |
71 | 328 | திட்டுச் செடியில் அரும்பிய மொட்டில் / பட்டுச் சிறகு அசைத்து / சிட்டு- பட்டும் படாமல் நட்டநடு வானிலே ஆடியதே நாட்டியம் !! வெ.தண்டபாணி சூலூர் | |
72 | 239 | மொட்டுகள் மலராமலே கருகிடும் சிறார்கள்/ சிட்டுகள் உணவுக்கு காத்தல்/ பட்டு கல்யாணத்திற்கே அடையாளம்/ நட்டு வைக்கும் மரங்களைப் பேணுவோம்/ குமார் | |
73 | 726 | நட்டு வைத்த அலைபேசி கோபுரங்களால்/ பட்டுப் போன்ற பறவையான/ சிட்டுக்குருவி சிறகொடிந்து திரிகிறது/ மொட்டுக்களும் பிறப்பிலே சாம்பல் ஆனதே/ -காளிராஜ்பாலகணேஷ் | |
74 | 782 | இலங்கையில் ஆட்சி அமைத்தது மொட்டு // ஐயின மக்கள் சிட்டு // இலங்கைத் தீவில் அகப்பட்டு // ஒற்றுமை விதையை நட்டு விருட்சமாக்கிடு // இலங்கையன்.ஜனாப் பி.டீ.எம்.இஸ்மாயில். | |
75 | 562 | நட்டு வைத்தேன் பூச்செடி தோட்டத்திலே/ பட்டுப் போகாமலிருக்க நீரிறைத்தேன்/ மொட்டு மலர்ந்தது பூவாய்/ அழகியச்சிட்டு அமர்ந்து தேனை உறிஞ்சியதே/ பா.பத்மநாபன் | |
76 | 221 | மொட்டு மலரொன்று மலர்ந்து சிரித்தது சிட்டுக் குருவியும் சிறகடித்து பட்டுச் சிறகுடன் பளபளத்தது நட்டு வைத்த நாற்றிலே குந்திச்சிரித்தது புஷ்பா கிறிஸ்ரி | |
77 | 373 | மொட்டு விட்டதே பெண்ணும் பூத்திட சிட்டுப் போன்று பறக்கிறதே பட்டுப் போன்ற கன்னங்கள் நட்டு வைத்த காதலோடு வளர்கிறது!! ஜயந்தினி வாகீசன் | |
78 | 652 | மொட்டுகள் திறந்தால் சத்தங்கள் வருமோ?/ சிட்டுகள் பாடலே அருமைதானே!/ பட்டுகள் இல்லா திருமணமோ?/ நட்டுகள் இன்றி இயந்திரங்கள் ஓடிடுமோ?/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
79 | 760 | மொட்டு மலர்ந்து இதழ் விரித்தது ../ சிட்டெனப் பறந்தது நினைவு .../ பட்டுப் பூவாய்ப் பறந்தாள் .... / நட்டு விட்டுப் போனாள் ஆசையை ..../ கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத் | |
80 | 707 | #மொட்டு அவிழும் மாலை நேரம்/ #சிட்டு ஒன்று பாடுதே/ #நட்டு வைத்த மரமும்/ #பட்டு போல நாளும் மிளிருதே/ ✍️பா.ச.கண்ணன் | |
81 | 590 | #நட்டு வைத்த நாற்றங்கால் யாவிலும் #பட்டுத் தெறிக்கும் மழைநீரால் #மொட்டு விட்ட மலர்வனத்திலே சுற்றி வருதே #சிட்டுகள் கூட்டம் *ரேணுகா ஸ்டாலின்* | |
82 | 287 | வண்டின் வருடும் கால்கள் பட்டு வெட்கித்த மொட்டு விரிந்தது கால்களை நட்டு குடித்தது சிட்டெனப் பறந்து வனத்தில் மறைந்தது தண்டபாணி | |
83 | 515 | ஆசையாக நட்டு வைத்த பூச்செடியில்/ அழகான மொட்டு அரும்பிட/ இசையோடு நெருங்கிய சிட்டு/ பட்டு இதழ்களில் முத்தம் பதித்தது/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
84 | 578 | மொட்டும் மலர்ந்து நறுமணம் பரப்பிட// சிட்டும் நாடியே வந்திடும்// பட்டாய் அமர்ந்து தேனருந்தி// நட்டச் செடியில் இனிதே பறந்திடும்// ...கவியாசகன்...!!! | |
85 | 668 | நட்டு வைத்த செடி ஓன்றில்/ மொட்டு இதழ் விரிக்க/ அழகில் மயங்கிய சிட்டு/ பட்டு இறகை விரித்து அமர்ந்ததே/ ஏஞ்சல்சோபிதா | |
86 | 425 | மொட்டு மலர்ந்த அழகான பூவில் சிட்டுக்குருவி பறந்து வந்து பட்டு போன்ற சிறகடித்து நட்டு வைத்த செடியில் இளைப்பாறியதே.... கலாகண்ணன் | |
87 | 654 | வந்தாலொரு தேவதை! நட்டுவைத்த செடியில் பூத்திட்ட மலரெனவே பளபளத்தன அவளின் பட்டுக் கன்னங்கள்! மொட்டவிழ்ந்த. முல்லையென. மோகனமாய் இதழ்விரித்தாள்! பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான் |
போட்டி நிறைவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக