சுருங்கிவரும் விவசாயம் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

சுருங்கிவரும் விவசாயம்

 



சுருங்கி வரும் விவசாயம் 

..........................................


காடும் அழியுதிங்கே

பச்சையம் தெரியுதில்லை/

காட்டுத்தீ பரவுதிங்கே

விலங்கினம் தொலையுதங்கே/ 

சனத்தொகை  பெருகிச்செல்ல

கட்டடம் வானைத்தொடுதே/

சூழலும் வெப்பமாக

மும்மாரி குறையுதிங்கே/

தொழிற்சாலை பெருகுதிங்கே

இயந்திரம் இயங்குதிங்கே/

பொறிமுறை கூடிச்செல்ல

வேலையும் குறையதிங்கே/

இளைஞரின் நாட்டம்யாவும் 

கணினியில் ஆர்வமாக/

நிலங்களும் பாழாய்ப்போக

விவசாயம் சுருங்கிவருதே/

வயலிலே நெல்லுமில்லை

வரப்பிலே நீருமில்லை/

அறுவடை ஒன்றுமில்லை

ஆதாரம் கூடவில்லை

உணவின் தேவைகூட

குளிசையாய் மாறிவருதே/

உணவுக்கே பஞ்சம்வந்து பட்டினிச்சாவும் வருமோ!

இத்தனையும் போக்க

நாங்கள் துணிவுடன்

துணிந்து நிற்போம்.!


இந்திரகுமார் ஜமுனாமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages