மழலை - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மழலை

 



மழலை

....................................


மழலையின் சிரிப்பில் 

மனங்கள் மலரும்/

அம்மா என்கையில் 

ஆயிரம் மலர்வு/

அன்னையும்  அன்பை

பொழிந்தே அணைப்பாள்/

மலடி என்னும் 

பெயரைப் போக்கும்/

கருவாய்த் தரித்து

தாய்மை ஆக்கும்/

மகவாய் மலர்ந்து

மானம் காக்கும்/

தாயின் குருதி 

பாலாய் மாறும்/ 

புதுமை கண்டு 

மனமும் குளிரும்/

பொக்கை வாயின் 

சிரிப்பும் அழகு/

கன்னக் குழியின்

சிரிப்பும் அழகு/

தத்தி நடக்கையில்

தரணியே மகிழும்/

மழலையின் மொழியில்

குவலயம் குளிரும்/

பள்ளி செல்லும் பருவம் 

செழிப்பே/

கற்பனை யாவும் 

ஊற்றாய் எடுக்கும்/

நல்ல நூல்களைக் 

கற்றுத் தெளிவர்/ 

பெரியோர் மதிப்பைப்

பேணிச் செல்வர்/

உயிர்களில் இரக்கம் 

காட்டி  நடப்பர்/

உளத்தில் கருணை

ஒளியை வளர்ப்பர்/

அன்பை ஊட்டி

பண்பை வளர்த்து/

ஏழையின் கண்ணீர்

துடைத்தும் விடுவர்/

கருணையின் 

கடந்தும் செல்வர்/

 

ஜமுனாமலர் இந்திரகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages