16.10.20 - அத்தியாயம் : 129 : புணர்ச்சி விதும்பல் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

16.10.20 - அத்தியாயம் : 129 : புணர்ச்சி விதும்பல்

 



பெ.தி.சுகுமார்.



16.10.20


<><><><><><><><><><><><><>

   " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால்- கற்பியல்

           அதிகாரம் - 129

     " புணர்ச்சி விதும்பல் "

     ●●●●●●●●●●●●

 <><><><><><><><><><><><><>


நினைத்தால் களிப்பும், 

காண்பதில் மகிழ்வும்;

நினைவிரு தன்மையும்,

காமத்திற்கே கள்ளுக்கல்ல!

நினைவில் பனையளவு

காமம் பெருகிணும்;

நினைவில் திணையளவும்,

பிணங்கக் கூடாதே!


கூடாதென்னை விரும்பாது,

விருப்பப்படி செய்தாலும்;

கூடாக்கண்கள் தலைவரைக், 

காணாதமைதி கொள்வதில்லை!

கூடாதிருந்து ஊடிடச்

சென்றேன் தோழி;

கூடினேனானால் நெஞ்சத்து, 

நோக்கமதை மறந்தே!


மறந்திருந்து கண்

மைக்கோல் காணாததுபோல்;

மறந்திருந்தவர் செய்தவறு

எதையும் காணுவதில்லை!

மறக்கிறேன் காண்கையில்,

தலைவரது தவறுகளை!

மறக்கலை காண்கிறேன்,

காணாதபோது தவறுகளையே!


தவறாது இழுவெள்ளம்,

பாய்ந்திடல் போல;

தவறாத தலைவரிடம்,

ஊடல் வீணாகுது!

தவறாக் கள்வனை,

வளராசை இழிகள்ளாய்;

தவராசை உண்டாக்குதுன்,

கள்ளொத்த  உன்மார்பே!


மார்புறும் மலர்காம

மென்மையை அறிந்து;

மார்புறும் காமத்தின்

மென்தன்மை அறிந்தும்;

மார்புறும் காமமதன் ,

பயனடைவார் சிலராகி;

மார்புற்றுத் தருமின்பம்,

சிலர்தான் அடைவாரே!


அடைந்தான், கண்ணது

பார்வையில் பிணக்கம்!

அடைந்தாள், தழுவுதலை,

விரும்பியும் ஆனாலுமே;

அடைந்தாள் பிணக்கை,

மறந்தவளும் விரும்பி;

அடைந்தாள் என்னைவிட,

விரைந்து கூடிவிட்டாளே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages