பெ.தி.சுகுமார்.
18.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 131
" புலவி "
●●●●●
<><><><><><><><><><><><><>
தலைவர் வந்தால்,
விரைந்து தழுவாமல்;
தலைவரிடம் பிணங்கி
இருந்து சற்று;
தலைவர் அடையும்,
துன்பமதும் காண்போம்!
தலைவரிடம் ஊடலும்,
அளவோடு காணணுமே!
காணும் உணவில் ,
அமையும் உப்பாய்;
காணும் அளவாய்,
ஊடலும் மிகுந்தும்;
காணின் உப்பால்,
சுவையது கெட்டிடும்;
காணும் பிணக்கம் ,
நீங்காத் துன்பமே!
துன்புற்று ஊடலைப்
பிணக்கம் பின்னிடும்;
துன்புற்ற பிணக்கத்தை,
அன்பு காத்திடாது;
துன்புற்று வாடிய,
பூங்கொடி அறுப்பதாகுது!
துன்புறுவர் மலர்
மங்கை ஊடலாலே!
ஊடலது தலைவியிடம்,
ஆடவர்க்குத் தனியழகு!
ஊடலில்லாப் பெரும்பிணக்கு,
பழுத்திட்ட பழம்போன்றது!
ஊடலில்லாச் சிறுபிணக்கு,
சிறுகாய் போன்றது!
ஊடலது அளவோடு,
பக்குவமாய் வேண்டுமே!
வேண்டா ஐய்யத்தால்,
புணருங்கால் துன்பமென;
வேண்டா ஐய்யத்தால்,
காதலருக்குத் துன்பம்!
வேண்டிடும் அருங்குணத்தால்,
தன் குற்றம்;
வேண்டியதைக் கொள்ளாதவரை,
வருந்திப் பயனில்லையே!
பயனுறும் நீரும்,
நிழலுமாய்க் கூடலுக்குப்;
பயனுறும் ஊடலும்,
அன்புடையாருக்குத் தேவை!
பயனுறும் ஊடலும்,
நீக்கி மகிழாது;
பயனுற்றுக் கூடுநினைவு,
நெஞ்சத்து ஆசையாகுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக